February 21, 2026, 8:04 AM
25.6 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 73): மதன்லால் பாஹ்வா!

patel nizam - 2026

மதன்லால் பாஹ்வா தற்போது பாகிஸ்தானில் உள்ள பக்பட்டன் நகரைச் சேர்ந்தவர். மெட்ரிகுலேஷன் பாஸ் செய்தவர். இந்திய கப்பற்படையில் ( ROYAL INDIAN NAVY ) வயர்லெஸ் ஆபரேட்டராகப் பணி புரிந்தவர்.

1946 ஆம் ஆண்டில்,கப்பற்படை பணியிலிருந்து கெளரவமாக விடுவிக்கப்பட்ட பின் அவர் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று விட்டார். அதற்கு பிறகு, சில மாதங்கள் கழிந்தபின், பஞ்சாபில்,அவர் வசித்து வந்த பகுதியிலிருந்து ஹிந்துக்கள் அகதிகளாக வெளியேறத் தொடங்கிய போது,அந்த அகதிகளில் ஒருவராக அவரும் பாரதம் நோக்கிப் பயணித்தார்.

கப்பற்படையில் வேலை செய்த போது சிறிது காலம் பம்பாயில் பணியில் இருந்திருந்தபடியால் பம்பாய் அவருக்கு ஒரு பரிச்சயமான ஊர். இதன் காரணமாக, ஒரு அகதியாக 1947 ஜூன் மாத வாக்கில் பாரதத்திற்கு திரும்பிய போது, அவர் பம்பாயை வசிப்பிடமாக தேர்வு செய்தார்.

ஒரு அகதியாகப் பாரதம் நோக்கிப் பயணித்த போது வழிநெடுகிலும் அவர் பட்ட, கண்ட கொடுமையான நிகழ்வுகளைப் பற்றி நாம் ஏற்கெனவே விவரித் துள்ளோம். மதன்லாலுக்கு அப்போது வயது 20.

கட்டையாக குட்டையாக, ஆனால் முறுக்கேறிய முரட்டு உடல் வாகு.ஆழமான பழுப்ப நிற தலைமுடி, சற்றே சிவப்பு நிறமேறிய மீசை. கடினமாக உழைக்கத் தயங்காத மனோபாவம். கோபம் வந்தால், எதிரியை கையோங்கி அடிக்கத் தயங்காதவர்.

முரட்டுத் தோற்றத்துடன், போர்குணம் கொண்டவராக இருந்தார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்,யாராவது ஒரு படைத் தளபதி இவரைப் பார்த்தால்,தன் படையில் உடனே சேர்த்துக் கொண்டு விடுவார்.

தான் சந்தித்து கொண்டிருந்த பிரச்சனைகள் காரணமாக உலகத்தின் மேல் கடுங் கோபம் கொண்டிருந்தார். பம்பாயில், இவர் செம்பூர் அகதிகள் முகாமிலிருந்தார்.

செம்பூர் அகதிகள் முகாம் தேவையற்ற பொருட்களை ஒதுக்குப்புறமாக கொட்டி வைப்பது போல் ‘ஒரு மனித வர்க்கத்தையே‘ கொட்டி வைத்த இடமாக இருந்தது.

அங்கு மதன்லால் பஹ்வா ஒரு அடக்க ஒடுக்கமான, சாதுவான அகதியாக இருக்கவில்லை. தினசரி காலையில் பம்பாய் நகரத்திற்குச் சென்று விடுவார்.

அங்குத் தெருத் தெருவாக வேலைத் தேடி அலைவார். அவருடன் அகதியாக இருந்த ஒருவர் தாதரில் ருயுயி கல்லூரியில் (RUIA COLLEGE) ஹிந்தி பேராசிரியராக இருந்த டாக்டர் J.C. ஜெயின் என்பவரை இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த பேராசிரியர் ஹிந்தியில் பல புத்தகங்களை எழுதியிருந்தார்.அவர் தன் புத்தகங்களை வீடு வீடாகச் சென்று விற்பதற்காக ஒரு ஆளை தேடிக் கொண்டிருந்தார். அந்த வேலை மதன்லால் பஹ்வாவிற்கு கிடைத்தது.சம்பளம் கிடையாது.25% கமிஷன் மட்டுமே.

ஆனால் புத்தங்களை விற்பனை செய்வது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.இரண்டு மாதம் வேலை செய்தும் 50 ரூபாய் மட்டுமே கமிஷன் தொகையாகக் கிடைத்தது.

மதன்லால் பஹ்வா புத்தகங்களை விற்பனை செய்யும் பணியில் இருந்த போது,பம்பாயில் சமூக ஊழியராக பணிபுரிந்து வந்த திருமதி மோதக் என்பவரின் தொடர்பு கிடைத்தது.

அவர் நாடகக் குழு ஒன்றைத் தொடங்க இருந்தார்.அந்த வேலையில் தனக்கு உதவுவதற்காக தன்னிடம் செயலாளராக் சேர்ந்துக் கொள்ளும்படி மதன்லால் பஹ்வாவுடம் கூறினார்.

மதன்லால் பஹ்வா மறுத்து விட்டார். தான் ‘ பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ‘ இறங்கி விட்டதாக மோதக் அம்மையாரிடம் கூறி விட்டார்.

உண்மையிலேயே,MESSRS VASSEN PUSPASEN எனும் அரசு லைசென்ஸ் பெற்று பட்டாசு தயாரித்து வந்த ஒரு தொழிற்சாலையில் மதன்லால் பஹ்வாவிற்கு வேலை கிடைத்தது. ஆனால் பட்டாசு தயாரிப்பு என்பது இந்த தொழிற்சாலையின் வெளித் தோற்றமாக மட்டுமே இருந்தது.

உண்மையில் ரகசியமாக கையெறி குண்டுகளை தயாரிக்கும் இடமாகத்தான் அது இருந்தது. மதக்கலவரங்கள் நாடெங்கும் பரவலாக நடந்து வந்த அந்தக் காலக்கட்டத்தில்,நாட்டு வெடிகுண்டுகளுக்கு நல்ல மவுசு இருந்தது.

குறைந்தது 10 அல்லது 12 கையெறி குண்டு தயாரிப்பு தொழிற்சாலைகளாவது பம்பாயில் இருந்தன. பலமுறை போலீஸ் சோதனைகள் நடத்திய போதும் ,இந்த தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இது போன்றதொரு ‘ பட்டாசு’ தொழிற்சாலையில் தான் மதன்லால் பஹ்வா வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வெடிகுண்டு தயாரிக்கும் மெஷின்களை நேரிடையாக கையாண்டு,வெடிகுண்டுகள் தயாரிப்பதில் பயிற்சியும் அனுபவமும் பெற்றார்.

குண்டுகளை தயாரிப்பது மட்டுமின்றி அவற்றை விற்பனை செய்யும் வேலையிலும் ஈடுபட்டார். இதற்கு,வீடு வீடாகச் சென்று விற்கவே முடியாத டாக்டர் ஜெயினின் புத்தகங்களை விற்பனை செய்வது போன்றதொரு வெளித் தோற்றம் உதவியது.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories