அருப்புக்கோட்டையில் விசாரணை கைதி மரணம் அடித்து கொன்றதாக மனைவி புகார்..

IMG 20220914 WA0131 - 2026

அருப்புக்கோட்டையில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற கணவர் இறந்து விட்டதாக போலீஸ் கூறியதால் தன் கணவரை அடித்துக் கொன்று விட்டதாக மனைவி புகார்செய்தார்.அரசு மருத்துவமனை முற்றுகையிட்டு உடலை வாங்க மறுத்து இரண்டு இடங்களில் சாலைமறியல் நிகழ்ந்த தால் பரபரப்பு ஏற்பட்டது.


அருப்புக்கோட்டை எம் டி ஆர் நகரில் நேற்று ஒரு வீட்டில் வாலிபர் உள்ளே புகுந்ததாக கூறி அப்பகுதி மக்கள் ஒருவர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .காவல்துறையினர் விசாரணையில் செம்பட்டியைச் சேர்ந்த தங்கமாரி என்பவருடைய மகன் தங்கப்பாண்டி எனவும் அவர் மனநிலை சரியில்லாததால் அப்படி நடந்து கொண்டார் எனவும் தெரியவர அவர் விடுக்கப்பட்டார் அதன் பின் எம்.டி.ஆர் நகர் பகுதி மக்கள் விசாரணைக்கு கூட்டிச் சென்றவரை ஏன் விடுவித்தீர்கள் என காவல்துறையினரிடம்கோரிக்கைவைத்தனர்.

அதன் பின் மீண்டும் தங்கபாண்டியை டவுன்போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர் .ஆனால் இன்று காலை மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லை என கூறி அவரை அனுமதித்ததாகவும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாகவும் தங்கபாண்டியன் மனைவி கோகிலாதேவிக்கு தகவல் கூறியுள்ளனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

அதன் அடிப்படையில் மருத்துவமனை வந்த தங்கப்பாண்டியனின் மனைவி கோகிலா தேவிதனது கணவர் காவல் துறையால் அடித்துக் கொல்லப்பட்டார் என கூறி உறவினர்களுடன் சேர்ந்து உடலை வாங்க மறுத்து அரசுமருத்துவமனையை முற்றுகை இட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தங்கபாண்டியன் மனைவி கோகிலாதேவிகூறுகையில் எங்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளன‌ எனது மாமனார் தங்கமாரியுடன் சேர்ந்து சாயப்பட்டறையில் எனது கணவர் வேலை பார்த்து வருகிறார் .நேற்று எனது கணவர் எம் டி ஆர் நகரில் ஒரு வீட்டில் உள்ளே புகுந்தார் என கூறிஅவரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர் அதன் பின் எனது கணவர் தங்கப்பாண்டிக்கு மனநிலை சரியில்லை எனக் கூறி இராமனுஜபுரத்தில்உள்ள அன்னை மனநல காப்பகம் இல்லத்தில் சேர்த்ததாகவும் அதன் பின் மீண்டும் மாலை எனது கணவரை அங்கிருந்து போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் கூறினார் .

இதனிடையே நேற்று காலை கணவருக்குஉடல்நிலை சரியில்லை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் என போலீசார் கூறினர் .அங்கு வந்து பார்க்கையில் மருத்துவர் ஏற்கனவே உங்கள் கணவர் இறந்துவிட்டார் என கூறிவிட்டார் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் எனது கணவரை அடித்து கொன்று விட்டனர். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

அதன்பின் தங்கபாண்டியன்உடலைவாங்கமறுத்துஅவரதுமரணத்திற்குகாரணமாக இருந்தவர்ள்மீது நடவடிக்கை எடுக்க கோரி அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் அதேபோல் ஆத்திபட்டி பகுதியிலும் தங்கபாண்டியனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த மதுரை சரக டி ஐ ஜி பொன்னி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .

மேலும் வருவாய் கோட்டாட்சியர் கல்யாண் குமார் வருவாய் வட்டாட்சியர் அறிவழகன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories