
- தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு
- 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும், திறக்கப்படும்
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
அக்னி நட்சத்திரம் முடிந்தும் பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெப்ப அலை நீடித்து வருவதால், பள்ளி மாணவ்ர்களின் நலனை முன்னிட்டு, பள்ளிகள் திறப்பு ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதியும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை காலம். இந்தாண்டு மார்ச் தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. மார்ச் மாத 2வது வாரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஏப்ரல் மாதத்தில் வெப்ப அனல்காற்று வீசியது. மே மாத முடிவில் அக்னி நட்சத்திர காலம் முடிந்ததும் வழக்கமாக வெப்பம் குறையும். ஆனால் கடந்த 28ம் தேதி அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப் படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்ப நிலை பதிவாகி இருந்தது.
வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும். அதன்படி தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரையில் ஜூன் 5ம் தேதியும், 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், ஜூன் 1ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஆனால், மே மாத இறுதியிலும் வெயில் தாக்கம் அதிகம் காரணமாக பள்ளிகள் திறப்பை 7ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அக்னி நட்சத்திர காலம் முடிந்தும் வெய்யிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால், தற்போதும் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதியும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.