வெங்காய பதுக்கல்… கொழுக்கும் வியாபாரிகள்! வெதும்பும் பொதுமக்கள்!

onion1 - 2026

வெங்காய கொள்ளையில் கொழுக்கும் வியாபாரிகளால் பொதுமக்கள் மனம் வெதும்பிப் போயுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் சின்ன வெங்காயம் தட்டுப்பாடின்றி கிடைக்கின்ற நிலையில், இடைத்தரகர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு சில வியாபாரிகள் இரு மடங்கு விலைக்கு விற்பனை செய்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒட்டன்சத்திரம் சந்தையில் செவ்வாய்க்கிழமை மாலை கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், சென்னை கோயம்பேட்டில் 90 ரூபாய் வரை விற்கப் படுகிறது. சின்ன வெங்காயம் 3 முதல் 4 மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும் என்பதால், கிலோ கணக்கில் பொதுமக்களே வெங்காயத்தை வாங்கிச்செல்கின்றனர்.

சென்னையில் சில சூப்பர் மார்க்கெட்களில் சின்ன வெங்காயம் இஷ்டம் போல் விலை வைத்து விற்கப் படுகிறதாம். அபிராமபுரம் பழமுதிர்சோலையில் சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ.195 என்றும், ராயப்பேட்டை ரிலையன்ஸ் பிரெஷ் கடையில் கிலோ ரூ.115 என்றும், மயிலாப்பூர் நீல்கிரீஸ் கிளையான வி.என்.எஸ் சூப்பர் மார்கெட்டில் கிலோ ரூ.140க்கு விற்கப்படுகிறது.

ஆயினும், லாயிட்ஸ் சாலை பழமுதிர் நிலையத்தில் கிலோவுக்கு ரூ. 99 க்கும், கிரேஸ் சூப்பர் மார்க்கெட் கிளைகளில் ரூ.98க்கும் விற்கப்படுகிறதாம்!

vegetable market chennai - 2026

விவசாயிகளிடம் இருந்து 60 ரூபாய்க்கு பெறும் இடைத்தரகர், 75 ரூபாய்க்கு மொத்த வியாபாரிக்கு கொடுத்தால் அவரிடம் இருந்து 90 ரூபாய்க்கு வாங்கும் சில்லரை வியாபாரிகள், 195 ரூபாய் வரை தங்கள் இஷ்டம் போல விலை வைக்கின்றனர். விவசாயிக்கு சொற்ப லாபமே கிடைக்கும் நிலையில், வியாபாரிகளோ லாபத்தில் கொழுக்கின்றனர்.

சின்ன வெங்காயம் விளைச்சல் செய்யப்படும் திண்டுக்கல் , திருச்சி , கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

சின்னவெங்காயம் அறுவடை முடிந்து உடனே சந்தைக்கு அனுப்பப்படுவதில்லை. அதனை சேமித்து வைத்து விலை உயரும் வரை காத்திருந்து சந்தைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் சின்ன வெங்காயத்திற்கு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி 3 மடங்கு விலையில் விற்று வருகின்றனர் என்கிறார்கள்.

வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துவிட்டது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பெரிய வெங்காயத்தை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்கின்றனர். அங்கிருந்து கிலோ பெரிய வெங்காயத்தை 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விலை வைத்து வாங்கும் இடைத்தரகர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இது கோயம்பேட்டில் கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

ஆந்திர வெங்காயம் விவசாயிகளிடம் 25 ரூபாய்க்கு வாங்கப்பட்டு 40 ரூபாய்க்கும், கர்நாடக வெங்காயம் 30 ரூபாய் முதல் 35 வரை வாங்கப்பட்டு 50 ரூபாய் முதல் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகை வெங்காயம் 2 நாட்களுக்கு மேல் வைத்திருந்து விற்பனை செய்ய முடியாது; அவை அழுகிவிடும்!

இப்படி கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகளை மனத்தில் கொண்டுதான் தமிழக அரசும் வெங்காய பதுக்கல் காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், சோதனைகள் நடத்தவும் கூறியுள்ளது. ஆனாலும் இவர்கள் கொள்ளையர்களாகத்தான் திரிகிறார்கள்! பாவம்.. பொதுசனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories