தெலங்கானா முதல்வர் கேசிஆர் எங்கே? கேட்டுக்குப் பூட்டு! போராட்டத்தில் மக்கள்!

Published:

hyderabad protest gate - 2026

சம்ஷாபாதில் கொடூரமான முறையில் படுகொலையான பெண்ணின் குடும்பத்தார் வசிக்கும் கேட்டட் கம்யூனிடி ‘நட்சத்திர வில்லா’ வில் சனிக் கிழமையில் இருந்து பரபரப்பு நிலவுகிறது.

பெரிய அளவில் காலனிவாசிகளும் பிற இடங்களிலிருந்து வந்த பொதுமக்களும் நுழைவுவாயிலில் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமர்ந்திருந்தனர். காலனி கேட்டிற்கு உள்ளே இருந்து பூட்டு போட்டு போலீசாரும் அரசியல் தலைவர்களும் அங்கு வர வேண்டாம் என்று போர்ட் வைத்துள்ளார்கள்.

அதுமட்டுமின்றி வில்லாவில் இருந்த போலீசாரை கூட வெளியே அனுப்பிவிட்டார்கள். பொதுமக்கள் அங்கேயே அமர்ந்து கொண்டு அங்கு வசிப்பவர்களை மட்டுமே உள்ளே அனுப்புகிறார்கள்.

இத்தனை பெரிய கொடூரம் நடந்து இருக்கையில் முதல்வர் கேசிஆர் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என்று போராட்டக் காரர்கள் கேள்வி எழுப்பினர். அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

hyderabad protest gate1 - 2026

மீடியாவோ தலைவர்களோ யாரும் விசாரிக்க வரவேண்டாம். நியாயம் வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர். அதனால் போலீசாருடன் பல தலைவர்களும் உள்ளே அனுமதிக்கப் படாமல் திரும்பிச் சென்றனர்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

சிபிஎம் தலைவர் ஜுலகண்டி ரங்கா ரெட்டி மற்றும் பிற தலைவர்கள் வந்தபோது மக்கள் அவர்களை உள்ளே நுழைய இடம் கொடுக்கவில்லை. அதனால் அவர்களும் போராட்டம் நடத்துபவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறினர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img