தினசரி ஒரு வேத வாக்கியம்: 65. சரணாகதி தத்துவம்!

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

65. சரணாகதி தத்துவம்

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்  

“முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே” – சுவேதாஸ்வதர உபநிடதம்.
“மோட்சத்தின் மீது விருப்பம் உள்ள நான் (பரமாத்மாவை) சரணடைகிறேன்!”

சரணாகதி தர்மம் வேதங்களில் பிரபலமானது. பக்தி தத்துவம் வேதத்தில் கூறப்படவில்லை என்றும், பின்னர் வந்த புராண காலத்தில் ஏற்பட்டது என்றும், சரணாகதி என்பது ஞானத்திற்குத் தேவையில்லை என்றும் அரைகுறை ஆய்வாளர்கள் வெகுவாக பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் ஞான காண்டமான உபநிஷத்தில் சரணாகதி பற்றி கூறப்பட்டுள்ளது என்பதை மேற்சொன்ன வாக்கியம் மூலம் தெளிவாக அறியலாம்.

விவேகமுள்ள புத்திக்கு ஆர்வத்தை அருளியது பரமாத்மாவே. அதனால் இந்த வாக்கியத்திற்கு முன்னுள்ள மூன்று வாக்கியங்களில்…  

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோஹி வேதா: ப்ரஹிணோஹி தஸ்மை
தமீஸ்வரம் ஆத்மபுத்தி ப்ரகாசம்” –
என்று குறிப்பிட்டார்கள்.

சிருஷ்டிகர்த்தாவை ஏற்படுத்திய பின் அவருக்கு வேதங்களை அருளிய பரமாத்மாவே புத்தியை பிரகாசிக்க செய்யும் ஆத்ம ஞானத்தை அருள்பவர். அதனால்தான் மோட்ச விருப்பமுள்ளவர்கள் அவரை சரணடைகிறார்கள். 

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
parthasarathi perumal
parthasarathi perumal

தர்மம், யோகம்… எந்த மார்க்கத்தில் பயணித்தாலும் மானுடனின் சக்திக்கு எல்லை உண்டு. அவை சரியாகத் தொடர வேண்டுமென்றால் பல விஷயங்கள் அனுகூலமாக வேண்டும். அந்த அனுகூலமே கடவுள். 

“நாங்கள் ஞானிகள்… பக்தி மார்க்கத்தவரல்லர்!” என்று நினைப்பவர்கள் உண்மையில் ஞானிகளே அல்லர். ஞானம் கூட கடவுள் அனுகிரகத்தால்தான் கிடைக்கிறது. 

ஞானமார்க்கமான பிரஸ்தான த்ரயமும் பக்தியை முதன்மை வழியாக குறிப்பிடுகிறது. அதனால்தான் “ஈஸ்வரானுக்ரஹாதேவ பும்சாமத்வைத வாசனா” –‘ஈஸ்வரனின் அனுகிரகத்தால் தான் அத்வைத வாசனை கிடைக்கும்’ என்று வேத சாஸ்திரங்கள் பல இடங்களில்அறிவித்தன.

krishna arjuna rath
krishna arjuna rath

சரணாகதி தர்மத்தை இராமாயணம் மகாபாரதம் பாகவதம் ஆகியவையும் உலகமயமாக்கி காட்டின. புத்தியை ஈஸ்வரார்ப்பணம் செய்து கடமையை ஆற்றுவதே வெளிப்படையாக கூறப்படும் சரணாகதி தர்மம். செயல்களின் மீது கர்வத்தையும் அதன் மூலம் வரும் விருப்பு வெறுப்புகளையும் நீக்குவதற்கு முக்கிய சாதனமாக உபயோகிப்பது சரணாகதி தர்மத்தையே.

“பந்தான வேங்கடேச! பட்டி நின்னு சரணண்டி 
சந்த கூடால தர்மபு சங்கதி நாகேலா?
” என்று அன்னமய்யா பாடியுள்ளார். 

ALSO READ:  இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

எந்த மார்க்கத்தில் சென்றாலும் குழப்பமும் வழி தவறுதலும் நேர்கிறது. மனிதனால் தீர்க்க இயலாத குழப்பமான அந்த நேரத்தில் முக்கரணத் தூமையோடு செய்யும் சரணாகதி வழிகாட்டும் தீபமாக உதவுகிறது.

“மாமேகம் சரணம் வ்ரஜ” என்று சரணாகதியை கீதைமிக உயர்ந்த தர்மமாக போதிக்கிறது.தர்மத்திலும் கடமையாற்றுவதிலும் தூய்மையாக ஒருமித்த மனதோடு முன்னேற வேண்டுமென்றால் அதற்குத் தேவையான தன்னம்பிக்கை இறைவனைச் சரணடைவதால்தான் கிடைக்கிறது. 

சத்திய மார்க்கத்தை விட்டு விலகாமல் இருப்பதற்கு உலகம் கொடுக்கும் துணிவை விட கடவுளை நம்பும் ஆத்மார்ப்பணம் அதிகம் உதவும்.

தர்மம் கடவுளுக்கு விருப்பமானது. அவரை சரணடைந்தவர் அவருக்கு விருப்பமானதை விட்டு விலகமாட்டார். பகவத் ப்ரீதிகரமான தர்மத்தை கடைப்பிடிப்பதில் இவ்விதம் உற்சாகமாகத் தொடர்ந்தால் நாளடைவில் ஆத்ம ஸாக்ஷாத்காரம் கிட்டும். 

தர்மத்தை முழுமையாக மேற்கொண்டு எப்படிப்பட்ட மோகத்திற்கும் அடிமையாகாமல் இருப்பவரால் சமுதாயத்திற்கு நிலையான மேன்மை கிடைத்தே தீரும். அப்படிப்பட்ட தனிமனித ஆளுமையை அருளும் ஆற்றல் உண்மையான சரணாகதி தர்மத்திற்கு உண்டு.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories