வீட்டிற்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியை! குவியும் பாராட்டுக்கள்!

teacher-3
teacher-3

கொரோனா காரணமாக பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு அதற்கு வழியில்லை.

அதே நேரத்தில் அரசு சார்பில் மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சியில் தினமும் ஆசிரியர்களை வைத்து வகுப்பு வாரியாக பாடங்களை நடத்தி வருகிறது.

ஆனால் கிராமங்களில் கல்வி தொலைக்காட்சியை பார்த்து மாணவர்களை படிக்க வைக்க பெற்றோர் சிரமப்படுகின்றனர். பெற்றோர் அருகில் இருக்கும் வரை குழந்தைகள் கல்வி தொலைக்காட்சியை பார்க்கின்றனர்.

கொஞ்சம் நகர்ந்தால் வேறு சேனலை மாற்றி விடுவர். இதனால் கல்வி மேல் உள்ள ஆர்வம் குறைந்து வருகிறது. படிப்பும் மறந்து வருகிறது.

இந்நிலையில் ‘ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி’ என்பதற்கேற்ப சிவகாசி ஆசாரி காலனி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை சுப்புலட்சுமி, மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடம் நடத்துகிறார்.

கல்வி தொலைக்காட்சியையும் பார்க்க வைக்கிறார். அதில் எழும் சந்தேகங்களையும் விளக்குகிறார். மேலும் இதோடு எழுத்து, புத்தக வாசிப்பு பயிற்சியும் அளிக்கிறார்.

ஆசிரியரே வீட்டிற்கு நேரில் வந்து பாடம் நடத்துவதால் மாணவர்களும் ஆர்வமுடன் படிக்கின்றனர்.

ஆசிரியை சுப்புலட்சுமி கூறுகையில்: கொரோனா தொற்றால் பள்ளிகள் இயங்கவில்லை. மாணவர்கள் படிப்பினை மறந்து வருகின்றனர். அரசு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்களை நடத்தி வருகிறது. மாணவர்கள் அதைபயன்படுத்தி படிக்க வைப்பது சிரமமே. சில இடங்களில் பெற்றோரும் கண்டுகொள்வதில்லை.

தங்களது வேலைக்கு உதவியாக வைத்து கொள்கின்றனர். நான் வேலை பார்க்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீட்டிற்கே சென்றே பாடம் நடத்துகிறேன், என்றார்.

ஆசிரியையின் இந்த செயல் பெற்றோர் மாணவர்களிடையே பாராட்டுகளையும் வரவேற்பினையும் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories