சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (14): ‘பாதராயண சம்பந்த நியாய:’!

samskrita nyaya - 2026

தெலுங்கில்: பி.எஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

‘பாதராயண சம்பந்த நியாய:’

பதரீ வ்ருஷ: – இலந்தை மரம். சம்பந்தம் – உறவு.

பழக்கமில்லாத மனிதரோடு ஏதோ விதமாக உறவு எற்படுத்திக் கொள்வதற்காகச் செய்யும் உபாயமே ‘பாதராயண சம்பந்த நியாயம்’.

அஸ்மாகம் பதரீ சக்ரம் யுஷ்மாகம் பதரீ தரு:
பாதராயண சம்பந்தாத் யூயம் யூயம் வயம் வயம் !! (பழமொழி)

மேலுள்ள சுலோகத்தில் ஒரு பெரிய நகைச்சுவை உள்ளது. பார்த்து மகிழ்வோம்.

வாக்கு சாதுர்யம் கொண்ட ஒரு மனிதர் வியாபார நிமித்தம் வண்டியில் சரக்கு ஏற்றிக் கொண்டு ஒரு ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு செல்கிறார். மதிய வேளை நெருங்கியது. வியாபாரிக்குப் பசித்தது. அந்த கிராமத்தில் ஒரு கிணறும் தாழ்வாரம் உள்ள வீடும் அவர் கண்ணில் பட்டது. வீட்டின் அருகில் ஒரு வைக்கோற்போர் இருந்தது. அந்த வீட்டின் முன் தன் வண்டியை நிறுத்தி, கிணற்றில் நீரிறைத்து கால் கழுவிக் கொண்டு மாடுகளுக்கும் தண்ணீர் காட்டினார்.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

“மாமா! மாமா!” என்று அந்த வீட்டுக்காரரை உரிமையோடு அழைத்தார். வீட்டுக்காரரின் மனைவி வெளியில் வந்தாள். சுதந்திரமாக கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த மனிதரைப் பார்த்து கணவருக்கு உறவு போலும் என்று நினைத்து அவருக்கு வணக்கம் செலுத்தினாள்..

“தங்கச்சி! நல்லா இருக்கியா?” என்று அன்போடு விசாரித்தார்.

“எல்லாம் நலம் அண்ணே! வாங்க!” என்று வீட்டின் உள்ளே வரவேற்றாள்.

குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள். “குளிச்சுட்டு வாங்க அண்ணே! சாப்பாடு தயாராக  இருக்கு. அவர் வரும் நேரம்தான்” என்றாள்.

அதற்குள் வீட்டுக்காரர் வந்தார். குசல விசாரிப்புகள் ஆயின. மாடுகளுக்கு வைக்கோல் போட்டுவிட்டு இருவரும் உணவுக்கு அமர்ந்தனர். உலக விஷயங்களைப் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர். மனைவியுடைய உறவுக்காரர் போலிருக்கிறது என்று கணவனும், கணவரின் உறவு என்று மனைவியும் நினைத்ததால் விருந்து உபசாரம் நன்றாகவே நடந்தது.

ஓய்வு எடுத்த பின் அந்த விருந்தினரோடு தமக்குள்ள உறவு பற்றிய பேச்சு வந்தது. அப்போது அந்த சமார்த்தியமான் மனிதர் வாய்விட்டுச் சிரித்து, “நம்முடையது பாதராயண சம்பந்தம், மாமா!” என்றார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

“அப்படியென்றால்?” என்று கேட்டனர் தம்பதிகள்.

அப்போது மேலுள்ள சுலோகத்தை உதாரணம் காட்டினாராம் அந்த ஆசாமி. அதன் பொருள் என்னவென்றால்…

“உங்கள் வீட்டின் முன் இலந்தை மரம் உள்ளது அல்லவா? நான் வந்த இரட்டை மாட்டு வண்டியின் சக்கரங்கள் கூட இலத்தை மரக் கட்டைகளால் செய்தது அதுதான் நம் இருவருக்கும் உள்ள உறவு” என்றாராம்.

விருந்தினரின் கலகலப்பான குணத்தையும் வாக்கு சாமர்த்தியத்தையும் பார்த்து அந்த தம்பதிகள் மகிழ்ந்தனர். அதிதி தன் வண்டியில் இருந்த சில பொருட்களை அவர்களுக்கு பரிசாக அளித்தார். மேற்கொண்டு பயணத்தின் போது தின்பதற்கு பலகாரம் கட்டித் தந்தாள் அந்த புதிய தங்கை. இதுதான் பாதராயண சம்பந்த நியாயத்தின் விளக்கம்.

ஓரொருமுறை இது போல் நடப்பதுண்டு. நட்பு தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் நீடிப்பதும் உண்டு.

வெளி இடங்களிலோ வெளி நாடுகளிலோ சந்திக்கும் இரு இந்தியர்கள் முதல் அறிமுகத்திலேயே நண்பர்கள் ஆவது நமக்கும் அனுபவம் தானே!

“உன்னுடையதும் தெனாலி! என்னுடையதும் தெனாலி!” என்ற கூற்று சினிமா உலகில் பிரசித்தமானது. இதுவே பாதராயண சம்பந்தம் என்பது. ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே மொழி பேசுபவர்கள் நண்பர்களாவது இந்த நியாயத்தில் சேரும்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

—-0o0—-

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories