விருதுநகரில் ஒரே நாளில் 12 இடங்களில் திருட்டு சம்பவம்-பொது மக்கள் அதிர்ச்சி..

images 56 1 - 2026


விருதுநகர் மாவட்டத் தலைநகரான விருதுநகரில் சமீப காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விருதுநகர் பகுதியில் கடந்த நவ.,8 அன்று அதிகாலை அடுத்தடுத்து 12 இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில், காமராஜர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் விறகு கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த பணப் பெட்டியைத் திறந்து அதில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். மேலும், கட்டையாபுரம் பகுதியில் வீட்டின் முன்பு இருந்து ஒருவரின் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றனர்.
மேலும், பாத்திமாநகர் பிரதான சாலையில் உள்ள தெருக்களுக்குள் உள்ளே சென்று ஒருவரின் வீட்டு பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்றுள்ளார். அங்கு ஏதும் இல்லாத காரணத்தால், அருகில் உள்ள ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளான்.
பாத்திமாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர் உள்ளே செல்லும் காட்சி அருகில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் எல்.முருகனின் வீட்டு கண்காணிப்புக் கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
அந்த நபர் எவ்வித பதட்டமும் இன்றி கையில் ஒரு டார்ச் லைட் மற்றும் ஒரு இரும்பு கம்பியுடன் வந்து சாதுர்யமாக பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே செல்கிறான்.
இதுகுறித்து சிபிஎம் நகர் செயலாளர் எல்.முருகன் கூறுகையில், பொதுவாக கடந்த காலங்களில் காவல்துறையினர் இரவு நேரங்களில் அதிக அளவில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள். சமீப காலமாக காவல்துறையினரின் இரவு நேர ரோந்துப் பணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பொது மக்களே தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகத்தான், திருடர்கள் இரவு நேரத்தில் எவ்வித அச்சமும் இன்றி தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கூறுகின்றனர். விருதுநகரில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 12 இடங்களில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளதால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தாங்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்வதாக உணரும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட காவல்துறை, விருதுநகர் நகர் பகுதியில் ரோந்துப் பணிகளை காவல்துறையினர் மூலம் தீவிரப்படுத்த வேண்டும். பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்கிடும் வகையில் தங்களது செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும். மேற்படி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள அனைவரையும் விரைவில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

images 61 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories