December 6, 2025, 12:03 AM
26 C
Chennai

உழவாரப்பணிக்கு இணையத்தில் பதிவு: இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு!

uzhavara pani - 2025

பாழடைந்துள்ள கோவில்களை மறுசீரமைக்கும் பணியில் இந்துசமய அறநிலையத்துறை இறங்கியுள்ளது.

அது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ளார். இந்து சமய அறநிலைய துறையை நல்ல நிலையில் கொண்டு செல்லவும், சேதமடைந்துள்ள கோவில்களுக்கு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தவும் மற்றும் கோவில்களுக்கு தேவையான பார்க்கிங் வசதிகள், தெப்பக்குளம், நந்தவனம், போன்றவற்றை சீரமைக்கும் பணிகளிலும் அறநிலையத்துறை மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது .

அதன் ஒரு பகுதியாக தற்போது 47 திருக்கோவில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள பக்தர்கள் எளிமையாக கோயில் நிர்வாகத்தை அணுகவும் காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும், இணையதளம் முன்பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் உழவார பணி பணி செய்ய இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை

இணையவழி மூலம் பதிவு செய்யும் வசதி www.hrce.tn.gov.in சனி மற்றும் ஞாயிறு
கிழமைகளில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் திருக்கோயில்களில் உழவாரப்பணி செய்ய விருப்பம் உள்ளவர்கள் எளிய முறையில் தங்களுக்கு உகந்த தேதி, நேரம், செய்யும் பணியினைத் தாங்களே தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
https://hrce.tn.gov.inக்குள்

இ சேவைகள் பகுதி
அதில் உழவாரப்பணி
திருக்கோயில் பட்டியலில் விருப்பமான திருக்கோயில்
தங்களுக்கு உகந்த தேதியினை அட்டவணையிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.

5.நேரம், உழவாரப்பணி மற்றும் முன் பதிவு செய்யப்படாத சீட்டினை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்

பணி செய்ய விரும்புபவர்களின் தகவல்கள் பூர்த்தி செய்யவேண்டும்.
உழவாரப்பணி செய்யும் தேதி நேரம் / மாநிலம், மாவட்டம், பெயர், அடையாள வகை, சான்று எண், பாலினம், வயது’, பழைய கதவு எண்புதிய கதவு எண் /இருப்பிடம், கிராமம் பெயர், மாநகரம் / நகரம் /, அஞ்சல் குறியீடு, மின்னஞ்சல், கைபேசி எண், பணிவகைத் தேர்வு, அங்கீகார மதிப்பு’ , விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்படுகிறேன் என சமர்ப்பிக்க வேண்டும்.

இதனை செய்து முடித்தவுடன் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு கடவுச்சொல் வரும். அதை உள்ளீடு செய்ய அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மின்னஞ்சலுக்கும் அனுமதிச் சீட்டின் பிரதி ஒன்று அனுப்பப்படும்.

முன்பதிவு செய்யப்பட்ட உழவாரப் பணியினை உரிய தேதியில் செல்ல இயலாத நிலை ஏற்பட்டால் இ-சேவை பகுதிக்கு சென்று பதிவு செய்தவர்களே அனுமதியினை ரத்துசெய்து கொள்ளவும் முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories