“காங்கிரஸ் ஒரு முஸ்லீம் கட்சி என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்..!”
– “நடுவில் நாங்கள் ‘தடம் மாறிப்’ போய் விட்டோம்; ஆனால் இப்போது அதை மாற்றிக் கொண்டோம்..!”
– “நான் இந்து கோவில்களுக்கு போனதையெல்லாம் நீங்கள் தயவுசெய்து பெரிதுபடுத்தாதீர்கள்..!
இவை யார் பேசியவை..? முஸ்லீம் அறிவாளிகள் (Muslim Intellectuals) கூட்டிய ‘ரகசிய’ கூட்டம் ஒனறில் ராகுல் பேசியவை அவை..! ஆம்..! காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்திதான் அப்படி பேசியிருக்கிறார்..!
ஒரு உருது நாளிதழ் மேற்கண்ட செய்தியை வெளியிட, அதை நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டு, காங்கிரஸ் அந்த செய்தி உண்மையா பொய்யா என்று விளக்க வேண்டும் என்றார்..!
காங்கிரஸ் விளக்கமளித்தது. என்ன விளக்கம் தெரியுமா..?
– “ஏ பிஜேபியே.. ரஃபேல் டீல் ஒப்பந்த விஷயம் என்ன..?”
– “தேர்தல் வந்து விட்டதால் பிஜேபி மதவாதத்தை தூண்டி விடுகிறது..”
அந்த செய்தி பொய் என்று காங்கிரஸ் சொல்லவில்லை..! அந்த நாளிதழின் மேல் வழக்கு போடுவதாகவும் சொல்லவில்லை..! எனில் அந்த செய்தி உண்மைதான்..!
ஒரு இந்து, இந்துக்களின் கூட்டத்திடம் சென்று ‘ நான் ஒரு இந்து..” என்று சொல்வதை நாம் ‘மதவாதம்’ என்கிறோம்..!
ஒருவன், முஸ்லீம்களீடம் சென்று “நான் முஸ்லீம்” என்றும், கிறிஸ்துவர்களிடம் சென்று ” நான் கிறிஸ்துவன்” என்றும், தேர்தல் சமயத்தில் மட்டும் இந்துக்களிடம் சென்று ” நான் இந்து” என்று சொல்வானாயின் , நாம் அதுதான் செக்குலரிசம் என்றா சொல்ல வேண்டும்..?
நான் சொல்கிறேன் : அது அயோக்கியத்தனம்..! இப்படி ‘ரகசிய’ கூட்டம் போட்டு, இந்துக்களை ஒழிக்க நினைக்கும் ஒரு கட்சியும், வேறொரு மதத்தின் ‘அறிவாளிகளும்’ செய்வது ‘பயங்கர’ மதவாதம் அன்றி வேறென்ன..? இதைத்தான் காங்கிரசும், திமுக போன்ற கட்சிகளும் பல காலமாய் இங்கே செய்து வருகின்றன…! ஆனால் மதவாதிகள் என்று பிஜேயினரைக் காட்டி நம்மை ஏமாற்றுகின்றனர்..!
மற்ற மதத்தினரை இந்துக்களிடம் இருந்து பிரித்து குளிர்காயும் இந்த அயோக்கியத்தனத்தைப் பார்த்துக் கொண்டு, இந்துக்கள் எவ்வளவு காலம் சும்மா இருப்பார்கள்..? Consolidate ஆக மாட்டார்களா..? அது யாருக்கு ஆபத்து..? இதை யோசிக்காமல், ராகுல் என்ற அறிவு வளர்ச்சி அற்ற குழந்தையை வரவழைத்து, இப்படி பேச வைத்து, அதை தன் நாளிதழில் போடுபவர்கள், முஸ்லீம்களில் ‘அறிவாளிகளா’ இல்லை ‘முட்டாள்களா’..?
கவனியுங்கள்: முஸ்லீம்களின் ‘அறிவாளிகள்’ தம் மதத்துக்காக இப்படி ஒரு காரியத்தை ‘ரகசியமாய்’ செய்கிறார்கள்…! ஆனால், இந்து ‘அறிவாளிகள்’ என்ன செய்கிறார்கள்..? பப்ளிக்காய் ரோட்டில் இறங்கி, மதவாதிகள் என்று பிஜேபியை குற்றம் சாற்றுகிறார்கள்.


