கறுப்பு காகிதத்தை ரூ.2000 நோட்டாக மாறும்! நூதன மோசடி.. சிக்கிய நபர்!

black-paper
black-paper

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு உசிலம்பட்டிச் சாலையில், சார்பு ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, வத்தலக்குண்டு நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு காரை மறித்து சோதனை செய்ததில், காரில், கட்டுக்கட்டாக கறுப்புக் காகிதங்கள் இருந்திருக்கின்றன. காரை ஓட்டிவந்த நபரை விசாரித்ததில், அவர், முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே, சந்தேகமடைந்த போலீஸார், அந்த நபரை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

black-paper-mosadi-1
black-paper-mosadi-1

விசாரணையில், அந்த நபர் பெயர் நல்லமலை (வயது48) என்பதும், உசிலம்பட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், `நான் வைத்திருக்கும் கறுப்புக் காகிதத்தை, சிறப்பு ஃபார்முலா மூலம் தயாரிக்கப்பட்ட திரவத்தில் போட்டால், அந்தக் கறுப்புக் காகிதம், ரூ.2,000 நோட்டாக மாறும்’ எனக் கூறியிருக்கிறார் நல்லமலை.

nallamalai-1
nallamalai-1

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், நல்லமலையிடம் மேலும் விசாரித்திருக்கிறார்கள். `என்னிடம் வரும் நபர்களிடம், நான் ஏற்கெனவே கறுப்பு மை தடவி வைத்திருக்கும் சில ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை அவர்கள் முன், திரவத்தில் போட்டுக் காண்பிப்பேன். அந்த நோட்டுகளின் கறுப்பு மை கரைந்து பளிச்சிடும். அதைவைத்தே, வெற்று கறுப்புக் காகிதத்தை அந்த நபர்களிடம் விற்றுவிடுவேன்’ எனக் கூறியிருக்கிறார்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

யாரையோ ஏமாற்ற காரில் சென்றுகொண்டிருந்தார் நல்லமலை. வழியில் எங்களிடம் மாட்டிக்கொண்டார். அவரின் கறுப்புக் காகிதம், திரவம், கார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. நல்லமலையைக் கைது செய்திருக்கிறோம். அவர் மீது தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தது மற்றும் பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, நல்லமலை பற்றிய முழுத் தகவல்களையும் விசாரித்துவருகிறோம். இது போன்ற மோசடி நபர்களிடம் சிக்கி மக்கள் தங்கள் பணத்தை இழக்க வேண்டாம்” என்றனர் வத்தலக்குண்டு போலீஸார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories