தமிழ் சினிமா போலீஸ் மாதிரி இருக்கே… சிபிஐ..!

Published:

chidambaram pressconferene - 2026

தமிழ் சினிமாவில் வரும் போலீஸ் மாதிரி இருக்காங்களே சிபிஐ அதிகாரிகள்! என்று கூறுகின்றனர் இன்றைய நிகழ்வுகளைப் பார்த்து விட்டவர்கள்!

நேற்று உயர் நீதிமன்றத்தால் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்ட நிலையில், உச்ச நீதிமன்றமும் உடனடியாக விசாரிக்க முடியாது என்று கைவிரித்து விட்ட நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திடீரென தலைமறைவானார்.

அவர் தலைமறைவானது குறித்து சமூகத் தளங்களில் பெரும் விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுப்பதற்காக இன்று இரவு திடீரென காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்த ப.சிதம்பரம், செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி கொடுத்தார்.

பின்னர் அவசரம் அவசரமாக பேட்டியை முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றார். அவர் சென்ற பின்னர், செய்தியறிந்து சிபிஐ அதிகாரிகள் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் அதற்குள் சிதம்பரம் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இது குறித்து கேலி செய்யும் சமூக ஊடக நெட்டிசன்கள், தமிழ் சினிமா போலீஸ் மாதிரி இப்படி சிதம்பரம் அங்கிருந்து சென்ற பின்னர் சிபிஐ அதிகாரிகள் அங்கு சென்றார்களே! என்று கருத்திடுகின்றனர்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

செய்தியாளர் சந்திப்பு கொடுப்பது என்றால், முன்கூட்டியே ஊடகங்களுக்கு தகவல் கொடுத்திருப்பார்கள். அப்படி ஊடகத்தினர் வரும் வரையில் தகவல் சிபிஐ அதிகாரிகளுக்கு மட்டும் செல்லாமல் இருந்தது எப்படியோ? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் ப.சிதம்பரத்தின் வீட்டுக்குச் சென்றனர் சிபிஐ அதிகாரிகள்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img