உச்ச நீதிமன்றத்துக்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக நியமனம்

v Ramasubramanian judge in Telangana HC and Himachal Pradesh HC - 2026

உச்ச நீதிமன்றத்திற்கு கிருஷ்ண முராரி, ரவீந்திர பட், தமிழகத்தை சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

புதன்கிழமை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவீந்திர பட், இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி ராமசுப்பிரமணியன் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிருஷிகேஷ் ராய் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

4 நீதிபதிகள் நியமனங்களை அடுத்து, உச்ச நீதிமன்றம் 34 நீதிபதிகள் கொண்டமுழு பலத்துக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) சட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட பலம் இந்திய தலைமை நீதிபதியைத் தவிர 30 முதல் 33 ஆக உயர்த்தப்பட்டது. நான்கு நீதிபதிகள் அடுத்த வாரத்திற்குள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

ஆகஸ்ட் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலீஜியம் நான்கு நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்தது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அகில இந்திய பணி மூப்பு பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் நீதிபதி கிருஷ்ணா முராரி 2004 இல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2018 ஜூன் மாதம் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.

ramnath khovind - 2026

அகில இந்திய சீனியாரிட்டி பட்டியலில் 12 வது இடத்தில் இருக்கும் நீதிபதி ரவீந்திர பட் 2004 ல் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2018 மே மாதம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.

அகில இந்திய சீனியாரிட்டி பட்டியலில் 42 வது இடத்தில் இருக்கும் நீதிபதி ராமசுப்பிரமணியன் 2006ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஜூன் மாதம் இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார். முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆர் பானுமதி, மூத்தவர்கள் பட்டியலில் கவனிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் ராமசுப்பிரமணியனின் பதவி உயர்வுக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!
supremecourt - 2026

அகில இந்திய சீனியாரிட்டி பட்டியலில் 46 வது இடத்தில் இருக்கும் ஜஸ்டிஸ் ராய், 2006 இல் கௌஹாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, ஆகஸ்ட் 2018 இல் கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வரும் நவம்பரில் ஓய்வு பெறுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories