அருமையா செய்ய கருணைக்கிழங்கு காரக் குழம்பு!

Published:

karunai 1 - 2026

கருணைக்கிழங்கு கார குழம்பு:

தேவையான பொருட்கள் :

கருணைக்கிழங்கு – கால்கிலோ
தேங்காய் – கால் மூடி
தக்காளி – ஒன்று
வெங்காயம் – ஒன்று
பூண்டு –  ஒன்று
புளி – எலுமிச்சையளவு
மிளகாய்த்தூள்  – ஒரு மேசைக் கரண்டி
மஞ்சத்தூள் – அரைத் தேக்கரண்டி
தனியாத்தூள் – இரண்டு தேக்கரண்டி
மிளகு, சீரகத்தூள்  –  தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
கடுகு –  ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் – இரண்டு
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

செய்முறை :

karunai kara kuzhambu - 2026

கருணைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கி கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடாக வேகவைத்து வடித்து வைக்கவும்.

தேங்காயுடன் வெங்காயத்தை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.

பூண்டை நசுக்கி வைக்கவும்.

தக்காளியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து புளிக்கரைசலில் சேர்த்து நன்கு கரைத்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு தேவையான நீரை ஊற்றி கலக்கி வைக்கவும்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் பூண்டைப் போட்டு நன்கு வதக்கிய பின் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

புளி கரைசல் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் எல்லாத் தூள்வகைகளையும் போட்டு பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடவும்.

பின்பு அதில் கருணைகிழங்கு துண்டுகளையும் போட்டு தேவையான உப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை நீங்கியதும், ஒரு கொத்து கறிவேப்பிலையைப் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

காரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு ரெடி.

Related articles

Recent articles

spot_img