திருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு!

thiruvanika 4
thiruvanika 4

திருவானைக்காவல் கோயில்களில் உள்ள சிற்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக சிற்பங்களை ‘டிரோன் கேமரா’ மூலம் ஒளிப்பதிவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

‘திருவனைக்காவல்’, ‘திருஆனைக்காவல்’ என்றெல்லாம் அழைக்கப்படும் ‘திருவானைக்கோவில்’, திருச்சியின் காவிரிக்கரையோரம் அமைந்துள்ளது.

இதனை ‘திருவானைக்காவல்’ என்றும் சிலர் ‘திருவானைக்கா’ என்றும் அழைக்கின்றனர். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், தாயுமானவர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை ‘பாடல்கள் பல பெற்ற தலம்’ என்பார்கள்.

இக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ‘நீருக்கு’ உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60-வது திருத்தலம் ஆகும்.

தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் உள்ள சொத்துகள் பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயில்களின் சொத்துகள் மீட்பது குறித்து தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வரப்படுகிறது.

கோயிலுக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன, எங்கெல்லாம் சொத்துகள் உள்ளன, அதன் தற்போதைய மதிப்பு என்ன, என்று தமிழகம் முழுவதும் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

ALSO READ:  தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் நிர்வாக அலுவலர்கள் பணிகள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும்;

திருக்கோயில்களில் நடைமுறையில் உள்ள பதிவேடுகளை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவு செய்யவேண்டும்;

திருக்கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்கள் விவரங்கள் பொதுமக்கள் இணையதளத்தில் பார்வையிடும் வகையில் ‘புவிசார் குறியீடு’ செய்து இணையத்தில் வெளியிட வேண்டும்;

கோயில்களின் பெயரில் உள்ள அசையும், அசையாச் சொத்துகளின் உரிமை மற்றும் ஆவணங்களையும், பிரதான சின்னங்களையும் சிற்பங்களையும் ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

அதன் பெயரில், பழைமை வாய்ந்த ‘திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி கோவில்’ வளாகம் மற்றும் கற்தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை டிரோன் கேமரா மூலமாக வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியினை நேற்றிலிருந்து தொடங்கியுள்ளனர்.

இப்பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைந்துவிடும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories