பல மொழி கற்போம்… தமிழ் மொழி காப்போம்..!

tamilannai copy1z - 2026

பல மொழி கற்போம்… தமிழ் மொழி காப்போம்..!

மொழி என்பது அனைவருக்கும் அவசியம். தனது மனதில் இருக்கும் கருத்துக்களை, வெளியே கொண்டு வர மொழி மிகவும் அவசியமானது ஆகும். காக்கை, குருவி, நாய் என எல்லா வகையான விலங்குகளும், பறவைகளும் ஓசையை எழுப்புகின்றன. ஓவ்வொரு உயிரினமும் எழுப்பும், ஓவ்வொரு வகையான ஓசைகளுமே, ஓரே மாதிரியான வகையில் இருப்பது போல, நமக்குத் தோன்றினாலும், அதனுடைய உயிர் இனத்திற்கு, அது ஒரு மொழி. தான் சார்ந்த இனத்திற்கு புரியும் வகையில், தனது கருத்துக்களை, அவை பிரதிபலிக்கும்.

மனிதர்கள் விலங்குகளைப் போல ஒலி எழுப்பாமல், வார்த்தை வடிவில் பேசியும், எழுதியும் தங்களுடையக் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தனது தாய் மொழியை சிறப்பாகக் கற்று, மற்ற மொழிகளையும் கற்றவர்கள், பல்வேறு துறைகளில், பெரும் பங்கு ஆற்றி வருகின்றனர்.

தமிழ் மொழிப் பற்று !

தமிழர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ, அங்கு உள்ள மொழியை கற்றுக் கொண்டு, தமிழ் மொழி மீது கொண்ட பற்றால், தமிழ் மொழியை தனது அடுத்த தலைமுறைக்கு பயிற்றுவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் பேசும் தமிழை விட, மற்ற ஊரில் இருக்கும் தமிழர்கள் பேசும் தமிழ் மொழி, மிக சுத்தமாகவும், சிறப்பாகவும், வேறு மொழிகளைத் துளியும் கலக்காமல் பேசி வருவதாக, வரலாற்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

நொபொரு காராசிமா (Noboru Karashima) :

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர், எழுத்தாளர், நொபொரு காராசிமா. தமிழ் மொழி மீது கொண்ட அன்பால், தமிழைக் கற்று தமிழறிஞர் ஆனார். 1995 ஆம் ஆண்டு, தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டை, முன்னின்று நடத்தியதில், முக்கிய பங்கு வகித்தார். இவரது சேவையை பாராட்டி, 2013 ஆம் ஆண்டு, அன்றைய மத்திய அரசு, அவருக்கு பத்மஸ்ரீ வழங்கி கௌரவித்தது.

ALSO READ:  மலர்வளையம் வைப்பவர்கள்... சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி என பல துறைகளில் ஈடுபட்டு, தனது முத்திரையை பதித்தார். ஜப்பான் மொழியைத் தாய் மொழியாக கொண்டு இருந்தாலும், தமிழ் மொழியைக் கற்று, சரளமாக பேசக்கூடிய திறன் பெற்றவர்.

கொரிய – தமிழ் தொடர்பு :

கொரிய மொழியில், தமிழ் வார்த்தைகள் நிறைய உள்ளன. “புல்” என்ற வார்த்தைக்கு, தமிழ் மொழியில் என்ன அர்த்தமோ, அதே பொருள் தான் கொரிய மொழியிலும் உள்ளன. அது போல நிறைய வார்த்தைகள், தமிழ் மொழியுடன் கொரிய மொழி தொடர்பு உடையதாக உள்ளது.

தமிழ் மொழிக்கும் – கொரிய மொழிக்கும், பல  ஆயிரம் வருடங்களாகவே, தொடர்பு இருந்து வருவதாக, வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ் – இந்தி தொடர்பு :

தமிழ் மொழியிலும், இந்தி மொழியிலும் நிறைய வார்த்தைகள், ஒரே அர்த்தத்தில் கூறப் பட்டு வருகின்றன. இந்தி மொழியில் “அனுபவ்” என்பது, தமிழ் மொழியில் “அனுபவம்” என ஆகின்றது. இந்தியில் “சூர்யா” என்பது தமிழில் “சூரியன்” என ஆகின்றது. இது போல நிறைய வார்த்தைகள்,  அன்றாட உரையாடல்களில், உபயோகப் படுத்தப் படுகின்றது.

இந்தி மொழியை கற்க, தமிழர்கள் பலர் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு சம வாய்ப்பு கிடைப்பது இல்லை. அரசுப் பள்ளிகளில், தமிழ் அல்லாத மற்ற மொழிகளும் கற்பிக்கப் படுவது போல, இந்தி மொழி கற்பிக்கப் படுவது இல்லை. அதனால், ஏழை எளிய மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கட்டணம் கொடுத்து, தனியார் பள்ளிகளிலும், தனியார் கல்வி நிறுவனத்திலும், இந்தி மொழியை ஆர்வமாக படித்து வருகின்றனர்.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இந்தி தேர்வு அதிகம் எழுதும் தமிழர்கள் :

மகாத்மா காந்தியால், 1918 ஆம் ஆண்டு, “இந்தி பிரச்சார சபா” தமிழகத்தில் தோற்றுவிக்கப் பட்டது.

2017 ஆம் ஆண்டு மட்டுமே, ஒரு லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் முதல் நிலை இந்தி தேர்வான, “ப்ராத்மிக்” தேர்வை எழுதினார்கள்.

சென்னையில் மட்டும் 220 தேர்வு நிலையங்கள் இருந்தன. தமிழகத்தின்,  மற்ற ஊர்களில் 158 தேர்வு நிலையங்கள் இருந்தன. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா என நான்கு மாநிலங்களில் மட்டுமே 3,787 இந்தி ஆசிரியர்கள் உள்ளனர் எனவும், தமிழகத்தில் மட்டுமே 10 ஆயிரத்து 709 இந்தி ஆசிரியர்கள் உள்ளனர் எனவும், 2017 ஆம் ஆண்டின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற நான்கு மாநிலங்களிலும் இருந்ததை விட, சென்னையில் மட்டுமே அதிகமான இந்தி ஆசிரியர்கள் உள்ளனர். சென்னையில் மட்டுமே 4,678 ஆசிரியர்கள் இருந்தனர். மற்ற நான்கு மாநிலங்களையும் சேர்த்து மூன்று ஆயிரத்து 787 இந்தி ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர்.

1927 ஆம் ஆண்டு, “பெரியார்” என அழைக்கப் படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், ஈரோட்டில் உள்ள தன்னுடைய வீடு ஒன்றை, இந்தி மொழி பயிற்சிக் கல்லூரிக்கு தானமாக அளித்தார்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் :

கர்நாடகாவில் வாழும் தமிழர்கள், தமிழுடன் கன்னட மொழியையும் பேசி வருகின்றனர். ஆந்திராவில் வாழும் தமிழர்கள், தமிழ் மொழியுடன் தெலுங்கு மொழியையும் பேசி வருகின்றனர். தில்லியில் வாழும் தமிழர்கள், தமிழுடன் இந்தி மொழியையும் பேசி வருகின்றனர். அதுபோல உலகமெங்கும் வாழ்ந்து வரும் தமிழர்கள், தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதுடன், அந்த ஊரில் உள்ள மாநில மொழியையும், விருப்பப் பட்டு கற்றுக் கொண்டு வருகின்றனர்.

நமது நாட்டில், எல்லா மாநிலங்களிலும், பல மொழிகள் பயிற்றுவிக்கப் பட்டும், பேசப் மட்டும் வருகின்கிறது. தாய் மொழியில் இல்லாமல், மற்ற மொழிகளில் பேசுவதால், அந்த மாநில மொழிக்கு உண்டான முக்கியத்துவம் குறைந்து விடும் என சிலர் கூறுவது வேடிக்கையானது.

ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஏனெனில், நமது நாட்டில், எல்லா மாநிலங்களிலுமே, அந்த மாநிலத்தின் மொழி மிகவும் சிறப்புடனே வளர்ச்சி பெற்று வருகின்றது.

ஓடியாவில் இந்தி மொழி பேசப் பட்ட போதும், அங்கு “ஓடியா” மொழி சிறப்புடனே இருக்கின்றது. அது போலவே, எல்லா பகுதிகளிலும் பரவலாக இந்தி மொழி பேசப்பட்ட போதும், அந்த மாநில மொழி சிறப்பாகவே இருந்து வருகின்றது.

பல மொழிகளைக் கற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள், “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்…” எனப் பாடினார். மற்ற மொழிகளைக் கற்கும் போது தான், தமிழ் மொழியின் சிறப்புகளை, நம்மால் தெரிந்துக் கொள்ள முடியும்.

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு” – என்ற வள்ளுவரின் திருக்குறளுக்கு ஏற்ப, நிறைய மொழிகளைப் படித்து, நிறைய கற்று, தமிழின் சிறப்பை உணர்ந்து, நல்ல ஒரு தமிழனாக வாழ்ந்து, நமது இந்தியாவை உயர்த்துவோம்.

பல மொழி கற்போம்… தமிழ் மொழி காப்போம்…

  • அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories