காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 42): ஹிந்து சங்கடனில் இருந்து ஹிந்து மகாசபாவுக்கு!

Vinayak Damodar Savarkar - 2026

1937ல், ஆங்கிலேய அரசு, பாரதத்திற்கு ஒரு புது அரசியல் சட்டத்தை அறிமுகப் படுத்தியது. அதன்படி, பம்பாய் மாகாணம் என்று அறியப்பட்ட பகுதிக்கு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

அந்த அரசாங்கத்தின், முக்கிய முதல் உத்தரவுகளில் ஒன்று, சாவர்க்கரை எந்த வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்வது. சாவர்க்கர் ஆங்கிலேய அரசு கூறுவது போல், தேசத்திற்கு எதிராகச் செயல்பட்டவர் அல்ல, ஒரு வித்தியாசமான அணுகுமுறை கொண்ட சுதந்திரப் போராளி என்று பம்பாய் மாகாண அரசு அறிவித்தது.

விடுதலைக் காற்றை சுவாசித்த படி ரத்தினகிரியிலிருந்து பம்பாய் நோக்கி புறப்பட்டார் சாவர்க்கர். வழி நெடுகிலும், பல ஊர்களில் சொற்பொழிவாற்றிக் கொண்டு சென்றார். அவற்றில் சங்கிலியும் ஒன்று. சங்கிலியில் நாதுராம், சாவர்க்கரோடு சேர்ந்து கொண்டு பயணக் குழுவில் ஒருவராகப் பங்கேற்றார்.

வழிநெடுகிலும் அவர் கண்ட மக்கள் எழுச்சியின் விளைவாகத் தன்னுடைய தேசப் பணிகளுக்கான செயல்பாடுகளுக்கு ஏற்ற ஊர் பூனா என்று முடிவு செய்து அங்கே குடி பெயர்ந்தார். அங்கே ஒரு தையல் கடை துவங்கினார்; ஆனால் அங்கேயும் ‘ ஹிந்து சங்கடன் ‘ பணிக்கு அதிக நேரம் கொடுத்தார்.

அரசியல் களத்திற்கு சாவர்க்கர் மீண்டும் வந்து விட்டப்படியால், ’ ஹிந்து சங்கடன் ‘ இயக்கம் மேலும் பலத்துடன்,உத்வேகத்துடன், தெளிவான திசையில் வேகமாக பயணிக்கத் தொடங்கியது.

ஆங்கிலேய அரசு அதிகாரிகள் வில்லன்கள் அல்ல, தேசத்தை துண்டாட எண்ணம் கொண்டு விட்ட முஸ்லீம்களே உண்மையான வில்லன்கள், முஸ்லீம்களின் இந்த பிரிவினைக் கோரிக்கையை இந்திய தேசிய காங்கிரஸின் பலவீனமான தலைவர்கள் ஏற்றுக் கொண்டு விடுவார்களோ என்ற சந்தேகம் எழுந்ததால், அவர்களும் வில்லன்கள் எனும் கருத்தை சாவர்க்கர் முன்னிறுத்தினார்.

சாவர்க்கரின் தலைமையின் கீழ் ‘ ஹிந்து சங்கடன் ‘ அமைப்பு,ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்தது. அதன் புது பெயர் ‘ஹிந்து மகாசபா‘.

பாரதத்தை பிளவுப்படாது காத்து, அதன் ஹிந்துத் தன்மையையும் பேண வேண்டும் என்பது அந்த அமைப்பின் முக்கிய கொள்கையாக அறிவிக்கப்பட்டது. இதற்கு வீர் சாவர்க்கர் விளக்கம் அளித்தார்.

‘’ ஹிந்து மகாசபா என்ன எதிர்பார்க்கிறது என்றால், இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே இருக்க வேண்டும்; எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் சம உரிமைகள் இருக்க வேண்டும், கடமைகளும் சமமாக இருக்க வேண்டும்.

முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக, பெரும்பான்மை ஹிந்துக்களிடம் திருடி முஸ்லீம்களுக்கு அதிகச் சலுகைகள் கொடுப்பதை ஏற்க இயலாது; இப்படி முஸ்லீம்களுக்கு சலுகைகள் கொடுக்கும் முயற்சி அவர்கள் உண்மையான குடிமக்களாக இருப்பதற்கு வழி கோலாது‘’ என்றார்.

ஹைதராபாத்தில், ஹிந்துக்கள் இரண்டாந்தர குடிமக்கள் போல் நடத்தப்படுவதைக் கண்டித்து, 1938ல் ஹிந்து மகாசபா அங்கு ஒரு கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்தது. அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பு, நாதுராம் கோட்ஸேயிடம் வழங்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட நாதுராம் கோட்ஸே கைது செய்யப்பட்டார். அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவர் சிறையை விட்டு வெளியே வந்த போது இரண்டாம் உலகப்போர் தொடங்கி விட்டிருந்தது.

இந்தியாவில் அரசியல் களமும் திடுக்கிடச் செய்யும் மாற்றங்களை எதிர்நோக்கத் தொடங்கி இருந்தது.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories