நிலவில் விக்ரம் லேண்டர்… கண்டுபிடித்து படம் அனுப்பியது ஆர்பிட்டர்: இஸ்ரோ சிவன்!

chandrayaan2 tweet jeffbezo - 2026
க்ராபிக்ஸ் படம்

நிலவுக்கு ஆராய்சி செய்வதற்காக அனுப்பப் பட்ட சந்திரயான் 2 திட்டத்தில், நிலவில் தரை இறங்குவதற்காக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடைசிக் கட்டத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்கும் இடம், ஆர்பிட்டர் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவின் தெற்குப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்துடன் நிலவில் தரையில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விக்ரம் லேண்டர் மற்றும், நிலவின் சுற்றுப் பாதையில் அதனுடனேயே சுற்றி ஆய்வுகளை மேற்கொள்ள ஆர்பிட்டர் ஆகியவை அனுப்பப் பட்டன.

விக்ரம் என்று பெயரிடப் பட்ட லேண்டர் மட்டும், நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ., தொலைவு இருக்கும் போது, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையுடனான சிக்னலை இழந்தது. இதனை மீண்டும் பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த லேண்டர் சாதனத்துக்கு ஆயுட்காலம் 14 நாட்கள் தான் என்பதால், அதற்குள் விக்ரம் லேண்டரின் தொடர்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ சிவன் கூறியிருந்தார்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?
chandrayaan lander - 2026

இந்நிலையில் விக்ரம் லேண்டர் தரை இறங்கி இருக்கும் பகுதி கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக இஸ்ரோ சிவன் கூறியுள்ளார்.

லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்ப்பிட்டர் புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளதாகவும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளுக்கு உடனடி பலன் கிடைக்கவில்லை என்றாலும், விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் கூறினார்.

இந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் தரை இறங்குவதற்கு திட்டமிடப் பட்ட இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த லேண்டரை உடன் அனுப்பப் பட்டு சுற்றுப் பாதையில் இருந்த படி புகைப்படங்களை எடுது அனுப்பும் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்தப் படம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார் சிவன்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories