தினசரி ஒரு வேத வாக்கியம்: 65. சரணாகதி தத்துவம்!

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

65. சரணாகதி தத்துவம்

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்  

“முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே” – சுவேதாஸ்வதர உபநிடதம்.
“மோட்சத்தின் மீது விருப்பம் உள்ள நான் (பரமாத்மாவை) சரணடைகிறேன்!”

சரணாகதி தர்மம் வேதங்களில் பிரபலமானது. பக்தி தத்துவம் வேதத்தில் கூறப்படவில்லை என்றும், பின்னர் வந்த புராண காலத்தில் ஏற்பட்டது என்றும், சரணாகதி என்பது ஞானத்திற்குத் தேவையில்லை என்றும் அரைகுறை ஆய்வாளர்கள் வெகுவாக பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் ஞான காண்டமான உபநிஷத்தில் சரணாகதி பற்றி கூறப்பட்டுள்ளது என்பதை மேற்சொன்ன வாக்கியம் மூலம் தெளிவாக அறியலாம்.

விவேகமுள்ள புத்திக்கு ஆர்வத்தை அருளியது பரமாத்மாவே. அதனால் இந்த வாக்கியத்திற்கு முன்னுள்ள மூன்று வாக்கியங்களில்…  

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோஹி வேதா: ப்ரஹிணோஹி தஸ்மை
தமீஸ்வரம் ஆத்மபுத்தி ப்ரகாசம்” –
என்று குறிப்பிட்டார்கள்.

சிருஷ்டிகர்த்தாவை ஏற்படுத்திய பின் அவருக்கு வேதங்களை அருளிய பரமாத்மாவே புத்தியை பிரகாசிக்க செய்யும் ஆத்ம ஞானத்தை அருள்பவர். அதனால்தான் மோட்ச விருப்பமுள்ளவர்கள் அவரை சரணடைகிறார்கள். 

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!
parthasarathi perumal
parthasarathi perumal

தர்மம், யோகம்… எந்த மார்க்கத்தில் பயணித்தாலும் மானுடனின் சக்திக்கு எல்லை உண்டு. அவை சரியாகத் தொடர வேண்டுமென்றால் பல விஷயங்கள் அனுகூலமாக வேண்டும். அந்த அனுகூலமே கடவுள். 

“நாங்கள் ஞானிகள்… பக்தி மார்க்கத்தவரல்லர்!” என்று நினைப்பவர்கள் உண்மையில் ஞானிகளே அல்லர். ஞானம் கூட கடவுள் அனுகிரகத்தால்தான் கிடைக்கிறது. 

ஞானமார்க்கமான பிரஸ்தான த்ரயமும் பக்தியை முதன்மை வழியாக குறிப்பிடுகிறது. அதனால்தான் “ஈஸ்வரானுக்ரஹாதேவ பும்சாமத்வைத வாசனா” –‘ஈஸ்வரனின் அனுகிரகத்தால் தான் அத்வைத வாசனை கிடைக்கும்’ என்று வேத சாஸ்திரங்கள் பல இடங்களில்அறிவித்தன.

krishna arjuna rath
krishna arjuna rath

சரணாகதி தர்மத்தை இராமாயணம் மகாபாரதம் பாகவதம் ஆகியவையும் உலகமயமாக்கி காட்டின. புத்தியை ஈஸ்வரார்ப்பணம் செய்து கடமையை ஆற்றுவதே வெளிப்படையாக கூறப்படும் சரணாகதி தர்மம். செயல்களின் மீது கர்வத்தையும் அதன் மூலம் வரும் விருப்பு வெறுப்புகளையும் நீக்குவதற்கு முக்கிய சாதனமாக உபயோகிப்பது சரணாகதி தர்மத்தையே.

“பந்தான வேங்கடேச! பட்டி நின்னு சரணண்டி 
சந்த கூடால தர்மபு சங்கதி நாகேலா?
” என்று அன்னமய்யா பாடியுள்ளார். 

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

எந்த மார்க்கத்தில் சென்றாலும் குழப்பமும் வழி தவறுதலும் நேர்கிறது. மனிதனால் தீர்க்க இயலாத குழப்பமான அந்த நேரத்தில் முக்கரணத் தூமையோடு செய்யும் சரணாகதி வழிகாட்டும் தீபமாக உதவுகிறது.

“மாமேகம் சரணம் வ்ரஜ” என்று சரணாகதியை கீதைமிக உயர்ந்த தர்மமாக போதிக்கிறது.தர்மத்திலும் கடமையாற்றுவதிலும் தூய்மையாக ஒருமித்த மனதோடு முன்னேற வேண்டுமென்றால் அதற்குத் தேவையான தன்னம்பிக்கை இறைவனைச் சரணடைவதால்தான் கிடைக்கிறது. 

சத்திய மார்க்கத்தை விட்டு விலகாமல் இருப்பதற்கு உலகம் கொடுக்கும் துணிவை விட கடவுளை நம்பும் ஆத்மார்ப்பணம் அதிகம் உதவும்.

தர்மம் கடவுளுக்கு விருப்பமானது. அவரை சரணடைந்தவர் அவருக்கு விருப்பமானதை விட்டு விலகமாட்டார். பகவத் ப்ரீதிகரமான தர்மத்தை கடைப்பிடிப்பதில் இவ்விதம் உற்சாகமாகத் தொடர்ந்தால் நாளடைவில் ஆத்ம ஸாக்ஷாத்காரம் கிட்டும். 

தர்மத்தை முழுமையாக மேற்கொண்டு எப்படிப்பட்ட மோகத்திற்கும் அடிமையாகாமல் இருப்பவரால் சமுதாயத்திற்கு நிலையான மேன்மை கிடைத்தே தீரும். அப்படிப்பட்ட தனிமனித ஆளுமையை அருளும் ஆற்றல் உண்மையான சரணாகதி தர்மத்திற்கு உண்டு.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories