வறுமையில் தள்ளிவிட்டது பாஜக அரசு: உணர்ச்சி வசப்பட்ட ப.சிதம்பரம்

Published:

Chidambaram - 2026

வறுமையில் தள்ளி அநீதி இழைக்கிறது பாரதிய ஜனதா அரசு என்று ப.சிதம்பரம் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்

புதுதில்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

அப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. மக்களை வறுமையில் தள்ளி அநீதி இழைத்தது தான்  பாஜக-வின் சாதனை என்றார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்   500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இப்போது வரை 2% பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வரவில்லை என கூறப்படுகிறது.

தற்போது திருப்பதி தேவஸ்தானத்திடம் சுமார் 30 கோடி வரை பழைய ரூபாய் நோட்டுக்கள் இருக்கிறது. இதில் 1000 ரூபாய் நோட்டுகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

தற்போது இதை முழுமையாக கணக்கு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. எவ்வளவு பணம் முழுமையாக இருக்கிறது என்று சில நாட்களுக்குள் தெரியவரும். எனவே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரும்படி தற்போது திருப்பதி தேவஸ்தானம் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இதற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி,  இன்னும் பழைய ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொண்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஏன் திருப்பதி கோயிலில் உண்டியல் பணத்தை எண்ண செல்லக்கூடாது. ஏனெனில் RBI அதிகாரிகளை விட திருப்பதி கோயில் ஊழியர்கள் வேகமாக பணத்தை எண்ணுவர்… என்று  கேலியாக பேசினார்.

மக்களாவது திருப்பதி கோயில் உண்டியலில் பணத்தை போட்டார்கள்… ஆனால்….? என்று நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img