விருதுநகரில் ஒரே நாளில் 12 இடங்களில் திருட்டு சம்பவம்-பொது மக்கள் அதிர்ச்சி..

images 56 1 - 2026


விருதுநகர் மாவட்டத் தலைநகரான விருதுநகரில் சமீப காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விருதுநகர் பகுதியில் கடந்த நவ.,8 அன்று அதிகாலை அடுத்தடுத்து 12 இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில், காமராஜர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் விறகு கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த பணப் பெட்டியைத் திறந்து அதில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். மேலும், கட்டையாபுரம் பகுதியில் வீட்டின் முன்பு இருந்து ஒருவரின் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றனர்.
மேலும், பாத்திமாநகர் பிரதான சாலையில் உள்ள தெருக்களுக்குள் உள்ளே சென்று ஒருவரின் வீட்டு பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்றுள்ளார். அங்கு ஏதும் இல்லாத காரணத்தால், அருகில் உள்ள ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளான்.
பாத்திமாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர் உள்ளே செல்லும் காட்சி அருகில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் எல்.முருகனின் வீட்டு கண்காணிப்புக் கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
அந்த நபர் எவ்வித பதட்டமும் இன்றி கையில் ஒரு டார்ச் லைட் மற்றும் ஒரு இரும்பு கம்பியுடன் வந்து சாதுர்யமாக பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே செல்கிறான்.
இதுகுறித்து சிபிஎம் நகர் செயலாளர் எல்.முருகன் கூறுகையில், பொதுவாக கடந்த காலங்களில் காவல்துறையினர் இரவு நேரங்களில் அதிக அளவில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள். சமீப காலமாக காவல்துறையினரின் இரவு நேர ரோந்துப் பணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பொது மக்களே தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகத்தான், திருடர்கள் இரவு நேரத்தில் எவ்வித அச்சமும் இன்றி தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கூறுகின்றனர். விருதுநகரில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 12 இடங்களில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளதால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தாங்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்வதாக உணரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

எனவே, மாவட்ட காவல்துறை, விருதுநகர் நகர் பகுதியில் ரோந்துப் பணிகளை காவல்துறையினர் மூலம் தீவிரப்படுத்த வேண்டும். பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்கிடும் வகையில் தங்களது செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும். மேற்படி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள அனைவரையும் விரைவில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

images 61 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories