December 6, 2025, 3:24 AM
24.9 C
Chennai

உச்ச நீதிமன்றத்துக்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக நியமனம்

v Ramasubramanian judge in Telangana HC and Himachal Pradesh HC - 2025

உச்ச நீதிமன்றத்திற்கு கிருஷ்ண முராரி, ரவீந்திர பட், தமிழகத்தை சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

புதன்கிழமை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவீந்திர பட், இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி ராமசுப்பிரமணியன் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிருஷிகேஷ் ராய் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

4 நீதிபதிகள் நியமனங்களை அடுத்து, உச்ச நீதிமன்றம் 34 நீதிபதிகள் கொண்டமுழு பலத்துக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) சட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட பலம் இந்திய தலைமை நீதிபதியைத் தவிர 30 முதல் 33 ஆக உயர்த்தப்பட்டது. நான்கு நீதிபதிகள் அடுத்த வாரத்திற்குள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலீஜியம் நான்கு நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்தது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அகில இந்திய பணி மூப்பு பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் நீதிபதி கிருஷ்ணா முராரி 2004 இல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2018 ஜூன் மாதம் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.

ramnath khovind - 2025

அகில இந்திய சீனியாரிட்டி பட்டியலில் 12 வது இடத்தில் இருக்கும் நீதிபதி ரவீந்திர பட் 2004 ல் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2018 மே மாதம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.

அகில இந்திய சீனியாரிட்டி பட்டியலில் 42 வது இடத்தில் இருக்கும் நீதிபதி ராமசுப்பிரமணியன் 2006ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஜூன் மாதம் இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார். முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆர் பானுமதி, மூத்தவர்கள் பட்டியலில் கவனிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் ராமசுப்பிரமணியனின் பதவி உயர்வுக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

supremecourt - 2025

அகில இந்திய சீனியாரிட்டி பட்டியலில் 46 வது இடத்தில் இருக்கும் ஜஸ்டிஸ் ராய், 2006 இல் கௌஹாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, ஆகஸ்ட் 2018 இல் கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வரும் நவம்பரில் ஓய்வு பெறுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories