December 6, 2025, 4:58 AM
24.9 C
Chennai

“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று

“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று.

(பசியோடிருந்த பணியாளர்கள் காச்மூச்சென்று கத்தினார்கள். என்ன பலன்? தோசை வரப்போறதா என்ன? உஷ்ணத்தை தணிக்கவே எல்லாருக்கும் நிறைய மோர் கடைந்து குடுத்தார் வேதபுரி………உப்பு போடாமல்! ஏகாதசி உபவாசம், த்வாதசி பாரணை செய்தால் மகத்தான புண்ணியம்! சிஷ்யர்களுக்கும் அந்த புண்ணியம் கிடைத்தது!)

2011 நவம்பர் போஸ்ட்-மறு பதிவு

ஏகாதசியன்று பெரியவா நிர்ஜல உபவாசம். ஆனால் தொண்டு செய்யும் சிஷ்யர்களார் அவ்வளவு கட்டுப்பாடாக இருக்க முடியுமா? “கொலை பட்டினியாக” இல்லாமல், பலகாரம் சாப்பிடுவார்கள் [முழு பட்டினியாக ஓரிரு சிஷ்யர்கள் இருப்பார்கள்]

ஸ்ரீ மடத்தில் பலகாரம் என்றால், அரிசி உப்புமாதான் [இது ரொம்ப பிரசித்தம்] இட்லி, தோசை, அடை,பூரி என்று எதுவும் செய்வது கிடையாது.

ஒரு ஏகாதசி, சிஷ்யர்களுக்கு அடை சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை. தேவையான சாமான்களை சேகரித்து, மாவு அரைத்து தயாராக வைத்து விட்டார்கள். பிற்பகல் ஒரு மணி, அடுப்படியில் சுமார் 50 அடைகளை வார்த்து வைத்து விட்டார். எல்லாருக்கும் பசி. நாக்கை சப்பு கொட்டிக்கொண்டு அடை பலகாரத்துக்கு உட்கார்ந்தார்கள்.

ஒருவர் இலையை எடுத்து போட்டுக் கொண்டிருந்தபோது, உத்தரவு வந்தது…”பெரியவா எல்லாரையும் வர சொல்றா”

அடுத்த நிமிஷம் அத்தனை பெரும் பெரியவா எதிரில். “விஷ்ணு சஹஸ்ரநாமம் எல்லோரும் ரெண்டு தடவை சொல்லுங்கோ”

ஒரு வழியாக சஹஸ்ரநாம பாராயணத்தை முடித்து கொண்டு, அடை த்யானத்துடன், சமையல்கட்டுக்கு ஓடினார்கள்.ஆனால் ……அந்தோ! பரிதாபம்!  ஒரு அடை கூட காணப்படவில்லை

. “என்னடா ஆச்சு?”

“என்ன ஆச்சா? இன்னான் [பெயர் இல்லை] வந்து சாப்பிட்டானாம்! மீதியை ராத்ரிக்காக கட்டிண்டு போயிட்டானாம்!!!”

காட்டு இரைச்சல். ஆனால் என்ன செய்ய? அடை நடை பயணமாக எங்கேயோ போய்டுத்து

ஏகாதசியன்று நிஜமான உபவாசம் சிஷ்யர்களுக்கும்!

இன்னொருமுறை சின்ன கிராமத்தில் முகாம்.

ஏகாதசி. தோசை பலகாரத்துக்கு பக்காவாக ஏற்பாடு செய்திருந்தார்கள். மத்யான்னம், டூரிஸ்ட் பஸ்ஸில் பக்தர்கள் தரிசனத்துக்காக வந்தார்கள்.

பெரியவா, சமையல்கட்டில் சேவை செய்த வேதபுரியை கூப்பிட்டு, எல்லாருக்கும் பலகாரம் பண்ண சொன்னார். வேதபுரி வார்த்து வைத்திருந்த தோசைகளை போட்டு, பஸ் கும்பலை திருப்தி பண்ணி விட்டார். [தனியா உப்புமா செய்து போட வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு வரலியாம்!!]

பசியோடிருந்த பணியாளர்கள் காச்மூச்சென்று கத்தினார்கள். என்ன பலன்? தோசை வரப்போறதா என்ன? உஷ்ணத்தை தணிக்கவே எல்லாருக்கும் நிறைய மோர் கடைந்து குடுத்தார் வேதபுரி………உப்பு போடாமல்!

ஏகாதசி உபவாசம், த்வாதசி பாரணை செய்தால் மகத்தான புண்ணியம்! சிஷ்யர்களுக்கும் அந்த புண்ணியம் கிடைத்தது!

தெய்வ சங்கல்பம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories