February 22, 2026, 10:18 AM
26.1 C
Chennai

ஓ… இவையும் அந்தப்புர அடையாளங்களோ?!

sengo andl dmk - 2026

— கே.எஸ். ராதாகிருஷ்ணன் —

செங்கோல்

மதுரை சு வெங்கடேசன் எம்.பி யார்? அவர் எப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்?

மதுரை கீழடி அகழ்வாய்விற்கு மூல காரணமாக அமைந்தவர் வழக்கறிஞர் கனிமொழி மதி @kanimozhimathi
அவர்கள் கொடுத்த வழக்கு தான் இந்த அகழாய்வைத் தொடர்ந்து நடத்துவதற்கான அரசாணைக்கு வித்திட்டது. அதில் இந்த சு வெங்கடேசன் குறுக்கே புகுந்து ஏதோ தன்னால் தான் கீழடி ஆய்வே கண்டுபிடிக்கப்பட்டது என்பது மாதிரி பரப்புரை செய்து கொண்டார்.

கீழடி ஆய்வில் முக்கியப் பங்காற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்து கடந்த பத்து வருடத்திற்குள் எம்பி ஆகி இப்போது மறுபடியும் நாடாளுமன்ற எம்பி ஆகி குறுக்கு வழியான வாய்ப்புகளின் வழியே இடம் பெற்றிருக்கிறார்.

இந்த சு வெங்கடேசன் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் தானே! இவர் ஏன் முல்லைப் பெரியாறு அணைக்குத் தமிழகம் சார்பாக குரல் கொடுக்க மாட்டேன் என்கிறார்.
அதேபோல தேனி மாவட்டத்திற்கான கண்ணகி கோட்டத்திற்கு ஏன் குரல் கொடுக்க மாட்டேன் என்கிறார்?
எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான் நான்தான் என்று சொல்லிக்கொண்டு “ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனம்” என்று திரிகிறார்.

இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காரர்கள் சித்தாந்தம் பேசுவார்கள் கோட்பாடு பேசுவார்கள். கூட்டணி வைப்பார்கள் நடைமுறை பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க மாட்டார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்ற பெயரில் கலை இலக்கிய பேரவை நடத்தி வரும் இந்த அமைப்பில் இருந்தவர் தானே சு வெங்கடேசன். இவரை விட எத்தனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த முன்னோடிகள் இருக்கிறார்கள்? அவர்களெல்லாம் ஏன் இந்த நாடாளுமன்ற பதவிக்கு முன்மொழியப்படவில்லை. அதுதான் போகட்டும் இதே தமு எ க ச சங்கத்தில் அதை தொடர்ந்து நடத்தி வந்து கொண்டிருப்பவர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் தானே! அவர் இப்போது எங்கு இருக்கிறார்! அவருக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை?

இதற்கு மேலாக சு வெங்கடேசன் எல்லாம் தனக்குத்தான் தெரியும் என்பது மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார். ஒருமுறை ஓமந்தூரார் தென்னார்க்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது கூடத் தெரியாமல் தனது பேச்சினூடே ஒருமுறை ஓமந்தூரார் ஓசூர் பக்கத்தைச் சேர்ந்தவர் என்று உளறி கொட்டி இருக்கிறார் இவர் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு போய் என்ன செய்யப் போகிறார்.

கலை இலக்கிய மன்றங்களில் இருந்த
சு வெங்கடேசன் கட்சி மன்றத்திற்குள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சிக்குள் எப்போது வந்தார்? அவருடைய சீனியாரிட்டி என்ன?

எந்தக் கட்சிக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குப் போனாலும் அங்கே ஒரு கட்சிக்காரரும் உருப்படியாக இல்லை. எதோ எம்பிக்கள் ரெக்ரியேஷன் கிளப்பிற்குப் போய்விட்டு வருவது போல டெல்லிக்குப் போய்விட்டுத் திரும்புகிறார்கள்.

இந்த சு வெங்கடேசன் செங்கோலை பற்றி பேசுகிறார்! திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிட்டு இருப்பது செங்கோல் தானே!

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
– திருக்குறள்.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி.

மழையை நம்பி இந்த உலகத்தின் ஜீவராசிகள் உள்ளதுபோல், மன்னவனின் செங்கோலை நம்பி குடிமக்கள் வாழ்கிறார்கள் என்கிறார் வள்ளுவர்!

செங்கோலை பற்றி பாராளுமன்றத்தில் இழிவாக பேசியவர் கையில் வைத்துள்ளது என்னவோ?!

‘அல்லல்உற்று ஆற்றாது அழுவாளைக் கண்டுஏங்கி மல்லல் மதுரையார் எல்லாரும் தாம்மயங்கிக் களையாத துன்பம்இக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது இதுஎன்கொல்?’

மேலும், ‘வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது’ என வளைந்த செங்கோலை நிமிர்த்த தன் உயிரையே விட்ட பாண்டியன் ஆண்ட மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பதுதான் காலக்கொடுமை!

செங்கோல் வைத்திருந்த அரசர்கள் பெண்களை அந்தப்புரத்தில் அடிமையாய் வைத்திருந்தனர் – என்பது அவர் விசனம்.

தமிழ் மரபில் செங்கோல் அறத்தின் அடையாளமே ஒழிய அந்தப்புரத்தின் அடையாளமோ அடிமைகளை ஆதிக்கம் செய்யும் அடையாளமோ இல்லை. மதுரை சேர்ந்த அவருக்கு, மதுரையிலேயே சிலப்பதிகாரம் நடந்ததா கூறும் நிகழ்வுகள் ல்லாம் மறந்து போய் இருக்கும் போல … இந்த ஜனநாயக ஆட்சியிலேயே மாநகர மேயர்களுக்கு அது வழங்கப்படுவது அவருக்கு தெரிலையோ – இல்ல மேயர்கள் எல்லாம் அந்தப்புரங்களில் அடிமைகள் வச்சி இருக்காங்கன்னு சொல்றாரா ? நீதிபதிகளிடம் இன்றும் குறியீடு போல உள்ளது.

செங்கோல் – சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்களின் வாழ்வியலுடன் இணைந்த பெருமைமிக்க அடையாளம்… செங்கோல் பற்றி பெருமைப்படுத்தி திருக்குறள் மற்றும் பல்வேறு சங்க இலக்கியங்களில் பாடல்கள் உள்ளன…

செங்கோல் என்பது தமிழர் அடையாளம் தானே! நேரு கூட தன் முதல் பிரதமர் பதவியை ஏற்கும் பொழுது செங்கோலை திருவாடுதுறை ஆதீன மடத்தில் வாங்கிக் கொண்டுதானே ஆட்சி கட்டிலில் அமர்ந்தார்.. ஒவ்வொரு நாடும் பலவித மாதிரிகளில் ஆட்சியின் சின்னமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த மரபையெல்லாம் கேள்வி கேட்பதற்கு இந்த மகா புத்திசாலி வந்திருக்கிறார் போல் இருக்கிறது. நெருக்கடி காலகட்டத்தில் இதே மார்க்சிஸ்ட்காரர்கள் காங்கிரஸை எத்தனை விதமாகத் திட்டினார்கள்!

இன்று காங்கிரசுக்கு கொடி பிடிக்கிறார்கள். கடந்து 50 வருடங்களாக இவர்கள் தான் காங்கிரஸுக்கு கொடி பிடித்து அதை த் தோளில் தூக்கி ஆடி அதன் மூலம் நாட்டை நாசமாக்கினார்கள். கேரள, மே வங்கம், திரிபுரா என்ற பகுதியில் வேறு நிலை….

வரலாறு தெரியாதவர்கள் வேண்டுமானால் இந்த இப்படிபட்ட இடதுசாரிகளைப் பற்றி கவர்ச்சிகரமாக யோசித்து கொண்டு இருக்கலாம்.

பிறகு இப்போது கேரளாவில் காங்கிரஸ் ஜெயிக்கவில்லையா பார்லிமென்ட்டில் மட்டும் தான் ராகுல் காந்தி ஜெயித்தாரா? என்ன பேசுகிறார்கள் இவர்கள்.பாம்பும் சாகக் கூடாது! தடியும் நோகக் கூடாது! என்ன ஒரு சந்தர்ப்பவாதம்!

கடந்த காலங்களில் இந்த மார்க்சிஸ்ட்டுகள் பெண்ணியப் பிரச்சனைகளையும் தலித் பிரச்சனைகளையும் மட்டுமே பேசி வருகிறார்கள். வர்க்க பேதம்,தொழிலாளர்கள் பிரச்சனை விவசாயக் கூலிகள் பிரச்சனை வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் பற்றி எந்த பேச்சும் பேசுவதில்லை.

தமிழ் நாட்டினுடைய தாவாக்கள் எல்லைகள் நதிநீர் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றிலும் இவர்களுக்கு ஈடுபாடு இல்லை. அதற்காக அவர்கள் போராடுவதுமில்லை. சு வெங்கடேசனை முல்லைப் பெரியாறு பிரச்சனை பற்றி முதலில் பேசச் சொல்லுங்கள்! அதற்கு ஒரு போராட்டத்தை நடத்தச் சொல்லுங்கள்.

அங்கே சிபிஎம் ஆட்சி. அவர்களைப் பயன்படுத்தி தமிழ்நாட்டிற்கு ஏதாவது நல்லது செய்வார்களா இந்த மார்க்சிஸ்ட் காரர்கள் என்று நாமும் பார்க்கலாம். அதை விட்டுவிட்டு சு வெங்கடேசனை வைத்து எல்லாம் தெரிந்தது மாதிரி பேசிக் கொண்டிருக்க கூடாது. மீண்டும் கேட்கிறேன் இவர் எப்போது மார்க்சிஸ்ட் கட்சிக்குள் வந்தார். அதற்கு முன்பு இருந்த உ. வாசுகி போன்ற பல தகுதி வாய்ந்த முறையான நபர்கள் ஏன் தேர்தலில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. உங்களுடைய உள் கட்சிப் பிரச்சனை என்று எதையும் பூசி மெழுகி விட முடியாது?

முல்லைப் பெரியாறு தொட்டு 15 கேரள நதி நீர் பிரச்சனைகள் தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையில் நெடுங்காலமாய் உண்டு. கேரள குப்பைகளை தமிழக எல்லையில் கொட்டல், அட்டப்பாடி தமிழர் சிக்கல் என பல…

இது குறித்து தமிழ்நாடு மார்க்சிஸ்ட்கள் சு.வெங்கடேசனைக் கொண்டு போராடி அவற்றையெல்லாம் தமிழக மக்களின் உரிமை நலத்திற்கு விவசாயத்திற்கு குடிநீருக்குப் போராட்டம் செய்து வாங்கி தர வேண்டும்.

கீழடியைக் காட்டி மேலடி வேலைகளை மறைக்கக் கூடாது.

# செங்கோல் #sengolcontroversy #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories