500 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளது தொடர்பாக 18 நிறுவனங்களின் பெயர்ப் பட்டியலை, மத்திய வருவாய்த் துறை முதல் முறையாக வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி, ஜெய்ப்பூரைச் சேர்ந்த கோல்ட்சுக் வர்த்தக நிறுவனம் ரூ. 75.47 கோடியும், சோமானி சிமெண்ட் நிறுவனம் (ரூ. 27.47 கோடி), ஆப்பிள் டெக் நிறுவனம் (ரூ. 27.07 கோடி), குஜராத்தின் பூனம் தொழிற்சாலை (ரூ.15.84 கோடி) என வரி பாக்கி வைத்துள்ளன. இதுதொடர்பாக, மத்திய வருவாய்த் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியது… வரி வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில், ரூ. 10 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்களின் பெயர்ப் பட்டியல், முதல் முறையாக பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது. இவ்வகையில் 18 நிறுவனங்களைக் குறித்த விவரங்கள், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில், 11 நிறுவனங்கள் குஜராத்தைச் சேர்ந்தவை. நிறுவனங்களின் முகவரிகளும், பான் எண்களும் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சில நிறுவனங்களின் சரியான முகவரி கிடைக்கவில்லை. அவை குறித்து, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
ரூ.500 கோடி வரி பாக்கி: 18 நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

