spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுவெர்டிக்கோ.. தலைசுற்றல் எளிய டிப்ஸ்!

வெர்டிக்கோ.. தலைசுற்றல் எளிய டிப்ஸ்!

- Advertisement -
Ear-pain
Ear pain

வெர்டிகோவில் இருந்து நிவாரணம் பெற உதவும் பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
எலுமிச்சை தைலத்தில் ஆன்டி இன்ஃபிளாமேட்டரி மற்றும் ஆன்டி வைரல் (வைரஸ் தடுப்பு) பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் கவலை, மனச்சோர்வு, உயர் இரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, நரம்பு பதற்றம் மற்றும் வெர்டிகோ போன்ற பல பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க இது ஒரு மூலிகை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் உலர்ந்த எலுமிச்சை தைலத்தை சேர்த்து அதை நன்றாக கொதிக்க விடவும். இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடவும். இந்த தேநீரை வடிகட்டி, சில வாரங்களுக்கு அவ்வப்போது தினமும் குடித்து வரவும்.

மூளைக்கு இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும், குமட்டலை போக்கவும் உதவுகிறது. மேலும் இந்த இஞ்சி ஆனது, மோஷன் சிக்னஸ் மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற வெர்டிகோ தொடர்பான பிரச்சினைகளைத் தணிக்கவும் உதவுகிறது. நீங்கள் வெறுமனே ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது இஞ்சி தேநீரை ஓர் வழக்கமான அடிப்படையில் குடிக்கலாம்.

கொத்தமல்லி விதைகள் அல்லது தனியா (தலை சுற்றலுக்கு ஓர் பிரபலமான ஆயுர்வேத தீர்வாக உள்ளது. ஒரு கப் தண்ணீரில் தலா ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை மற்றும் அம்லா பொடியை சேர்த்து ஊறவைத்து அதனை இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். மறுநாள் காலையில் இந்த கரைசலை வடிகட்டி நீங்கள் குடிக்கலாம். மேலும் சில நாட்களுக்கு தினமும் இதை செய்து வரவும்.

ஏலக்காய், இஞ்சியைப் போலவே ஆரோக்கிய பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இது தலை சுற்றலுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இரண்டு டீஸ்பூன் எள் எண்ணெயை சூடாக்கவும். பின்பு அதில், ஒரு அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் மற்றும் ஏலக்காய் சேர்க்கவும். தயார் செய்த இந்த கலவையை உங்கள் தலையில் மெதுவாக தடவி மசாஜ் செய்யவும். சில மணி நேரத்திற்கு இதை அப்படியே விட்டு விடுங்கள். சில வாரங்களுக்கு இந்த வைத்தியத்தை, வாரத்திற்கு பல முறை செய்து வரலாம்.

துளசியின் காரமான மற்றும் இனிமையான வாசனை ஆனது தலைச் சுற்றல் மற்றும் வெர்டிகோவுக்கு ஒரு நறுமண சிகிச்சையாக செயல்படுகிறது. மூன்று அல்லது நான்கு துளசி இலைகளை ஒரு கப் பாலில் சேர்த்து கொதிக்க விடவும். அவ்வாறு கொதிக்க விடும் போது அந்த வாசனையை உள்ளிழுக்கவும். மற்றும் தூங்குவதற்கு முன் இந்த ஆரோக்கியமான துளசி தண்ணீரை தினமும் குடிக்கவும். மேலும், குறைந்தது சில வாரங்களுக்கு இதை தவறாமல் பின்பற்றவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe