December 6, 2025, 1:10 AM
26 C
Chennai

ஜூன் 8- உலக பெருங்கடல் நாள்: கடலெனும் பொக்கிஷம்!

ocean day
ocean day : World Oceans Day 2021: Odisha sand artist sudharshan patnaik stunning sculpture
  • ஜெயஸ்ரீ.எம்.சாரி, நாக்பூர்

இயற்கை அளித்துள்ள கொடைகளில் மிகவும் வியப்பை ஏற்படுத்தும் வளங்களில் ஒன்று கடல். கடல் என்ற சொல்லே உற்சாகமூட்டும் ஒன்றுதான். இன்று ஜூன்-8. உலக பெருங்கடல் நாள்.

பண்டைத் தமிழகத்தின் பெரும் பகுதி எல்லை, கடல் எல்லையாக இருந்தது. பண்டைத் தமிழரின் ஐவகை நிலப்பரப்பில், கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்றனர். இந்திய கண்டத்தில் கடல் வணிகம் இருந்ததைப் பற்றி பல்வேறு சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன.

பூமியானது நான்கில் மூன்று பகுதி கடல் பரப்பால் நிறைந்துள்ளது. மனிதனுக்கு 80 விழுக்காடு ஆக்சிஜனை தருகின்ற கடல்தான் பூமியின் நுரையீரலாய் இருக்கின்றது. மனிதன் சுவாசிக்கும் காற்றில் பெருமளவை, மரங்களைவிடவும் கடலே உற்பத்தி செய்கிறது என்பதே உண்மை.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் கடல் வளத்தின் பங்கு மறுக்க முடியாது. பண்டைக் காலத்தில் இருந்தே கடலோரப் பகுதிகளை அதிகமாகக் கொண்ட நாடுகளிடையே நடக்கும் வர்த்தகமும் மக்களின் போக்குவரத்தும், அந்த நாடுகளின் பொருளாதார மற்றும் நாகரீகத்தின் வளர்ச்சிக்கு வழி வகுத்திருக்கின்றன. இன்றைய காலக்கட்டத்திலும் கடற்கரைப் பகுதிகளை தன்னகத்தே கொண்ட நாடுகளில், கடல் சார்ந்த பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.

கடலையும் அலையையும் நினைக்கும் போதே ஏற்படும் ஒரு பரவசத்தினை வார்த்தைகளால் அடக்க முடியாது. கடலில் இருக்கும் சிப்பிக்குள் இருக்கும் முத்துக்களை என் சொல்வது? ” முத்துக் குளிக்க வாரீகளா, மூச்சை அடக்க வாரீகளா?” – என்றப் பாடலை முணுமுணுக்காதவர்கள் உண்டோ?

பொதுவாக, கடலினுள் சென்று மீன் பிடிக்கச் செல்பவரின் படகின் ஒருப்பக்க கயிறை, அந்த ஆணின் மனைவியின் சகோதரன் தான் பிடித்துக் கொண்டிருப்பான். மைத்துனனின் பிடி அவ்வளவு மகத்துவம் வாய்ந்ததாம்.

மனிதனின் ஒவ்வொரு உணர்வுக்கும் எடுத்துக்காட்டாக கடலின் தன்மை குறிப்பிடப்படுகிறது. ‘கடல்’ என்ற சொல்லை உவமையாகக் காட்டாத கவிஞர்களும், எழுத்தாளர்களும் மிகவும் குறைவே. மன அமைதியுடன், நிம்மதியாக இருப்போரின் மனநிலையை வெளிப்படுத்த சீரான அலைகளைக் கொண்ட கடலைப் போன்று இருந்த மனம் என்றும், கோபத்தினை கூறும் போது கடலின் சீற்றம் போல் என்றும் எழுதுவது வழக்கமாகவே உள்ளது.

தன்னுடைய வலிமைக்கு ஏற்றதான இடத்தை ஆராந்து செயல்பட, திருவள்ளுவர்,”
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
,” என்கிறார்.

வலியமையான பெரிய சக்கரங்களை உடைய நெடிய தேர்களே ஆனாலும், அவை கடலில் ஓட இயலாதவையே. அதுபோல் கடலில் செலுத்தப்படுகின்ற கப்பல்கள் நிலத்தில் ஓட முடியாது,என்கிறார்.
இன்றைய கொரோனா போன்ற இடையூறு காலத்தில் பிரதிபலன் பார்க்காமல் செய்யும் உதவிகளின் மதிப்பு கடலை விட பெரியதாகும் என்பதனை
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.”

கப்பல் போக்குவரத்து, மீன்பிடித்தல், எண்ணெய் எடுத்தல், துறைமுகக் கட்டுமானம், கடலில் பிளாஸ்டிக் முதலிய குப்பைகளைக் கொட்டுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் கடல்களின் சீரழிவுக்கு முக்கியக் காரணங்கள்.

கடல்வாழ் விலங்கினங்களுக்கும், பறவைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க மனிதர்கள் உறுதிக் கொள்ள வேண்டிய நேரமிது. கடலைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரமானதும், பூமியின் நுரையீரலான கடல் தாயினை காக்கும் பொறுப்பும் நம்மிடமே உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories