ஜிஎஸ்டி வரிவருவாயில் 90%ஐ உடனே வழங்க ஜெயக்குமார் வலியுறுத்தல்

Published:

gst - 2026

ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவை வரியில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் 90 சதவீதத்தை வரும் 31 ஆம் தேதிக்குள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

இன்று தில்லியில் நடைபெற்ற மத்திய 28ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார், வரும் 31ஆம் தேதிக்குள் 90% ஜிஎஸ்டி வரிவருவாயை வழங்குமாறு கோரினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்வதற்கான தேசிய அளவிலான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் பிராந்திய அமர்வுகளில் ஒன்றை சென்னையில் அமைக்க வலியுறுத்தியதன் அடிப்படையில், அது சென்னையில் அமைக்கப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img