December 5, 2025, 5:13 PM
27.9 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 48): ராணுவ வேலையைத் துறந்த ஆப்தே!

godse apte - 2025

பூனாவில், விமானப் படை அதிகாரிகளுக்கு, ஆப்தே பணி புரியும் விதம் மிகவும் பிடித்துப் போகவே அவருக்கு நிரந்தர பணி நியமனம் தரத் தயாராக இருந்தனர். ஆப்தேயும் அதை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

ராயல் இந்திய விமானப் படையில் ஒரு அதிகாரியாக இருப்பது,ஒரு நல்ல, மரியாதைக்குரிய வசதி வாய்ப்புகளுடன் கூடிய, ஓய்வு பெற்ற பிறகு பென்ஷனுடன் கூடிய…. அருமையான வாய்ப்பாக ஆப்தேக்கு தோன்றியது.

ஆனால் சில மாதங்களிலேயே ஆப்தே அந்த வேலையை ராஜினாமா செய்தார். தற்காலிக, போர் காலப் பணியே போதுமென்றார். அதற்கு அவர் கூறிய காரணம், ஆங்கிலேய அதிகாரிகளுக்கு ஏற்புடையதாக இருந்தது.

சில மாதங்களுக்கு முன்னர்தான், ஆப்தேயின் தந்தை மரணமடைந்து இருந்தார். விதவைத் தாய், சகோதர, சகோதரிகள் என ஒரு பெரிய குடும்பத்தையே தான் பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால், பூனாவை விட்டு வேறு ஊருக்கு நகர முடியாத நிலை இருப்பதாகக் கூறினார்.

நிரந்தர உத்தியோகத்தை (PERMANENT COMMISSION) ஏற்றுக் கொண்டால் பணி மாறுதல்களுக்கு வாய்ப்பு அதிகம் என்பது அவரது வாதமாக இருந்தது.

ஆப்தேயின் இந்த முடிவிற்கு வேறு ஒரு முக்கியக் காரணமும் இருந்தது.

தன்னுடைய குழந்தையின் உடல் நிலை காரணமாக, அவருடைய மனைவி சம்பா மன நிலை பேதலித்து, குழந்தையை பற்றியே புலம்பிய வண்ணம் இருந்தார். வேறு எதிலேயும் அவருக்கு கவனம் இல்லாது இருந்தது.

குழந்தையை ஓரு மன நலக் காப்பகத்தில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அவருடைய உறவினர்களும், நண்பர்களும் கூறிய யோசனையை ஆப்தே நிராகரித்தார். இப்படியொரு அப்பாவியான, தன்னையே நம்பி பிறந்து விட்ட குழந்தையை, மன நல காப்பகத்தில் சேர்ப்பது சரியில்லை, மேலும் தன் மனைவியை இத்தகைய செயல் முற்றிலுமாக நொறுங்கச் செய்யும் என்று கருதினார்.

இத்தகைய பிரச்சனைக்கு தீர்வே இல்லை. ஆனால் குறைந்த பட்சம் அருகில் இருந்தால் ஆசுவாசப்படுத்தவாவது முடியும், மாற்றலாகிப் போய் விட்டால் இது சாத்தியம் இல்லை என்று கருதியது, ராணுவத்தில் நிரந்தர உத்தியோகத்தை ஏற்காததற்கு முக்கிய காரணமாகும்.

பூனாவிலேயே தன்னை வைத்திருக்கும் வரையில் தற்காலிகப் பணியில் இருப்பது தவறில்லை என்று கருதினார்.

இந்த முக்கிய முடிவை எடுத்தப் பிறகு,போருக்கு பின் என்னவென்று,ஆப்தே முடிவுச் செய்ய வேண்டியிருந்தது.

இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பது நிறுத்தப்பட்டது. ஆப்தேவிற்கு, இப்போது நிறைய நேரமிருந்தது.

இந்த நிலையில்,கட்சியின் கொள்கையை பரப்புவதற்காக,ஒரு புது முயற்சியில் இறங்கப் போவதாகவும், அதில் தன்னுடன் இணைந்து பணியாற்ற விருப்பமா என நாதுராம் கோட்ஸே கேட்ட போது, ஆப்தே உடனே ஒப்புக் கொண்டார்.

அந்த புது முயற்சி, ஒரு தினசரி பத்திரிகையை தொடங்குவது. அதற்காக சாவர்க்கர் 15000 ரூபாய் கடனாகக் கொடுத்து உதவினார்.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories