சென்னை: பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 74 பேர் பிட் அடித்து மாட்டியுள்ளனர். இது, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட தேர்வர்களின் எண்ணிக்கை விவரம் குறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. மார்ச் / ஏப்ரல் 2015-க்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் இன்று (25.03.2015) காலை 09.15 மணிக்கு துவங்கி பிற்பகல் 12.00 மணி வரை நல்ல முறையில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி நடைபெற்று முடிந்தது. இன்று நடைபெற்ற ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட தேர்வர்களின் எண்ணிக்கை கிருஷ்ணகிரி 1 பள்ளித் தேர்வர், மதுரை 5 தனித் தேர்வர்கள், அரியலூர் 4 தனித் தேர்வர்கள் கடலூர் 43 தனித் தேர்வர்கள் , 1 பள்ளித் தேர்வர் திருவண்ணாமலை 8 தனித் தேர்வர்கள், 1 பள்ளித் தேர்வர் வேலூர் 9 தனித் தேர்வர்கள், 1 பள்ளித் தேர்வர் சென்னை 1 தனித்தேர்வர் என மொத்தம் 74 தேர்வர்கள் (4 பள்ளித் தேர்வர்கள் ; 70 தனித்தேர்வர்கள்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 74 பேர் பிட் அடித்து மாட்டியுள்ளனர்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

