சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர் பணி

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

தென்காசி:
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர் பணி இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அக்கல்லூரி முதல்வர் சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது..

கல்லூரி கல்வித் துறை அரசாணை நிலை எண் 458 உயர்கல்வி ஜி1 துறை நாள் 28.10.2015 ந் படி சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர் சுழற்சி 1 பணியிடங்களுக்கு தமிழ், கணிதம், வேதியியல், நுண்ணுயிரியல், பொருளியல் மற்றும் மின்னணுவியல் & தொடர்பியலுக்கான ஏழு பாடப் பிரிவுகளுக்குத் தகுதியுடயவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கல்லூரி முதல்வர் மு.லதா தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15.12.2015
நேர்காணல்: 17.12.2015 காலை 10 மணி

Related articles

Recent articles

spot_img