பலம் கூட்டும் பழைய சோறு!

Published:

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில்  நமது ஒரு சிறந்த உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்.

அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன என்று தெரியுமா?
 “தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல…அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்”…!!!
அதாவது, அந்த நம் சிறந்த உணவு “பழைய சோறு…!”

பழையசோற்றின் பலன்கள்:

1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
2.வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
3.உடல் சோர்வை போக்குகிறது
4.உடலில் உள்ள அணுச்சிதைவுகளை தடுக்கிறது
5.உடல் சூட்டை தணிக்கிறது
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும் சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு
என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்…!

இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும்  “HOW to make PALAYA
SORU? என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்தில்.கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்!

ஆனால், நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு “பழையதை” பழித்து வருகிறோம் அது பெரிய தவறு…!!!
சரி…
“பழைய சோற்றை” எப்படி முறையாகச் செய்வது?
1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில்  சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து  6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த உணவு தயார்…!
2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகியவற்றையும் சிறிது சிறிதாக வெட்டிப் போட்டு, தேவைப்பட்டால் சிறிது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்…!!!

ஆகா!!!  இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்…

இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள் நண்பர்களே!
பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள், அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்களான தமிழர்கள்…!!!
இனியாவது  குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம், உடல் நலத்தை பேணுவோம்! “பழையசோறு உண்போம்!

Related articles

Recent articles

spot_img