காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 42): ஹிந்து சங்கடனில் இருந்து ஹிந்து மகாசபாவுக்கு!

Vinayak Damodar Savarkar - 2026

1937ல், ஆங்கிலேய அரசு, பாரதத்திற்கு ஒரு புது அரசியல் சட்டத்தை அறிமுகப் படுத்தியது. அதன்படி, பம்பாய் மாகாணம் என்று அறியப்பட்ட பகுதிக்கு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

அந்த அரசாங்கத்தின், முக்கிய முதல் உத்தரவுகளில் ஒன்று, சாவர்க்கரை எந்த வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்வது. சாவர்க்கர் ஆங்கிலேய அரசு கூறுவது போல், தேசத்திற்கு எதிராகச் செயல்பட்டவர் அல்ல, ஒரு வித்தியாசமான அணுகுமுறை கொண்ட சுதந்திரப் போராளி என்று பம்பாய் மாகாண அரசு அறிவித்தது.

விடுதலைக் காற்றை சுவாசித்த படி ரத்தினகிரியிலிருந்து பம்பாய் நோக்கி புறப்பட்டார் சாவர்க்கர். வழி நெடுகிலும், பல ஊர்களில் சொற்பொழிவாற்றிக் கொண்டு சென்றார். அவற்றில் சங்கிலியும் ஒன்று. சங்கிலியில் நாதுராம், சாவர்க்கரோடு சேர்ந்து கொண்டு பயணக் குழுவில் ஒருவராகப் பங்கேற்றார்.

வழிநெடுகிலும் அவர் கண்ட மக்கள் எழுச்சியின் விளைவாகத் தன்னுடைய தேசப் பணிகளுக்கான செயல்பாடுகளுக்கு ஏற்ற ஊர் பூனா என்று முடிவு செய்து அங்கே குடி பெயர்ந்தார். அங்கே ஒரு தையல் கடை துவங்கினார்; ஆனால் அங்கேயும் ‘ ஹிந்து சங்கடன் ‘ பணிக்கு அதிக நேரம் கொடுத்தார்.

ALSO READ:  இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

அரசியல் களத்திற்கு சாவர்க்கர் மீண்டும் வந்து விட்டப்படியால், ’ ஹிந்து சங்கடன் ‘ இயக்கம் மேலும் பலத்துடன்,உத்வேகத்துடன், தெளிவான திசையில் வேகமாக பயணிக்கத் தொடங்கியது.

ஆங்கிலேய அரசு அதிகாரிகள் வில்லன்கள் அல்ல, தேசத்தை துண்டாட எண்ணம் கொண்டு விட்ட முஸ்லீம்களே உண்மையான வில்லன்கள், முஸ்லீம்களின் இந்த பிரிவினைக் கோரிக்கையை இந்திய தேசிய காங்கிரஸின் பலவீனமான தலைவர்கள் ஏற்றுக் கொண்டு விடுவார்களோ என்ற சந்தேகம் எழுந்ததால், அவர்களும் வில்லன்கள் எனும் கருத்தை சாவர்க்கர் முன்னிறுத்தினார்.

சாவர்க்கரின் தலைமையின் கீழ் ‘ ஹிந்து சங்கடன் ‘ அமைப்பு,ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்தது. அதன் புது பெயர் ‘ஹிந்து மகாசபா‘.

பாரதத்தை பிளவுப்படாது காத்து, அதன் ஹிந்துத் தன்மையையும் பேண வேண்டும் என்பது அந்த அமைப்பின் முக்கிய கொள்கையாக அறிவிக்கப்பட்டது. இதற்கு வீர் சாவர்க்கர் விளக்கம் அளித்தார்.

‘’ ஹிந்து மகாசபா என்ன எதிர்பார்க்கிறது என்றால், இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே இருக்க வேண்டும்; எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் சம உரிமைகள் இருக்க வேண்டும், கடமைகளும் சமமாக இருக்க வேண்டும்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக, பெரும்பான்மை ஹிந்துக்களிடம் திருடி முஸ்லீம்களுக்கு அதிகச் சலுகைகள் கொடுப்பதை ஏற்க இயலாது; இப்படி முஸ்லீம்களுக்கு சலுகைகள் கொடுக்கும் முயற்சி அவர்கள் உண்மையான குடிமக்களாக இருப்பதற்கு வழி கோலாது‘’ என்றார்.

ஹைதராபாத்தில், ஹிந்துக்கள் இரண்டாந்தர குடிமக்கள் போல் நடத்தப்படுவதைக் கண்டித்து, 1938ல் ஹிந்து மகாசபா அங்கு ஒரு கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்தது. அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பு, நாதுராம் கோட்ஸேயிடம் வழங்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட நாதுராம் கோட்ஸே கைது செய்யப்பட்டார். அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவர் சிறையை விட்டு வெளியே வந்த போது இரண்டாம் உலகப்போர் தொடங்கி விட்டிருந்தது.

இந்தியாவில் அரசியல் களமும் திடுக்கிடச் செய்யும் மாற்றங்களை எதிர்நோக்கத் தொடங்கி இருந்தது.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories