ஏழைக் குழந்தைகளை பாதிரி ஒருவர் கற்பழித்தால்… பாவ மன்னிப்பா ?

Published:

siruganur school father sex rocket - 2026

தமிழக அரசியல் கட்சிகளே பெண்ணுரிமை போராளிகளே பாதிரி ஏழை குழந்தைகளை கற்பழித்தால் பாவ மன்னிப்பா ?

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் அந்த இளம் பெண்களே தனியாக ஒதுக்குபுறமான இடத்திற்கு போனது முட்டாள்தனம் என்றாலும் கூட இச்சம்பவம் கொடூரமானது மன்னிக்க முடியாதது அதில் ஈடுபட்ட கொடூரர்கள் மிக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் மறுப்பதற்கில்லை!

அதில் திமுக அதிமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக புகைப்படத்துடன் போட்டி போட்டு சமூக வலைதளங்கள் உரையாடுகிறது!

அரசியல் கட்சி எல்லாம் எதிர்ப்பு; எல்லாவற்றுக்கும் மேலாக திமுக கனிமொழி ஆர்ப்பாட்டம்!

எல்லாம் சரி கடந்த வாரம் இதே தமிழகத்தில் திருச்சியில் லாத்வியான் எவாஞ்சலின் லூத்ரன் சர்ச் பள்ளி விடுதி மாணவிகள் அப்பாவி சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட செய்தி பாலிமர் தொலைக்காட்சியில் வந்ததே அதற்கு திமுக கனிமொழி போராடவில்லையே! செய்தி ஊடகங்கள் இது போல் கொக்கரிக்கவில்லையே!

சி.பி.ஐ விசாரணை இல்லையே! சமூக ஊடக போராளிகள் கண்டுகொள்ளவில்லையே ஏன் ? எந்த அரசியல் கட்சியும் வாய் திறக்கவில்லையே!

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கும் கூட சிறுபாண்மை சலுகையோ ?

– கா.குற்றாலநாதன் (நெல்லை)

Related articles

Recent articles

spot_img