February 21, 2026, 3:10 PM
30.4 C
Chennai

லண்டனுக்குப் பின்… ஹூஸ்டனில் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த… பாகிஸ்தான் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் திட்டம்!

khalistan protesters in houston - 2026

பிரதமர் நரேந்திர மோடி பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘ஹவுடி, மோடி’ நிகழ்ச்சிக்காக செப்டம்பர் 22 ஆம் தேதி ஹூஸ்டனுக்கு வருகிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பை வாழ்த்த ஆயிரக்கணக்கான இந்திய அமெரிக்கர்கள் அணிவகுத்து வருவதால், காலிஸ்தான் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களையும் பிற இந்திய விரோத சக்திகளையும் திரட்டி, மாநாட்டு அரங்கிற்கு அருகில் காலிஸ்தான் சார்பு போராட்டங்களை நடத்தி நிகழ்வை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாத அரசு கடுமையாக முயன்று வருகிறது. .

கடந்த மாதம் லண்டனில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளைப் போல், ‘ஹவுடி, மோடி’ நிகழ்ச்சியை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாத அரசு தற்போது காலிஸ்தானிய பயங்கரவாத அனுதாபிகள் மற்றும் பாகிஸ்தான் சார்பு அமைப்புகளின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து காய் நகர்த்தி வருகிறது.

சுஹாக் ஏ. சுக்லா @SuhagAShukla என்பவர் தனது டிவிட்டர் பதிவில்…  முகமூடி கிழிந்துவிட்டது! #லண்டன் வன்முறைபோல், @நரேந்திரமோடி உரையின் போது #காலிஸ்தான் மற்றும் #பாகிஸ்தான் குழுக்களின் அதே கூட்டணி ஹூஸ்டனை குறிவைக்கிறது. @houstonpolice @SylvesterTurner எச்சரிக்கையாக இருங்கள். ஆயத்தமாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்..

செப்டம்பர் 14 அன்று, காலிஸ்தான் குழுக்களால் ஒரு டிரக்-பேரணி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது! இந்தப் பேரணியில் பாகிஸ்தான் சார்பு அனுதாபிகள் தங்கள் டிரக்குகள், கொடிகள் அலங்கரித்த லாரிகளுடன் வடமேற்கு ஹூஸ்டனில் உள்ள சீக்கிய தேசிய மையத்திலிருந்து என்.ஆர்.ஜி மையத்திற்கு ஓட்டிச் சென்றனர். அங்கு “ஹவுடி, மோடி” நிகழ்வின் போது இது போல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உடன் கைகோத்து, செப்டம்பர் 22 அன்று இந்த நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்திய அரசாங்கத்திற்கு எதிரான தவறான பிரசாரங்களைத் தடுக்க நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அருகே பாகிஸ்தான் நிதியுதவி அளித்து திரட்டுகின்ற போலி ஆர்ப்பாட்டக்காரர்களால் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படக்கூடும்.

ருத்ரா @Rudra91581572 என்பவரின் டிவிட்டர் பதிவில்…  @PMOIndia @narendramodi உங்கள் ஹூஸ்டன் பயணத்தின் போது ஒரு சில காலிஸ்தானிய சீக்கியர்கள் ஒரு போராட்டத்துக்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தயவுசெய்து அமெரிக்க சகாக்களுக்கு தெரிவித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

https://twitter.com/Rudra91581572/status/1173653688222724097

பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேச நியூயார்க் செல்வதற்கு முன்பு ஹூஸ்டனுக்கு வருகிறார். ஒரு மெகா நிகழ்வு இங்கே திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றுவார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஹூஸ்டனில் பிரதமர் மோடியுடனான “ஹவுடி, மோடி! பகிரப்பட்ட கனவுகள், பிரகாசமான எதிர்காலங்கள் ”மெகா நிகழ்வில் பங்கேற்கிறார்.

ஹூஸ்டனில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ள நிகழ்வான ‘ஹவுடி, மோடி’க்கு 50,000 க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஹவுடி நிகழ்வு வட அமெரிக்காவில் ஒரு இந்தியப் பிரதமர் உரையாற்றும் மிகப் பெரிய நிகழ்வாகவும், போப் பிரான்சிஸைத் தவிர அமெரிக்காவில் ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கான மிகப்பெரிய நிகழ்வாகவும் இருக்கும்.

ஹவுடி மோடி நிகழ்வு பிரதமர் மோடியின் இந்திய-அமெரிக்க சமூகத்தின் 2014 ஆம் ஆண்டில் பிரதமரான பின்னர் மூன்றாவது முக்கிய உரையாகவும், மே மாதம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் நிகழ்வாகவும் இருக்கும்.

முந்தைய இரண்டு நிகழ்வுகள் 2014 இல் நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனிலும், 2016 இல் சிலிக்கான் பள்ளத்தாக்கிலும் இருந்தன. இரண்டு நிகழ்வுகளிலும் 20,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

london embassy 1 - 2026

உலக அளவில் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் அவமானப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் தனது அரசு ஸ்பான்சர் செய்யும் பயங்கரவாதக் கொள்கையை அம்பலப்படுத்தியதற்காக இந்தியாவுக்கு எதிராக பழிவாங்குவதற்கான காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது. பாகிஸ்தான் இவ்வாறு செயல்படுவது இது முதல் முறை அல்ல.

கடந்த மாதம், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு லண்டனில் உள்ள காலிஸ்தானி குண்டர்கள் மற்றும் பாக்கிஸ்தானிய குடியேறிகள் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தினர். பாக்கிஸ்தான் நிதியுதவி பெற்ற குண்டர்கள், காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்வதை எதிர்த்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஜிஹாதிகளுக்கே உரிய சிறப்பு அம்சமான கல் வீச்சை நடத்தினர்.

london embassy 1a - 2026

தொடர்ந்து செப்டம்பர் 3 ஆம் தேதி மற்றொரு தாக்குதலாக, பிரிட்டிஷ் வாழ் பாகிஸ்தானியர்கள், பாகிஸ்தான் ஆதரவு காலிஸ்தானியர்கள் மற்றும் சில கூலி குண்டர்கள் 10,000 பேர் லண்டனில் அணிவகுத்து ‘காஷ்மீர்’ சுதந்திர பேரணி’ என காஷ்மீர் பற்றி கவலைப்படுவதாக நடித்து வன்முறைத் தாக்குதலை நடத்தினர். அவர்களால் ஜன்னல்கள் மற்றும் ஜன்னல் பலகைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் கட்டிடம் சேதமடைந்தது. கட்டத்தைச் சுற்றி குப்பைகள் சேர்ந்தன. இதை பிரிட்டன் வாழ் இந்திய சமூகம் அணி திரண்டு, தங்கள் கைகளில் தூய்மைப் படுத்துவதற்கான பொருள்களுடன் களம் இறங்கி, தூதரகத்தைத் தூய்மைப் படுத்தினர்.

இதன் மூலம், பாகிஸ்தானிய பயங்கரவாத அறிவு மூளையில் ஏறிய சமூகம் கல்லெறிதலையும், வன்முறையையும் மட்டுமே மேற்கொள்ளும் என்றும், அமைதியை விரும்பும் ஆக்கபூர்வமான இந்திய சமூகம் தங்கள் தூய்மைப் பணியை தாங்களே செய்ய களம் இறங்கும் என்றும் உலகுக்குக் காட்டியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories