அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் வீரர்! சுட்டுத் தூக்கிய இந்தியா! வீடியோ பதிவு.,!

Published:

pak 1 - 2026

காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தானின் எல்லை அதிரடிப் படை வீரர்கள் ஊடுருவலை இந்திய ராணுவம் கையெறி குண்டு வீசி முறியடித்துள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ செப்டம்பர் 12 மற்றும் 13ம் தேதிக்கு இடைப்பட்ட நேரத்தில் நள்ளிரவில் எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பார்டர் அதிரடி பணி (பிஏடி) போஜின் ஹாஜிபூர் செக்டாரில் ஊடுருவ முயற்சித்தபோது, இந்திய ராணுவம் கையெறி குண்டு பயன்படுத்தி ஊடுருவல் முயற்சியை முறியடித்தது. இந்த தாக்குதலில் ஊடுருவல்காரர் கொல்லப்பட்டார்.

ஆகஸ்ட் மாதத்தில், பாகிஸ்தான் தரப்பு, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் 15 முறை ஊடுருவ முயன்றது, ஆனால் இந்திய ராணுவம் அதை முறியடித்தது. ஆகஸ்ட் 4 ம் தேதி, இந்திய ராணுவம் ஐந்து முதல் ஏழு பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றது.

அதே நேரத்தில் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் கெரான் செக்டாரில் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் பேட் தாக்குதலை நடத்த முற்பட்டது.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

பாகிஸ்தான் ராணுவம், செய்யும் அனைத்து முயற்சிகளையும், இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது.

Related articles

Recent articles

spot_img