பொள்ளாச்சி பாலியல் வன்முறைகளை வளர்ப்பவர்கள் யார்?!

pollachi issue - 2026

பொள்ளாச்சி… பாலியல்… வன்முறையில் ஈடுபட்டவர்களை தூக்கில் போடணும்! எல்லாரும் குரல் கொடுக்கணும்!

அட கொஞ்சம் இருங்க.. இன்னும் அவர்களின் சாதி, பின்னணி, அரசியல் எல்லாம் பார்த்துட்டு… பிறகு நம்ம போராட்டத்தை மாத்தணும்!

  • இதுதான் தமிழகத்தின் இன்றைய அரசியல் அவல நிலை!

கடந்த வருடம் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி இன்று தியாகியாக போற்றப்படுகிறார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவருக்கு ஜாமீன் வழங்காததைக் கடுமையாக கண்டித்து பேசினார். பிறகு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது.

பொது இடங்களில் முத்தம் கொடுத்துக் கொள்வது எங்கள் உரிமை என்று சொல்லி முத்த போராட்டங்கள் அரங்கேறின. இதை பெருமையாக மாணவர்களும் மாணவிகளும் வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

பெண்களுக்கு தாலி அவசியமா..? எனக் கேட்டு கணவன் மனைவி உறவையே கேலிக்கு உரியதாக மாற்றி ஒரு நிகழ்ச்சி! பத்திரிக்கை சுதந்திம், கருத்து சுதந்திரம், முற்போக்கு சிந்தனை எனும் பெயரிலே ஆதரவு கொடுத்தது.

தாய் தந்தையை சிறைக்கு அனுப்பி விட்டு  சுய மரியாதை திருமணம் என்ற பெயரிலே ஈவேரா நாயக்கன் சிலை முன்பாக ஒரு கூத்து. டீ-ஷர்ட் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு பறை அடித்து ஆட்டம் ஆடி ஆணும் பெண்ணும் மாலை மாற்றுகின்றனர். இதற்கும் வாழ்த்துகள் குவிகின்றன. இனி இது போன்று தமிழர் முறை திருமணம் என்று சொல்லிக் கொள்ளும் போது… பறை அடிப்பதுடன் கேவிக் கேவி அழுது ஒப்பாரிப் பாடல் பாடல், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அப்போது மோதிரம் மாற்றிக் கொள்ளும் பழக்கங்களும் இனி வரலாம்!

பெண்உரிமை என்ற பெயரிலே குஷ்பு போன்ற சிலர் ஆணும் பெண்ணும் விருப்பப் பட்டால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று பேசுகிறார்கள் இதுவும் பாராட்டப் படுகிறது.

ஈவேரா நாயக்கன் உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு என்னையே கொடுத்திருப்பேன் என ஒரு பெண் பேசுகிறார்; அவருக்கு பெயர் பெண் போராளி.!

பண்பாடு கலாசாரத்தோடு கூடிய கட்டுப்பாடுகள், பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக இருந்தன.  இதை மாற்றிட பண்பாட்டு விரோதிகள் போட்ட திட்டங்கள் இன்று வெற்றியடைந்து வருகிறது.

இன்று விரோதிகளாகப் பார்க்கப்படும் அந்த பொள்ளாச்சி மிருகங்கள் நாளை நிர்மலா தேவி போல தியாகியாகவும் பார்க்கப்படலாம். அவனுங்களுக்கு தண்டனை வழங்கப்படும் போது மனித உரிமை என்ற பெயரிலே இதே முற்போக்கு மூதேவிகள் குரல் கொடுக்க நிச்சயம் முன்வருவார்கள். போராட்டங்கள் நடக்கும்! கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களும் கூச்சல்களும்… அட அவ்வளவு ஏன்..? நீதிமன்றத்தில் வழக்குகள் போட நான் நீ என்று முண்டியடிப்பார்கள்! நீதிபதிகள் கறுப்புக் கவுன்களால் அல்ல… கறுப்புக் கொடிகளால் மிரட்டப் படுவார்கள்!

ஆமாம்.. புரசைவாக்கத்தில் வாய்பேச இயலாத ஓர் அப்பாவிச் சிறுமி ஒரு அப்பார்ட்மெண்ட் லிப்ட் ஆபரேட்டர் முதற்கொண்டு காவலாளிகள் வரை எல்லோரிடமும் மாட்டிக் கொண்டாளே..! அன்று இதே போராளிகள் அந்தப் பெண் வடவர் என்றும், மாட்டிக் சீரழித்தவர்கள் தமிழர் என்றும் கூறி அந்தக் கயவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமும் கொள்கை முழக்கமும் எழுப்பினரே…!

அதனால்…

நமது வாழ்க்கை முறை உலகத்திலேயே உயர்வானது, குடும்ப வாழ்க்கை அதன் உறவுகள் வேறு எந்த நாட்டிலும் இல்லாத பொக்கிஷம். இதை உடைக்க நினைக்கும் கலாச்சார பண்பாட்டு விரோதிகளையும் நம் குழந்தைகளுக்கு அடையாளம் காட்டி.. இப்போதிருந்தே அவர்களிடம் நம் குழந்தைகளை அன்னியப் படுத்தி வளர்க்க வேண்டும்! பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories