“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று

“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று.

(பசியோடிருந்த பணியாளர்கள் காச்மூச்சென்று கத்தினார்கள். என்ன பலன்? தோசை வரப்போறதா என்ன? உஷ்ணத்தை தணிக்கவே எல்லாருக்கும் நிறைய மோர் கடைந்து குடுத்தார் வேதபுரி………உப்பு போடாமல்! ஏகாதசி உபவாசம், த்வாதசி பாரணை செய்தால் மகத்தான புண்ணியம்! சிஷ்யர்களுக்கும் அந்த புண்ணியம் கிடைத்தது!)

2011 நவம்பர் போஸ்ட்-மறு பதிவு

ஏகாதசியன்று பெரியவா நிர்ஜல உபவாசம். ஆனால் தொண்டு செய்யும் சிஷ்யர்களார் அவ்வளவு கட்டுப்பாடாக இருக்க முடியுமா? “கொலை பட்டினியாக” இல்லாமல், பலகாரம் சாப்பிடுவார்கள் [முழு பட்டினியாக ஓரிரு சிஷ்யர்கள் இருப்பார்கள்]

ஸ்ரீ மடத்தில் பலகாரம் என்றால், அரிசி உப்புமாதான் [இது ரொம்ப பிரசித்தம்] இட்லி, தோசை, அடை,பூரி என்று எதுவும் செய்வது கிடையாது.

ஒரு ஏகாதசி, சிஷ்யர்களுக்கு அடை சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை. தேவையான சாமான்களை சேகரித்து, மாவு அரைத்து தயாராக வைத்து விட்டார்கள். பிற்பகல் ஒரு மணி, அடுப்படியில் சுமார் 50 அடைகளை வார்த்து வைத்து விட்டார். எல்லாருக்கும் பசி. நாக்கை சப்பு கொட்டிக்கொண்டு அடை பலகாரத்துக்கு உட்கார்ந்தார்கள்.

ஒருவர் இலையை எடுத்து போட்டுக் கொண்டிருந்தபோது, உத்தரவு வந்தது…”பெரியவா எல்லாரையும் வர சொல்றா”

அடுத்த நிமிஷம் அத்தனை பெரும் பெரியவா எதிரில். “விஷ்ணு சஹஸ்ரநாமம் எல்லோரும் ரெண்டு தடவை சொல்லுங்கோ”

ஒரு வழியாக சஹஸ்ரநாம பாராயணத்தை முடித்து கொண்டு, அடை த்யானத்துடன், சமையல்கட்டுக்கு ஓடினார்கள்.ஆனால் ……அந்தோ! பரிதாபம்!  ஒரு அடை கூட காணப்படவில்லை

. “என்னடா ஆச்சு?”

“என்ன ஆச்சா? இன்னான் [பெயர் இல்லை] வந்து சாப்பிட்டானாம்! மீதியை ராத்ரிக்காக கட்டிண்டு போயிட்டானாம்!!!”

காட்டு இரைச்சல். ஆனால் என்ன செய்ய? அடை நடை பயணமாக எங்கேயோ போய்டுத்து

ஏகாதசியன்று நிஜமான உபவாசம் சிஷ்யர்களுக்கும்!

இன்னொருமுறை சின்ன கிராமத்தில் முகாம்.

ஏகாதசி. தோசை பலகாரத்துக்கு பக்காவாக ஏற்பாடு செய்திருந்தார்கள். மத்யான்னம், டூரிஸ்ட் பஸ்ஸில் பக்தர்கள் தரிசனத்துக்காக வந்தார்கள்.

பெரியவா, சமையல்கட்டில் சேவை செய்த வேதபுரியை கூப்பிட்டு, எல்லாருக்கும் பலகாரம் பண்ண சொன்னார். வேதபுரி வார்த்து வைத்திருந்த தோசைகளை போட்டு, பஸ் கும்பலை திருப்தி பண்ணி விட்டார். [தனியா உப்புமா செய்து போட வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு வரலியாம்!!]

பசியோடிருந்த பணியாளர்கள் காச்மூச்சென்று கத்தினார்கள். என்ன பலன்? தோசை வரப்போறதா என்ன? உஷ்ணத்தை தணிக்கவே எல்லாருக்கும் நிறைய மோர் கடைந்து குடுத்தார் வேதபுரி………உப்பு போடாமல்!

ஏகாதசி உபவாசம், த்வாதசி பாரணை செய்தால் மகத்தான புண்ணியம்! சிஷ்யர்களுக்கும் அந்த புண்ணியம் கிடைத்தது!

தெய்வ சங்கல்பம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories