தினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்!

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

67. கைகளில் தெய்வீகம்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“அயம் மே ஹஸ்தோ பகவான்… சிவாபிமர்சன:” – அதர்வண வேதம்.

“இந்த என் கை பாக்கியம் பெற்றது. பவித்ரமான ஸ்பரிசம் உடையது”

நம் கைகளில் மறைந்துள்ள ஆற்றல்கள் பல. நம் எண்ணங்களின் சக்தி எல்லாம் நம் உடலிலுள்ள பல்வேறு அவயவங்களில் பாய்கின்றன. அவற்றில் முக்கியமானது கைகள். இவை செயல்படும் சக்தியின் ஸ்தானம். எதைத் தொட்டாலும், எந்த செயலைச் செய்தாலும் கைகளால் தானே செய்ய முடியும்!

சிலருடைய கைகள் நம் மேல் பட்டாலே நம்மில் மறைந்திருக்கும் துஷ்ட சக்திகளைக் கூட வெளியே தள்ளி விடும். வேறு சிலரின் ஸ்பரிசம் தீய எண்ணங்களை நம்மில் செலுத்தக் கூடும். அது அந்தந்த மனிதர்கள் நல்லவரா கெட்டவரா என்பதைப் பொருத்து இருக்கும்.

நம் எண்ணங்களின் ஆற்றலை ஒன்றிணைத்து செயல்படுத்தினால் உடலெங்கும் உயிர்ப்பு பெறுகிறது. முக்கியமாக கைகளின் வழியே இது நடைபெறுகிறது. இந்த ரகசியத்தை கூறும் பாரதிய சனாதன விஞ்ஞானத்தில் ‘கர ஸ்பரிசம்’ தொடர்பான சில சம்பிரதாயங்கள் உள்ளன.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

மந்திர ஜபம், பூஜை போன்றவற்றைச் செய்யும்போது அங்கந்யாஸம், கரந்யாஸம் செய்கிறோம். அதாவது மந்திர சக்தியை நம் உடலில் ஏற்பதற்கு முன்பாக கைகளில் உள்ள ஒவ்வொரு விரலிலும் உள்ளங்கையிலும் (கரதலம்), முதலில் நியாசம் செய்கிறோம். (இருத்துகிறோம்). அப்படிச் செய்தபின் கைகளால் உடல் முழுவதும் மந்திர சக்தியை நியாசம் செய்கிறோம். முதலில் மந்திர சக்தியை ஏற்பது கரங்களே! 

கரங்களின் வழியாகவே தேவதைகளுக்கு தர்ப்பணம் அளிக்கிறோம். தேவ தர்பணம், பித்ரு தர்ப்பணம், ருஷி தர்ப்பணம் ஆகியவை கைகளின் வழியாகவே அளிக்கப்படுகிறது.

ஆசீர்வதிப்பதோடு கூட குரு தன் சீடனுக்கு அளிக்கும் தீட்சையில் ஹஸ்த ஸ்பரிச தீக்ஷை என்பது மிக முக்கியமானது. சீடனின் தலைமீது கைவைத்து மகான்கள் சக்திபாதம் மூலம் சீடனை அனுக்ரஹிப்பார்கள்.

hand - 2026

நித்திய தெய்வ உபாசனை செய்பவர்களின் வலது கையில் அக்னி இருக்கும். அதனால்தான் அவர்களுக்கு ஏதேனும் தானம் செய்தால் அக்னிக்கு சமர்ப்பித்த (யக்ஞம் செய்த) பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தினமும் அனுஷ்டானம் செய்யும் மந்திரங்களை ஜபித்து, இரு உள்ளங்கைகளையும் தேய்த்து அந்த மந்திர சக்தியை உள்ளங்கையில் ஆவாகனம் செய்வதாக பாவனை செய்து வெப்பம் ஏறிய அந்த உள்ளங்கையால் யாராவது நோயாளியின் உடலைத் தொட்டால் விரைவில் குணமடைவார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

விபூதியைக் கையில் பிடித்து,  உள்ளங்கையில் உள்ள தெய்வீக சக்தியை கிரகிக்கும் முறையால் அந்த விபூதியை சக்தியோடு கூடியதாக்கலாம். 

இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் கையில் உள்ள ஐந்து விரல்களும் பஞ்ச பூதங்களுக்குக் குறியீடுகள். விரல்களில் “லம் ப்ருதிவீ தத்த்வாத்மனே” முதலிய மந்திரங்களால் தேவர்களுக்கு பஞ்ச பூஜை செய்வது வழக்கம்.

hand - 2026

நல்ல எண்ணங்களோடும் அன்போடும் அமைதியான உள்ளத்தோடும் இறைவனை தியானித்து எதைத் தொட்டாலும் நம் கைகள் புனிதமான பலனை அருளுகின்றன.

இறை சக்தியை பரப்புவதற்கு இடமாக இருப்பதால்தான் கரங்களையே பகவான் என்றார்கள். அது மட்டுமின்றி கரத்தின் ஸ்பரிசம் மங்களகரமானதால், “சிவாபிமர்ஸன:” என்கிறது வேதமந்திரம்.

அண்மையில் இந்த சனாதன வேத சிந்தனையே மீண்டும் வெளிநாடுகளிலிருந்து Healing Touch என்ற பெயரோடு வந்துள்ளது. நாமும் அந்த நவீன முறையின் பின்னால் செல்கிறோம்.

பவித்திரமான ஸ்பரிசம் என்று அழைக்கப்படும் சக்தியும் சாதனையும் வேத கலாச்சாரத்தில் தெளிவாகவும் திடமாகவும் கூறப்பட்டுள்ளன. இந்த முறையை நம் நித்திய அனுஷ்டானத்தில் அமைத்து அளித்துள்ளனர் நம் முன்னோர். ஆனால் நம் சம்பிரதாயங்கள் மீதும் தர்மத்தின் மீதும் சரியான புரிதலை இழந்த நாம் நம் சக்தியை அறியாமல் இருக்கிறோம். 

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

“பைஷஜ்ய வேத” மான (மருத்துவ தொடர்பான) அதர்வண வேதத்தில் உள்ள இந்த சித்தாந்தம் ஸ்பரிசத்தின் முக்கியமான வைத்திய முறையை விளக்குகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories