புது தில்லி, நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை சோனியா காந்தி ஏற்க மறுத்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த மசோதா குறித்துக் கூறுகையில், மசோதா குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. எதிர்ப்பாளர்கள் இதில் கலந்து கொண்டு விவரம் தெரிவித்தால், மசோதாவை திருத்தம் செய்ய தயார் என்றும் அறிவித்தார். கட்கரியின் கோரிக்கைக்கு கடிதத்தில் பதிலளித்துள்ள சோனியா காந்தி “விவசாய நலனுக்கு எதிரான நிலச் சட்டத்தை ஒருபோதும் ஏற்பதற்கில்லை. விவசாயிகளுக்கு எதிரான எந்த சட்டத்தையும் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது. நிலம் கையகப்படுத்தும் சட்டம் முற்றிலுமாக விவசாய நலனுக்கு எதிரானது. எனவே, நிலச் சட்டத்தை ஒருபோதும் ஏற்பதற்கில்லை. இந்த சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் ஏற்புடையதாக இல்லை. அரசியல் சார்ந்த குறுகிய கண்ணோட்டத்தை விடுத்து முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலச் சட்டத்தை மாற்றாமல் அதே வடிவில் அமல் படுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்தும் மசோதா: பாஜகவின் விவாதக் கோரிக்கையை சோனியா ஏற்க மறுப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

