தினசரி ஒரு வேத வாக்கியம்: 65. சரணாகதி தத்துவம்!

Published:

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

65. சரணாகதி தத்துவம்

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்  

“முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே” – சுவேதாஸ்வதர உபநிடதம்.
“மோட்சத்தின் மீது விருப்பம் உள்ள நான் (பரமாத்மாவை) சரணடைகிறேன்!”

சரணாகதி தர்மம் வேதங்களில் பிரபலமானது. பக்தி தத்துவம் வேதத்தில் கூறப்படவில்லை என்றும், பின்னர் வந்த புராண காலத்தில் ஏற்பட்டது என்றும், சரணாகதி என்பது ஞானத்திற்குத் தேவையில்லை என்றும் அரைகுறை ஆய்வாளர்கள் வெகுவாக பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் ஞான காண்டமான உபநிஷத்தில் சரணாகதி பற்றி கூறப்பட்டுள்ளது என்பதை மேற்சொன்ன வாக்கியம் மூலம் தெளிவாக அறியலாம்.

விவேகமுள்ள புத்திக்கு ஆர்வத்தை அருளியது பரமாத்மாவே. அதனால் இந்த வாக்கியத்திற்கு முன்னுள்ள மூன்று வாக்கியங்களில்…  

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோஹி வேதா: ப்ரஹிணோஹி தஸ்மை
தமீஸ்வரம் ஆத்மபுத்தி ப்ரகாசம்” –
என்று குறிப்பிட்டார்கள்.

சிருஷ்டிகர்த்தாவை ஏற்படுத்திய பின் அவருக்கு வேதங்களை அருளிய பரமாத்மாவே புத்தியை பிரகாசிக்க செய்யும் ஆத்ம ஞானத்தை அருள்பவர். அதனால்தான் மோட்ச விருப்பமுள்ளவர்கள் அவரை சரணடைகிறார்கள். 

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!
parthasarathi perumal
parthasarathi perumal

தர்மம், யோகம்… எந்த மார்க்கத்தில் பயணித்தாலும் மானுடனின் சக்திக்கு எல்லை உண்டு. அவை சரியாகத் தொடர வேண்டுமென்றால் பல விஷயங்கள் அனுகூலமாக வேண்டும். அந்த அனுகூலமே கடவுள். 

“நாங்கள் ஞானிகள்… பக்தி மார்க்கத்தவரல்லர்!” என்று நினைப்பவர்கள் உண்மையில் ஞானிகளே அல்லர். ஞானம் கூட கடவுள் அனுகிரகத்தால்தான் கிடைக்கிறது. 

ஞானமார்க்கமான பிரஸ்தான த்ரயமும் பக்தியை முதன்மை வழியாக குறிப்பிடுகிறது. அதனால்தான் “ஈஸ்வரானுக்ரஹாதேவ பும்சாமத்வைத வாசனா” –‘ஈஸ்வரனின் அனுகிரகத்தால் தான் அத்வைத வாசனை கிடைக்கும்’ என்று வேத சாஸ்திரங்கள் பல இடங்களில்அறிவித்தன.

krishna arjuna rath
krishna arjuna rath

சரணாகதி தர்மத்தை இராமாயணம் மகாபாரதம் பாகவதம் ஆகியவையும் உலகமயமாக்கி காட்டின. புத்தியை ஈஸ்வரார்ப்பணம் செய்து கடமையை ஆற்றுவதே வெளிப்படையாக கூறப்படும் சரணாகதி தர்மம். செயல்களின் மீது கர்வத்தையும் அதன் மூலம் வரும் விருப்பு வெறுப்புகளையும் நீக்குவதற்கு முக்கிய சாதனமாக உபயோகிப்பது சரணாகதி தர்மத்தையே.

“பந்தான வேங்கடேச! பட்டி நின்னு சரணண்டி 
சந்த கூடால தர்மபு சங்கதி நாகேலா?
” என்று அன்னமய்யா பாடியுள்ளார். 

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

எந்த மார்க்கத்தில் சென்றாலும் குழப்பமும் வழி தவறுதலும் நேர்கிறது. மனிதனால் தீர்க்க இயலாத குழப்பமான அந்த நேரத்தில் முக்கரணத் தூமையோடு செய்யும் சரணாகதி வழிகாட்டும் தீபமாக உதவுகிறது.

“மாமேகம் சரணம் வ்ரஜ” என்று சரணாகதியை கீதைமிக உயர்ந்த தர்மமாக போதிக்கிறது.தர்மத்திலும் கடமையாற்றுவதிலும் தூய்மையாக ஒருமித்த மனதோடு முன்னேற வேண்டுமென்றால் அதற்குத் தேவையான தன்னம்பிக்கை இறைவனைச் சரணடைவதால்தான் கிடைக்கிறது. 

சத்திய மார்க்கத்தை விட்டு விலகாமல் இருப்பதற்கு உலகம் கொடுக்கும் துணிவை விட கடவுளை நம்பும் ஆத்மார்ப்பணம் அதிகம் உதவும்.

தர்மம் கடவுளுக்கு விருப்பமானது. அவரை சரணடைந்தவர் அவருக்கு விருப்பமானதை விட்டு விலகமாட்டார். பகவத் ப்ரீதிகரமான தர்மத்தை கடைப்பிடிப்பதில் இவ்விதம் உற்சாகமாகத் தொடர்ந்தால் நாளடைவில் ஆத்ம ஸாக்ஷாத்காரம் கிட்டும். 

தர்மத்தை முழுமையாக மேற்கொண்டு எப்படிப்பட்ட மோகத்திற்கும் அடிமையாகாமல் இருப்பவரால் சமுதாயத்திற்கு நிலையான மேன்மை கிடைத்தே தீரும். அப்படிப்பட்ட தனிமனித ஆளுமையை அருளும் ஆற்றல் உண்மையான சரணாகதி தர்மத்திற்கு உண்டு.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img