சிதம்பரம் கோயிலுக்கு தேவை, மத்திய அரசின் பாதுகாப்பு!

IMG 20230628 WA0001 - 2026

கடலூர் மாவட்ட காவல்துறை அரசியலைப்பு சட்டத்தை மீறும் செயலை அரங்கேற்றியுள்ளது இன்று சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜைதாரர் தீட்சிதரை தாக்கியது அவரது மத உணர்வையும், அரசியல் சாசன உரிமையும் மீறும் செயலாகும். அடிப்படை மத உரிமையை மீறும் செயலாகும். கடலூர் மாவட்ட காவல்துறை அரசியலமைப்பு மீறலை செயல்படுத்தி அரங்கேற்றியுள்ளது என கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் சிவராமதீட்சிதர் மற்றும் கோயில் வழக்குரைஞர் ஜி.சந்திரசேகர் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.

நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் டி.எஸ்.சிவராமதீட்சிதர் மற்றும் கோயில் வழக்குரைஞர் ஜி.சுந்திரசேகர் ஆகியோர்  செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தவை….

புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெரிய வரலாற்று பிழை சம்பவம் நடைபெற்றுள்ளது. கோயில் வரலாற்றிலேயே இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது இல்லை. 

Chidambaram temple dheetchidar2 - 2026

ஆனித் திருமஞ்சன தரிசனம் உத்ஸவம் நடைபெறுவதால் மூன்று நாட்களாக கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைத்தனர். திங்கள்கிழமை காவல்துறையினர் அறநிலையத் துறையினருடன் வந்து பலகையை அகற்றி எடுத்து சென்று விட்டனர். அப்போதும் தீட்சிதர்கள் அமைதி காத்தார்கள். 

செவ்வாய்க்கிழமை காலை முதல் அதிகளவில் காவல்துறையினர் கனகசபை கதவை உடைத்து உள்ளே செல்ல அனுமதிப்போம் என அச்ச உணர்வு ஏற்படும் வகையில் தகவல்கள் வந்தது. இருந்தாலும் தீட்சிதர்கள் மன அமைதியோடு, எந்த அசம்பாவிதம் நடைபெற்றாலும் பாதுகாப்பு வேண்டும் என கேட்டு காவல்துறையில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தார்கள். 

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!
IMG 20230628 WA0000 - 2026

செவ்வாய்க்கிழமை மாலை சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதன் பிறகு நடராஜராகவே மதிக்கப்படும் பூஜைதாரர் தீட்சிதரை திட்டக்குடியைச் சேர்ந்த இந்து அறநிலையத்துறை ஶ்ரீ தேவி, கொளஞ்சியப்பர் கோயில் செயல் அலுவலர் வேல்விழி மற்றும் புவனகிரி நகர காவல் ஆய்வாளர் சரஸ்வதி, சிதம்பரம் உதவி ஆய்வாளர் பொன்மகரம்  மற்றும் பெண் காவலர்கள் கிழக்கு பகுதி வழியாக உள்ளே நுழைந்து பூஜைகாரர் தீட்சிதரை தாக்கி  நிலை குலைய வைத்து பூநூல் அறுபடும் வகையில் நெட்டி தள்ளி கனகசபை மீது ஏறி கீழே இறங்கியுள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பான விவரங்கள் பதிவுதபால் மூலம் காவல்துறைக்கு தீட்சிதர்களால் அனுப்பப்படும். இந்த தாக்குதல் நடைபெற்றது அவரது மத உணர்வையும், அரசியல் சாசன உரிமையும் மீறும் செயலாகும். அடிப்படை மத உரிமையை மீறும் செயலாகும். 

கடலூர் மாவட்ட காவல்துறை அரசியலமைப்பு மீறும் செயலை செயல்படுத்தி அரங்கேற்றியுள்ளது. இது சிதம்பரம் கோயில் வரலாற்றில் கருப்பு தினமாகும். இதற்கு உரிய வகையில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். 

காவல்துறையே பூஜைகாரரை தாக்கும் அளவிற்கு சம்பவம் நடைபெற்ற பிறகு என்ன சொல்வது. பொதுதீட்சிதர்கள் மீது ஒன்றரை ஆண்டுகளாக தமிழகஅரசு நிறைய இடையூறு செய்து வருகிறது. பொய் புகாரின் அடிப்படையில்

ALSO READ:  சனாதன தர்மத்தில் வேறுபாடுகள்; சர்ச்சைகள்; தீர்வு என்ன?

மனித உரிமை மீறல்கள், கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் தீட்சிதர்கள் அனைவரும் அச்ச உணர்வில் உள்ளார்கள். 

இனிமேல் தீட்சிதர்கள் சுதந்திரமாக தங்கள் கடமையையும், மத  பூஜைகளை செய்வது என்றால், அவர்களுக்கு மத்திய பாதுகாப்பு படை போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தீட்சிதர்கள் சொன்ன சொல்லை மீறுபவர்கள் அல்லர்.

புதன்கிழமை முதல் கனகசபை மீது பூஜை நேரங்களைத் தவிர பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழக்கம்போல் அனுமதிக்கப் படுவார்கள். அரசாணை பொறுத்த வரை தீட்சிதர்கள் சார்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது… என்றார்கள்…

இதன் அடிப்படையில் பார்த்தால்….

சிதம்பரம் விவகாரத்தில்….

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு செயல் படுகிறது என்றால்… 

சட்டத்தை பாதுகாக்க வேண்டிய மாநில அரசின் காவல்துறை அதிகாரிகளே சட்டவிரோதமாக கதவை உடைத்துக் கொண்டு படியேறி தகராறு செய்திருக்கிறார்கள் என்றால்…

மாநில அரசின் காவல்துறையையோ மாநில அரசையோ நம்புவதற்கு இல்லை. எனவே மத்திய அரசின் பாதுகாப்பு சிதம்பரத்துக்கு தேவைப்படுகிறது என்பது தெரிய வருகிறது.

ஏற்கனவே தில்லை சிதம்பர நாதனையும் திருவரங்க நாதனையும் ஏதோ செய்வோம் என்று கொள்கை முழக்கமிட்டவர்கள் இன்று ஆட்சிக்கு வந்த பின்னர் தங்கள் கொள்கைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

எனவே உள்நோக்கத்துடன் இந்துக்களின் கோயில்களை நிர்மூலமாக்கி, கொள்ளையடித்துக் கொண்டு  வரும் நாத்திக திமுக அரசின் கொள்கைகளை செயல்படுத்துவதை எதிர்க்க வேண்டும் என்றால் மத்திய அரசு தலையிட வேண்டும் என்பதை கோருவதைத் தவிர வேறு வழி இல்லை. எனவே ஆளுநர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த அல்லது வழிபாட்டு முறைகளைச் சேர்ந்தவர்களை, தங்கள் கொள்கையை செயல்படுத்துவது என்ற பெயரில் அரசாட்சிக்கு வந்த பிறகு நசுக்குவதும் சொல்லவியலாத கொடுமைகளை இழைப்பதும் திமுக அரசின் திட்டமாக இருப்பதால்… 

அரசுத்துறை கேள்விக்கு இடமாகிறது.

 எனவே தீட்சிதர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படை சிதம்பரம் கோயிலுக்குள் பாதுகாப்புக்கு இறங்க வேண்டும்.

நாத்திக திமுக அரசின் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும், தமிழக அரசின் ஆட்சியாளர்களுக்கு அடியாட்களாக அதிகாரபூர்வ அங்கீகாரம் பெற்ற படை போல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவல் துறையினருக்கும் கடிவாளம் போட வேண்டுமென்றால்…. மத்திய அரசின் தலையீடு சிதம்பரம் திருவரங்கம் போன்ற தலங்களுக்கு முக்கியமாகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories