ராகு காலம் முடியக் காத்திருந்து… 4.30க்கு மேல் 5 ஐப் பெற்ற பாஜக.,! அதிமுக.,வுடன் அமைந்த கூட்டணி!

admk bjp alliance - 2026

அதிமுக-பாஜக இடையே தமிழகத்தில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதிமுக,. கூட்டணியில் பாஜக.,வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சரும் பாஜக., தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று காலை தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னையில், ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளாசா ஹோட்டலில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

காலையில் பாமக.,வுடன் கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் தொடர்ந்து பாஜக.,வுடன் தொகுதிகள் குறித்து பேசப்பட்டு, முடிவு அறிவிக்கப் பட்டது.

அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, பாஜக சார்பில் மேலிட பார்வையாளர் முரளீதர் ராவ், பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதலில் பாஜக., 10 தொகுதிகளில் யோசித்தது. பிப்.14 அன்று நடைபெற்ற முதல் கட்ட பேச்சு வார்த்தையிலேயே அது இயலாத நிலையில், 7ல் நின்றது பாஜக., பின்னர் 2 மணி நேரப் பேச்சுவார்த்தையில் சில சாதக பாதக அம்சங்களை அலசியதில், 5க்கு ஒப்புக் கொண்டது இருதரப்பும். இன்று செவ்வாய்க்கிழமை 3 – 4.30 ராகு காலம் என்பதால், அது முடிந்த பின்னர், மாலை 4.30 மணிக்கு மேல், அதிமுக – பாஜக., இரு கட்சிகளும் உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

bjp admk - 2026
மாசி மகம் என்பதும் பௌர்ணமி என்பதும் நிறைந்த நாள் என்பதால், இன்று அதிமுக., கூட்டணி உறுதி செய்யப் படுவதை திட்டமிட்டிருந்தது. மாசி மகத்தில்தான் அதிமுக.,வின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தார் என்பதால், அவரது ஜன்ம நட்சத்திர நாளையே கூட்டணிக்காக தேர்வு செய்திருந்தனர் அதிமுக.,வினர்.

இந்நிலையில், ராகு காலம் முடிந்த பின்னர், மாலை 4.45 மணி அளவில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கூட்டணி உடன்பாட்டை ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப் படுவதாக அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், தங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்றும், 40 தொகுதிகளிலும் அதிமுக – பாஜக – பாமக கூட்டணி வெற்றி பெறும் எஎன்றும் கூறினார்.

மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றும் கூட்டணியாக இந்தக் கூட்டணி விளங்கும் என்றும் பியூஷ் கோயல் கூறினார்.

இதனிடையே, எந்த எந்த தொகுதிகளில் பாஜக., போட்டியிடும் என்ற விவரமும் கேட்கப் பட்டது.

கூட்டணி குறித்த அறிவிப்பு முடிந்ததும், முதல்வர் பழனிசாமி இல்லத்தில் இருந்து  விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு புறப்பட்டார் பியூஷ் கோயல். அதிமுகவுடன் தொகுதி பங்கீடு முடிந்த நிலையில் விஜயகாந்த்தை சந்தித்துப் பேசுகிறார் பியூஷ் கோயல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories