370வது சட்டப்பிரிவு நீக்கம் ஏன்?

article 370
article 370
  • எஸ். ஆர். சேகர் (பாஜக., துணைத் தலைவர்)

பாரதத்தின் எந்தொவொரு ஆளும் கட்சியும் ஒரு முஸ்லிமை இந்தியாவின் உள்துறை அமைச்சராக்க விழைந்ததில்லை- காங்கிரஸ் கட்சி உட்பட.

ஏனென்றால் இந்திய உள்துறை அமைச்சர் பதவி மிக வலிமையானது. அந்தப் பதவியை ஏற்கும் ஒரு முஸ்லிம் எந்தமாதிரி நடந்து கொள்வார் என எதிர்பார்க்க இயலாது என்பதே அதற்குக் காரணம்.

ஆனால் Ex. PM. வி.பி. சிங் அந்த மாபெரும் தவறினைச் செய்தார். காஷ்மீரியான முஃப்தி முகமது சையதை இந்தியாவின் உள்துறை அமைச்சராக அவர் நியமித்தார்

1989-ஆம் வருடம் டிசம்பர் 8-ஆம் தேதி பதவியேற்ற வி.பி. சிங் அமைச்சரவையில் முஃப்தி முகமது உள்துறை அமைச்சரானார்.

அவர் பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கூட முடியாத நிலையில் ஜனவரி 19, 1990-ஆம் வருடம் காஷ்மீரிலிருந்த ஐந்தரை இலட்சம் காஷ்மிரி ஹிந்துக்களான பண்டிட்கள் காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

அவர்களின் மனைவிகளும், பெண்களும் கற்பழிக்கப் பட்டார்கள். அவர்களின் கண் முன்பே அவர்களின் குழந்தைகள் வெட்டிக் கொல்லப் பட்டார்கள்.

ALSO READ:  வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

காஷ்மீரின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவரான டீப்பாலால் டக்ரூ நடுத்தெருவில் வெட்டிச் சாய்க்கப் பட்டார். குற்றுயுராகத் துடித்துக் கொண்டிருந்த அவரது உடலைச் சுற்றி நான்கு பக்கமும் மோட்டார் பைக்குகள் சுற்றிக் கொண்டிருந்தன.

“காஃபிரான” டக்ரூவுக்குத் தண்ணீர் கொடுப்பவர்களும் காஃபிர்களாகக் கருதிக் கொல்லப் படுவார்கள் என எச்சரிக்கப் பட்டார்கள்.

இந்தக் கொடுமைகளைக் கண்டு முஃப்தி முகமதுவோ அல்லது அவரது மகளோ சிறிதும் கண்ணீர் சிந்தவில்லை. ஏன், ஒரு சிறு அறிக்கை கூட வெளியிடவில்லை. இன்றுவரை காஷ்மீரி முஸ்லிம்கள் அதனைக் குறித்துப் பேசுவதும் இல்லை.

இந்தச் சம்பவங்கள் திடீரென நடந்து விடவில்லை. மிகத் துல்லியமாகத் திட்டமிட்டே இதுபோன்ற நடவடிக்கைகள் காஷ்மீரில் மேற்கொள்ளப் பட்டன.

இதே காலகட்டத்தில் திடீரெனெ இந்திய உள்துறை மந்திரியின் மகளைத் தீவிரவாதிகள் கடத்திக் கொண்டு போய்விட்டதாகச் செய்திகள் பரவுகின்றன.

சகோதரர்களே, இதனைக் குறித்து வெளிநாட்டுப் பத்திரிகைகள் எழுதியிருப்பதனை கூகுளில் தேடிப் படியுங்கள். ஏனென்றால் அந்தப் பெண்ணை எந்தத் தீவிரவாதியும் கடத்திச் செல்லவில்லை. அவள் முஃப்தி முகமதின் வீட்டுக்குள்ளேதான் இருந்தாள்.

தீவிரவாதிகளின் தீவிர ஆதரவாளரான முஃப்தியே இந்தக் கட்டுக் கதையைக் அவிழ்த்துவிட்டார். இதை வைத்து இந்தியா அதுவரை பிடித்துவைத்திருந்த 4 காஷ்மீரி தீவிரவாதிகளை விடுதலை செய்தார் முஃப்தி
அதுபோலவே காஷ்மீரைச் சேர்ந்த “செக்குலர்” காஷ்மீரியான குலாம் நபி ஆசாத்தைக் குறித்தும் இங்கு கூற வேண்டும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

திடீரென அவரது வீட்டிலும் ஒரு உறவுக்காரப் பெண் இதேநேரத்தில் திடீரெனெ காணாமல் போய்விட்டாள்! உடனடியாக முஃப்தி 27 காஷ்மீர் தீவிரவாதிகளை விடுதலை செய்ய, சாயங்காலம் அந்தப் பெண் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டாள்!

குலாம் நபிக்கு அடுத்து புரெஃபஸர் ‘சைஃபுதின் சோஸ்’ இன் உறவுக்காரப் பெண்ணும் “திடீரென” காணாமல் போய்விட்டாள்! அவர் வேறொரு கட்சியைச் சேர்ந்தவர்தான் என்றாலும்

அந்த முஸ்லீம் காஷ்மீரிப் பெண்ணுக்கு பதிலாக ஏழு தீவிரவாதிகளை விடுதலை செய்தார் முஃப்தி.

மந்திரம் போட்டது போல அந்தப் பெண்ணும் சாயந்தரமே வீடு வந்துவிட்டாள்!!

இவை அனைத்தும் நடந்த வரலாறு.

மிகச் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்த காஷ்மீர் தீவிரவாதத்தை மிகவும் உக்கிரமாக்கி, பல வெளிநாட்டுத் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து பயங்கரவாதம் செய்வதற்கு வழிகாட்டியவர் முஸ்லிம் உள்துறை அமைச்சரான முஃப்தி முகமது சையதுதான்.

அவருக்குப் பின்னர்தான் காஷ்மீரில் தீவிரவாதம் மிக உச்ச நிலையை எட்டியது.

மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் குஜராத்தில் ஏற்பட்ட கலவரங்களைக் குறித்து ஏகப்பட்ட சப்தமெழுப்பின இந்திய ஊடகங்கள். உங்களுக்குத் தெரியும்.

ALSO READ:  ‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

அவர் மீது வீசப்பட்ட அவதூறுகளுக்கு அளவில்லை. அவருக்கு அமெரிக்க விசா தரக்கூடாது என்று சொல்லும் அளவிற்கு அவர் மீது வெறுப்பினைக் கொட்டின எதிர்க்கட்சிகள்.

அதேசமயம் இந்தியக் குடிமக்களான காஷ்மீரி பண்டிட்கள் அவர்களின் சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டனர்.

ஒரே நாட்டில் இரண்டு பிரதமர்கள் இரண்டு தேசியக் கொடி இரண்டு அரசமைப்புச் சட்டம் இதைத் தான் 370 உறுதி செய்தது இதை நீக்கியது தவறா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories