பாரத ரத்னா மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா

Published:

visweswaraiah - 2026
  • விஜே ஸ்ரீராம்

எப்பேர்ப்பட்ட சிறந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது இந்த நாடு?

முட்டெனஹள்ளி என்கிற ஒரு சிறு கிராமத்தில் ஸ்ரீனிவாச சாஸ்திரி என்கிற ஒரு சாதாரண பள்ளி வாத்தியாருக்கு மகனாக பிறந்தவர்.. இவர் குடும்பம் ஆந்திராவை சேர்ந்த மோக்சகுண்டம் என்கிற ஒரு ஆந்திராவை சேர்ந்த ஒரு கிராமத்தை பூர்வீகமாக கொண்டது..

தனது 12 வது வயதில் தனது தந்தையை பறிகொடுத்தார்.. பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு தனது தாயின் உதவியோடு பள்ளி படிப்பையும், பிறகு இன்ஜினியரிங் (கட்டிட காலையில்) படிப்பையும் முடித்தார்..

விஸ்வேஸ்வரய்யா பம்பாயின் பொதுப்பணித்துறையில் பணிபுரிந்தார், பின்னர் இந்திய நீர்ப்பாசன ஆணையத்தில் சேர அழைக்கப்பட்டார். அவர் டெக்கானில் மிகவும் சிக்கலான நீர்ப்பாசன முறையை செயல்படுத்தினார்.

புனேவிற்கு அருகிலுள்ள கடக்வாஸ்லா நீர்த்தேக்கத்தில் முதன்முதலில் 1903 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அற்புதமான தானியங்கி நீர் வெள்ளக் கதவுகளின் அமைப்பை அவர் வடிவமைத்து காப்புரிமை பெற்றார். இந்த வாயில்கள் அணைக்கு எந்த சேதமும் ஏற்படாமல், நீர்த்தேக்கத்தில் உள்ள சேமிப்பகத்தின் வெள்ளப்பெருக்க அளவை மிக உயர்ந்த அளவிற்கு உயர்த்த பயன்படுத்தப்பட்டன. இந்த வாயில்களின் வெற்றியின் அடிப்படையில், குவாலியரில் உள்ள டைக்ரா அணையிலும், கர்நாடகாவின் மாண்டியா/மைசூரில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர (KRS) அணையிலும் இதே அமைப்பு நிறுவப்பட்டது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

1906-07 ஆம் ஆண்டில், நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புகளைப் படிக்க இந்திய அரசு அவரை ஏடனுக்கு அனுப்பியது. அவர் தயாரித்த திட்டம் ஏடனில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

ஹைதராபாத் நகருக்கு வெள்ளப் பாதுகாப்பு அமைப்பை வடிவமைத்தபோது விஸ்வேஸ்வரய்யா பிரபல அந்தஸ்தைப் பெற்றார். விசாகப்பட்டினம் துறைமுகத்தை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். இந்த அணை கட்டப்பட்டபோது ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கத்தை உருவாக்கியது. விஸ்வேஸ்வரய்யா பீகாரில் கங்கையின் மீது மொகாமா பாலம் அமைப்பதற்கான மதிப்புமிக்க தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவருக்கு வயது 90க்கு மேல்.

அவர் “நவீன மைசூர் மாநிலத்தின் தந்தை” என்று அழைக்கப்பட்டார். மைசூர் மாநில அரசுடன் பணியாற்றிய போது, ​​ஸ்ரீ பத்ராவதியில் மைசூர் சோப்பு தொழிற்சாலை, Parasitoid ஆய்வகம், Mysore Iron & Steel Works (தற்போது Viswesvarayya Iron & Steel Works limited என அழைக்கப்படுகிறது) ஆகியவற்றை நிறுவப்பட்டதற்கு ஒரே காரணம்..

அது மட்டுமல்லாமல் ஜெயச்சாமராஜேந்திரா பாலிடெக்னிக் பெங்களூர், பெங்களூரு வேளாண்மை பல்கலைக்கழகம், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், செஞ்சுரி கிளப், மைசூர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (கர்நாடக வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு), கர்நாடகாவில் உச்ச வர்த்தக சபை (Karnataka apex chamber of commerce ) , பல்கலைக்கழக விஸ்வேஸ்வரயா பொறியியல் கல்லூரி (பெங்களூரு) மற்றும் பல தொழில்துறை சம்மநதமான விஷயங்கள் கர்நாடகாவில் உருவாக இவரே மூல காரணம்..

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

அவர் மைசூர் திவானாக இருந்த காலத்தில் தொழில்துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவித்தார். திருமலை மற்றும் திருப்பதி இடையே சாலை அமைப்பதற்கான திட்டத்தை வகுத்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு..

அவர் நேர்மை, time management மற்றும் ஒரு எடுத்துக்கொண்ட ஒரு காரியத்திற்க்காக அவர் காட்டும் அற்பணிப்புக்காக அறியப்பட்டவர்..

பெங்களூர் பிரஸ் மற்றும் பேங்க் ஆஃப் மைசூர் ஆகியவை அவரது பதவிக்காலத்தில் நிறுவப்பட்டன. அவரது இயல்பின் மிக முக்கியமான பகுதி கன்னடத்தின் மீதான அவரது காதல். கன்னடத்தின் முன்னேற்றத்திற்காக கன்னட பரிஷத்தை நிறுவினார். கன்னட அன்பர்களுக்கான கருத்தரங்குகள் கன்னடத்திலேயே நிறுவப்பட்டு நடத்தப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

விஸ்வேஸ்வரய்யா தெற்கு பெங்களூரில் உள்ள ஜெயநகரின் முழுப் பகுதியையும் வடிவமைத்து திட்டமிட்டதாக அறியப்படுகிறது. ஜெயநகரின் அடித்தளம் 1959 இல் அமைக்கப்பட்டது. இது பெங்களூரில் திட்டமிடப்பட்ட முதல் சுற்றுப்புறங்களில் ஒன்றாகும், அந்த நேரத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரியது அது..

தான் பிறந்து வளர்ந்த ஊர் வருங்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த காலத்திலேயே யோசித்து, அடுத்த தலைமுறைக்கு பெரிய அளவில் செதுக்கி பரிசாக கொடுத்து சென்றார்.. இன்று பெங்களூரு பெரிய தொழில் நகரமாக இருக்கிறது (IT உட்பட) அதற்க்கு இவர் காணிய கனவும், அந்த கனவை நினைவாக்க கொடுத்த உழைப்புமே காரணம்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Related articles

Recent articles

spot_img