மோடி பேச்சை தப்பா போட்ட தமிழிசை… லேடி டாக்டர் சும்மா இருங்க ப்ளீஸ்

Published:

06 June20 Modi - 2026

ஏற்கனவே தமிழகத்தில் இருக்கும் வீணாய்ப் போனவங்களுக்கு ஹிந்தியும் புரியாது, வடக்க இருக்கறவன் என்ன சொல்லுறான்னும் தெரியாது. நல்லா சொல்லானும் திரிச்சிப் பேசுறதுக்குன்னு நாலு நாதாரிப் பயலுஹ வேலை வெட்டி இல்லாம பேஸ்புக் திண்ணைய தேய்ச்சிக்கிட்டு ஒக்காந்திருக்கானுவ… மோடி பேசியதின் அர்த்தம் புரிந்தும், புரியாம 15 லட்சம் கொடுன்னு கேட்டு தொல்லைப் படுத்திட்டிருக்கானுங்க… இந்த லட்சணத்துல மோடி என்ன சொல்றாருன்னே புரிஞ்சிக்காம, இந்த லேடி டாக்டரு வேற  பிரச்னைய பெருசாக்கிட்டிருக்காங்க… யம்மா உங்க மூதாதையர் காங்கிரஸ்காரங்க செய்யிறத நீங்க பிஜேபில இருந்துட்டு செய்துவர்றிங்களொன்னு ஒரு டவுட்டு…

மோடி சொன்னது – 60 ஆண்டுகள் கார்பரேட்டுகளுக்குக் கொடுத்த கடன் 18 லட்சம் கோடி – 2008 முதல் 2014 வரை ஆறு ஆண்டுகளில் மட்டும் 52 லட்சம் கோடிகள் காங்கிரஸ் அரசால் கார்பரேட்டுகளுக்கு முறைகேடாக வாறி இறைக்கப் பட்டுள்ளது அப்படின்னு பேசினார் – அதை சரியாக புரிந்து கொள்ளாமல் – நமது டாக்டர் அக்காவின் பதிவைப் பாருங்கள் -விவசாயிகளுக்கு 52 லட்சம் கோடி கடன் கொடுத்தாக தனது முகநூல் பக்கத்தில் போட்டிருக்கிறார் –

60 ஆண்டுகளில் 18 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் தரப்பட்டது. எங்கள் ஆட்சியில் 52 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் கொடுக்கப்பட்டுள்ளது பாஜக ஆட்சியில் வரி விதிப்பு முறை சீர் செய்யப்பட்டு மக்கள் கட்டும் வரி அனைத்தும் கஜானாவை சரியாக சென்றடைகிறது. நம் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது… என்கிறார். இனி இங்கே இருக்கும் நல்லவன்கள் என்னென்ன கேள்விகள் கேட்பாய்ங்களோ -பயமாக இருக்கிறது.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

– இப்படி பதிவிட்டிருக்கிறார்கள் பாஜக., ஆதரவாளர்கள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில்.!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img