“எல்லோருக்கும் நல்லவன்” என்றொரு பட்டத்துக்காக ரஜினி அரும்பாடு படுகிறார். யதார்த்தத்தில் அது ஒரு குணக் குறைபாடேயன்றி வேறேதுவும் இல்லை.
“To be able to call a spade a spade” is a virtue.
To try and assuage the feelings of everyone concerned all the time is surely a path to ruin.
எங்கே BJP சப்போர்ட்டர், சங்கி என்று சொல்லி விடுவார்களோ என்று பயப்படுகிறார், அதற்காக வருந்துவதாகவும் ஓப்பனாகவே சொல்கிறார். அதே நேரம், எங்கே இவர் அடிப்படையில் திராவிட ஆதரவாளர் மட்டுமே என்று வகைப்படுத்தி ஓரங்கட்டி விடுவார்களோ என்றும் பரிதவிக்கிறார். எங்கே தனக்கான முஸ்லிம் ரசிக வோட்டுகள் சிதறி விடுமோ, கிறிஸ்தவ ரசிக வோட்டுகள் கிடைக்காமல் போய் விடுமோ என்றும் கவலைப் படுகிறார்.
அவருடைய சொந்த இயல்பான ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை, ஆன்மீகப் பெரியவர்களிடம் ஆழ்ந்த பக்தி, மரியாதை எல்லாம் இயற்கையாகவே இருந்தாலும் சனாதன ஹிந்துவாகக் காட்டிக் கொள்ளவும் சங்கடப் படுகிறார்.
தமிழக மீடியாவின் குரல்வளையை நெருக்கும் திமுக மீடியாவின் அசுர பண பலத்தை, அயோக்கியத்தனத்தை ஆர். எஸ். பாரதி போன்ற திமுககாரர்களே துகிலுரித்துக் காட்டியும், ரஜினி “மூத்த பத்திரிகையாளர்” என்று இன்னமும் சிந்து பாடிக் கொண்டிருக்கிறார்.
தனிக்கட்சி என்று ஒன்று ஆரம்பித்தவுடன் அவர்கள் இவர் பின்னாலா ஓடி வரப் போகிறார்கள்? இவரைக் கிண்டல் செய்தும், அசிக்கப் படுத்தியும், உருட்டியும், மிரட்டியும் பணியவைக்க ஆயிரக் கணக்கான மீம்களையும், அபாண்டக் கட்டுரைகளையும் அவர்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருப்பதெல்லாம் அறியாத வெள்ளந்தி மனிதனா ரஜினிகாந்த்? இல்லவே இல்லை.
“திமுக மீடியாக்காரர்களின் அபரிமிதமான காசு வேண்டும், அவர்கள் பத்திரிகை, டீவி சேனல்களில் 24 மணி நேர சப்போர்ட் வேண்டும், தன்னைப் புகழ்ந்தும் ஆராதித்தும் கட்டுரைகள் தொடரவேண்டும். ஆனாலும் தனி ஆவர்த்தனம் செய்து பார்த்து, நானே அரியணை ஏறுவேன் … ” என்று ஆரம்பித்தால் அவர்கள் சும்மாவா இருப்பார்கள்?
எல்லாவிதமான பொய், புரட்டுக் கட்டுரைகளையும் வெளியிடுவார்கள். ரஜினி பேரில், அவர் குடும்பத்தின் மேல் சேற்றை வாரிப் பூசுவார்கள். அதுதானே அவர்கள் ஸ்டைல்?
உடனே ரஜினி பயந்து அடங்கி விடுவாரா? தெரியவில்லை. ஆனால் “ஆஹா, அப்படி வாங்க (நம்ப) வழிக்கு” என்று அவசரப்பட்டுக் கமல் சொல்லியிருக்கும் ஒரே காரணத்தால், அதைச் சீர் தூக்கிப் பார்த்து, அதன் உண்மை புரிந்து, ரஜினி தீவிர யோசனையில் ஆழ்வார் என்பது மட்டும் சர்வ நிச்சயம்!
You Live Only Once. Make It Count! அவர் படித்திருக்கும் தைத்ரிய உபநிஷத்தில் சொல்லியபடி, (“ஸத்யம் வத, தர்மம் சர” – சத்தியத்தை மட்டுமே பேசு, தர்மத்தின் வழி மட்டுமே நட) ரஜினி நடப்பார் என்று எதிர்பார்ப்போம்!
- ராம் ராமசந்திரன் (லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்)