வீட்டிற்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியை! குவியும் பாராட்டுக்கள்!

teacher-3
teacher-3

கொரோனா காரணமாக பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு அதற்கு வழியில்லை.

அதே நேரத்தில் அரசு சார்பில் மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சியில் தினமும் ஆசிரியர்களை வைத்து வகுப்பு வாரியாக பாடங்களை நடத்தி வருகிறது.

ஆனால் கிராமங்களில் கல்வி தொலைக்காட்சியை பார்த்து மாணவர்களை படிக்க வைக்க பெற்றோர் சிரமப்படுகின்றனர். பெற்றோர் அருகில் இருக்கும் வரை குழந்தைகள் கல்வி தொலைக்காட்சியை பார்க்கின்றனர்.

கொஞ்சம் நகர்ந்தால் வேறு சேனலை மாற்றி விடுவர். இதனால் கல்வி மேல் உள்ள ஆர்வம் குறைந்து வருகிறது. படிப்பும் மறந்து வருகிறது.

இந்நிலையில் ‘ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி’ என்பதற்கேற்ப சிவகாசி ஆசாரி காலனி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை சுப்புலட்சுமி, மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடம் நடத்துகிறார்.

கல்வி தொலைக்காட்சியையும் பார்க்க வைக்கிறார். அதில் எழும் சந்தேகங்களையும் விளக்குகிறார். மேலும் இதோடு எழுத்து, புத்தக வாசிப்பு பயிற்சியும் அளிக்கிறார்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

ஆசிரியரே வீட்டிற்கு நேரில் வந்து பாடம் நடத்துவதால் மாணவர்களும் ஆர்வமுடன் படிக்கின்றனர்.

ஆசிரியை சுப்புலட்சுமி கூறுகையில்: கொரோனா தொற்றால் பள்ளிகள் இயங்கவில்லை. மாணவர்கள் படிப்பினை மறந்து வருகின்றனர். அரசு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்களை நடத்தி வருகிறது. மாணவர்கள் அதைபயன்படுத்தி படிக்க வைப்பது சிரமமே. சில இடங்களில் பெற்றோரும் கண்டுகொள்வதில்லை.

தங்களது வேலைக்கு உதவியாக வைத்து கொள்கின்றனர். நான் வேலை பார்க்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீட்டிற்கே சென்றே பாடம் நடத்துகிறேன், என்றார்.

ஆசிரியையின் இந்த செயல் பெற்றோர் மாணவர்களிடையே பாராட்டுகளையும் வரவேற்பினையும் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories