சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30க்கு வெளியிடப்பட்டன. மாவட்ட வாரியாக வெளியான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் முதலிடம் பிடித்தது! அடுத்து, வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று காலை 9:30க்கு வெளியானது. அரசு தேர்வுத் துறையின் www.tnresults.nic.in www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் தேர்ச்சி குறித்தும் மதிப்பெண் குறித்தும் அறிந்து கொள்ள முண்டியடித்தனர்.
இந்த இணையதளத்தில், தேர்வரின் பதிவு எண் பிறந்த தேதி மாதம் ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ள வசதி செய்யப் பட்டது. அடுத்து, படிக்கும் பள்ளிகளிலும் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ள வழக்கம் போல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.3 சதவீதம் மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்களில் திருப்பூர் முதலிடத்திலும், ஈரோடு 2வது இடத்திலும், பெரம்பலூர் 3 வது இடத்திலும் உள்ளன.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம் :
திருப்பூர் – 95.37 %
ஈரோடு – 95.23 %
பெரம்பலூர் – 95.15 %
கோவை – 95.01 %
நாமக்கல் – 94.97 %
கன்னியாகுமரி – 94.81 %
விருதுநகர் – 94.44 %
நெல்லை – 94.41%
தூத்துக்குடி – 94.23 %
கரூர் – 94.07 %
சிவகங்கை – 93.81 %
மதுரை – 93.81 %
ஊட்டி – 90.87 %
திண்டுக்கல் – 90.79 %
சேலம் – 90.64 %
புதுக்கோட்டை – 90.01 %
காஞ்சிபுரம் – 89.90 %
அரியலூர் – 89.68 %
திருச்சி – 93.56 %
சென்னை – 92.96 %
தேனி – 92.54 %
ராமநாதபுரம் – 92.30 %
புதுச்சேரி – 91.22 %
தஞ்சாவூர் – 91.05 %
தர்மபுரி – 89.62 %
திருவள்ளூர் – 89.49%
கடலூர் – 88.45 %
திருவண்ணாமலை – 88.03 %
நாகை – 87.45 %
கிருஷ்ணகிரி – 86.79 %
வேலூர் – 79.31%
திருவாரூர் – 78.62%