முத்தலாக் தடை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

triple talaq bill reintroduced in Rajya Sabha copy - 2026

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்ட முத்தலாக் தடை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதை அடுத்து, முத்தலாக் தடைச் சட்டம், 19-09-2019ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மணமான முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவியை நிரந்தரமாகப் பிரிய விரும்பினால் மூன்று முறை ‘தலாக்’ என்ற வார்த்தையை மட்டும் கூறிவிட்டு, உடனே விவாகரத்து செய்வது இஸ்லாத்தில் இருப்பதாகக் கூறி, இந்தியாவில் புழக்கத்தில் இருந்து வந்தது.

ஆனால், இத்தகைய நடைமுறையால், இந்திய இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கை பாழாவதாகக் கூறி பெண்கள் புகார் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக ஒரு பெண்மணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘முத்தலாக் நடைமுறை சட்ட விரோதம்’ என தீர்ப்பளித்தது.

ramnath khovind - 2026இதை அடுத்து முத்தலாக் முறைக்கு தடை விதித்து 2017ல் ஓர் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்தை சட்டமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதா கடந்த ஆட்சியின் போது, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது; ஆனால் மாநிலங்களவையில் பாஜக., கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இது நிறைவேறவில்லை. இதனால் இந்த அவசரச் சட்டம் காலாவதியானது.

இந்நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, இந்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்தார். அதன் படி, ஆட்சிக்கு வந்த உடனேயே இந்தச் சட்டம் நாடாளுமன்ற மக்களவையில் முன் வைக்கப் பட்டது. அதில் நிறைவேறிய சட்ட மசோதா, பின்னர் இரு தினங்களுக்கு முன்னர் மாநிலங்களவையிலும் முன்வைக்கப் பட்டது. மாநிலங்கள் அவையில் பாஜக., கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலும், சில கட்சிகள் வெளிநடப்பு செய்ய, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டது. இதை அடுத்து, இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இது அனுப்பப் பட்டது.

MODI - 2026இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முத்தலாக் தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து, இச்சட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் 19.09.2019 முதல் நடைமுறைக்கு வருகிறது. இச்சட்டத்தின் மூலம், மணமான முஸ்லிம் ஆண் மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை குற்றமாக கருதப்படும். இவ்வாறு செய்யும் ஆண்களுக்கு மூன்று ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Topics

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Entertainment News

Popular Categories