பி எஃஐ-துருக்கியின் கூட்டும்
இந்தியாவின் கவலையும்
“மத தீவிரவாதம் அதன் ‘கொள்கைகளுக்கு’ இணங்கி தங்களைத் தாங்களே அர்ப்பணிகாதவர்களுக்கு மிகவும் ஆபத்தானது. அது அதிகார கட்டமைப்புக்கு ஏங்குகிறது – மேலும் அதிகாரத்தை கருவியாக பயன்படுத்தி அழிவை கட்டவிழ்க்கிறது, எதிப்பவர்களை பலிகிடாவாக்குகிறது. தீவிரவாதிகளுக்கு அடிபணிவது அவர்களை பலப்படுத்துவது மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது- மேலும் மோசமாக்கி, அவர்களை ஊக்குவிக்கும் செயல்”.
– கிறிஸ்டினா எங்கெலா
சமீபத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்னும் நாளிதழில் வெளிவந்த ஒரு செய்தி துருக்கி, இந்தியாவின் பி எஃஐ போன்ற இயக்கங்களுக்கு உதவிசெய்து ஒரு பெரிய தாக்குதலுக்கு திட்டமிடுகிறது என்பதாகும்.
இச்செய்தி துருக்கியின் கடந்தகால நிகழ்வுகளான டோஹா (கத்தார்) ஐ இந்திய துணை கண்ட விவகாரகளுக்கு பயன்படுத்த முற்பட்டதில் இருந்து உறுதியாகிறது. துருக்கியின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கை மேலும் உறுதிப்படுத்தியது என்னவென்றால் பிஎஃஐ போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவளிப்பது அங்காராவை தலைநகராக கொண்ட ரெசெப் தயிப் எர்டோகன் அரசின் கருஷனை பெற்ற இயக்கங்கள். இந்தியாவில் அங்காரா திட்டத்திற்கு உதவுவதற்குப் பதிலாக தங்கள் அமைப்புக்கு நிதியுதவி தேடி துருக்கியர்களை சந்திப்பதற்காக PFI தீவிரவாத அமைப்பின் சில உறுப்பினர்கள் முன்னதாக கத்தாருக்குச் சென்றபோது துருக்கிய-PFI சதியின் ஒரு ஆதாரம் தெளிவாக அம்பலமானது.
கடந்த ஆண்டு இந்தியாவில் பல்வேறு பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தியதற்கு துருக்கியின் ஆதரவுடன் கத்தாரின் நிதியுதவியை PFI பெற்றதற்கு, இந்திய உளவுத்துறையிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
துருக்கி தன்னை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் பாதுகாவலனாக காட்டிக் கொள்ள விரும்புகிறது, இந்த செயல்பாட்டில், PFI போன்ற தீவிரவாத குழுக்களில் சேருவதைத் தவிர வேறு வழயில்லை என்ற நிலைக்கு, முஸ்லிம்களை தள்ளும் கட்டாயத்தில் உள்ளது. இந்த நவடிக்கைகள் மூலம் தங்கள் எஜமானர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வன்முறை நடவடிக்கைகள் பிரயோகிக்கின்றனர்.
உலக அளவில் இஸ்லாமிய உலகில் சவுதி அரேபியாவின் ஆதிக்கத்தை சவால் செய்ய எர்டோகனின் தொடர்ச்சியான முயற்சியின் பின்னணியாக இந்த நடவடிக்கை இருந்து வருகிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் முன்மாதிரியாக கொள்ள ஒட்டோமான் மரபுகளின் மறுவடிவமாக, பழமைவாத துருக்கியை முன்னிறுத்துகிறது. துருக்கிய-பிஎப்ஐ பயங்கரவாத நடவடிக்கைகள் இந்தியாவில் மட்டும் அல்ல. கணிசமான முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட அண்டை நாடுகளில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். இது இந்தியாவின் இருப்பை அச்சுறுத்தி ஒரு உறுதியற்ற தன்மையை உருவாக்கும்.
பொருளாதார முன்னணியில் இந்தியா ஸ்திரத்தன்மை அடைய போராடிக் கொண்டிருக்கும் வேளையில், PFI போன்ற மக்கள் விரோத சக்திகள் முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு, ஜிஹாத் என்று சொல்லி பயங்கரவாதப் பாதையில் திருப்ப முயற்சிக்கின்றன. ஜிஹாத் என்றால் உண்மையில் என்ன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது தனக்கும் பிறருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல் தடுப்பதையே குறிக்கிறது.
மதத்தின் பெயரால் சுற்றத்தாருடன் சண்டையிடுவதை இஸ்லாம் ஒருபோதும் கறப்பிப்பதில்லை. PFI மீது அனுதாபத்தை வளர்க்கும் முன், முஸ்லிம்கள் முஸ்லிம்களின் நலனுக்காக பாடுபடுவதாக கூறிக்கொண்டாலும், அவர்களின் ஒவ்வொரு செயலும் வெறுப்பு, பழிவாங்கும், அரசியல் கொலைகள் போன்றவற்றால் அமைதியை விரும்பும் முஸ்லிம்களுக்கு விரோதமான சூழலை உருவாக்குகிறது என்பதை உணர வேண்டும்.
முஸ்லிம்களாகிய நாம் யாருடைய பாதையை பின்பற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்; முஹம்மது நபியின் பாதை அல்லது PFI போன்ற தீவிரவாத அமைப்புகள் காட்டிய பாதை. நமது தேர்வு எதிர்காலத்தில் நம் குழந்தைகளை பாதிக்கும் என்பதால் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.