சாவர்க்கர் முதல் பிரதமராக இருந்திருந்தால்… பாகிஸ்தானே இருந்திருக்காது!: உத்தவ் தாக்கரே!

udhhav tackarey - 2026

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செவ்வாயன்று பேசிய ஒரு பேச்சு இப்போது சர்ச்சைக்குரியதாக ஆக்கப் பட்டிருக்கிறது.

வீர சாவர்க்கர் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தானே பிறந்திருக்காது என்று அவர் கூறினார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்துத்துவப் பாதையில் நடைபோடும் அரசு என்பதால், வீர் சாவர்க்கருக்கு நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது அளிக்கப் பட வேண்டும் என்று தாம் கோரியதாகவும் கூறினார் உத்தவ் தாக்கரே.

‘சாவர்க்கர்: ஈக்கோஸ் ஃப்ரம் எ ஃபர்கெட்டன் பாஸ்ட்’ என்ற வீரசாவர்க்கரின் சுயசரிதை நூல் வெளியீட்டுக்காக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வந்திருந்தார். புத்தக வெளியீட்டு விழாவில் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் துணைத் தலைவர் நீல் கோர்ஹே, ஸ்மாரக் ஸ்ரீ ரஞ்சித் சாவர்க்கர் அமைப்பின் தலைவர் டாக்டர் பரத்குமார் ரவுத் மற்றும் சிவசேனா எம்.எல்.ஏ சதா சர்வங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

uddav thackeray - 2026

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, நாட்டின் அரசியல் வளர்ச்சிக்காக மகாத்மா காந்தி மற்றும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஆகியோர் செய்த பணிகளை இழிவுபடுத்த மாட்டேன், ஆனால் இரண்டு குடும்பங்களை விட நாட்டின் அரசியல் அதிகம் உள்ளது என்று கூறினார்.

“14 ஆண்டுகளாக சிறையில் இருந்த சாவர்க்கரைப் போல், பதிலுக்கு நேரு 14 நிமிடங்கள் சிறையில் இருந்து தப்பித்திருந்தால் நான் அவரை வீர் (தைரியமானவர்) என்று அழைத்திருப்பேன்,” என்றார் உத்தவ்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

“வீர் சாவர்க்கரை நம்பாதவர்கள் எனில், மக்கள் பகிரங்கமாக தாக்கப்பட வேண்டும், ஏனெனில் இந்தியாவின் சுதந்திரத்தில் வீர் சாவர்க்கரின் போராட்டத்தையும் முக்கியத்துவத்தையும் அவர்கள் உணர மாட்டாதவர்களாக உள்ளார்கள். ராகுல் காந்தி கூட கடந்த காலங்களில் வீர் சாவர்க்கரை அவமதித்துள்ளார். ” என்று ஒரு கருத்தை அண்மையில் தெரிவித்திருந்தார் உத்தவ்.

இந்தப் புத்தக வெளியீட்டின் போது, ​​முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் குறித்து பலத்த விமர்சனத்தையும் முன்வைத்தார். அவர் கடந்த காலத்தில் சாவர்க்கரை பலமுறை குறிவைத்துள்ளார், மேலும் அந்த ‘காந்தி’ வாரிசு சர்வர்க்கரைப் பற்றிய புதிய புத்தகத்தைப் படித்து அவரைப் பற்றியும் அவரது பணிகள் பற்றியும் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

uddhav thackeray - 2026

சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெறுவதற்காக வீர் சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கோரினார் என்று 2019 மக்களவைத் தேர்தலில் நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி தெரிவித்தார். வீர் சாவர்க்கரே “இந்துத்துவா” என்ற வார்த்தையை பிரபலப்படுத்தியதாகக் கூறப் படுகிறது.

வீர் சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தேர்ந்த அரசியல்வாதி, வழக்கறிஞர்! ‘இந்துத்துவா’ என்ற தத்துவத்தை உருவாக்கியவர். அவர் தனது புத்தகத்தில் “எசென்ஷியல்ஸ் ஆஃப் இந்துத்துவா” என்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

சமூகக் கட்டமைப்பை அன்றைய நடைமுறைக் கண்ணோட்டத்தில் பார்த்த அவர், “வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக இது தேவை” என்றார். இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் போது அபிநவ் பாரத் சொசைட்டியை நிறுவினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு புரட்சிகர நடவடிக்கைகளுக்காக ஐம்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்! அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள செல்லுலார் சிறைக்கு மாற்றப்பட்டார். அவர் நினைவாக, இன்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள சிறைச்சாலை அவர் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Entertainment News

Popular Categories