தெலங்கானா பெண் டாக்டர் கொலைக்கு எதிர்ப்பாக சிலுகூர் பாலாஜி ஆலயம் மூடப்பட்டது. மகா பிரதட்சிணம் நடத்தப்பட்டது.
சம்ஷாபாத் பெண் டாக்டர் கொலைக்கு எதிராக சிலுகூர் பாலாஜி கோவிலை 20 நிமிடங்கள் மூடி வைத்தார்கள். சனிக்கிழமை அந்த நேரத்தில் பக்தர்களை பூஜாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை! பக்தர் கூட்டம் கோவில் வெளியிலேயே காத்து இருந்தது.
பெண்கள், இளைஞர் , சிறுமியர் நலனுக்காக சிலுகூர் பாலாஜி ஆலயத்தின் வெளியிலேயே பக்தர்களோடு கூட பூஜாரிகளும் சேர்ந்து மகா பிரதட்சிணம் செய்தார்கள். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்தார்கள்.