February 22, 2026, 5:58 AM
25.4 C
Chennai

குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்!

ucobank karur - 2026

வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வீட்டுக்கடன், வாகனக் கடன்களுக்கு குறைந்த வட்டியும், சிறுகுறு தொழில் புரிபவர்களுக்கு வட்டி மானியத்துடன் கூடிய கடன்களும் யூகோ வங்கியில் வழங்கப்பட்டு வருவதாக கரூரில் யூகோ (UCO) வங்கியின் மண்டல மேலாளர் செல்வி சி.ஏ.நாகரத்னா செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.

கரூர் யூகோ வங்கியின் டவுன் ஹால் மீட்டிங் நிகழ்ச்சி கரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு யூகோ வங்கியின் கோவை மண்டல மேலாளர் செல்வி சி.ஏ.நாகரத்னா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் வங்கியின் முதுநிலை மேலாளர் பி.இருசப்பராஜா, திருப்பூர் யூகோ வங்கி முதுநிலை மேலாளர் சதீஸ்குமார், கரூர் யூகோ வங்கி மேலாளர் எம்.கனகராஜ் உள்ளிட்டோரும், கரூர் நகரின் வங்கி கிளையின் வாடிக்கையாளர்களும், டெக்ஸ்டைல் நிறுவன ஏற்றுமதியாளர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு, பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து யூகோ வங்கியின் கோவை மண்டல மேலாளர் செல்வி சி.ஏ.நாகரத்னா செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்களது வங்கி 76 வருடங்களாக இயங்கி வருவதாகவும், 1943 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி இந்தியாவில் மட்டும் 3086 கிளைகள் கொண்டதாகவும், சிங்கப்பூர், ஹாங்காங், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கிளைகளை பிரத்யோகமாக கொண்டது என்றும் கூறினார்.

மேலும், ஏற்றுமதியாளர்களுக்கு அரசு கொடுக்கும் 5 சதவிகித வட்டி மானியத்தை எங்களது வங்கி வழங்கி வருகிறது என்றும், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வீட்டுக்கடன் மற்றும் வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுவதாகவும் கூறினார்,

இதே போல, விவசாய மக்களுக்கு குறுகிய கால பயிர்க் கடன்களும், சிறுகுறு தொழில்முனைவோருக்கு வட்டி மானியத்துடன் கடன் வழங்கப்படுகின்றது என்றும் தெரிவித்த செல்வி சி.ஏ.நாகரத்னா., தமிழகத்தில் மட்டும் இரண்டு மண்டலங்களைக் கொண்ட இந்த வங்கி, சென்னை, கோவை ஆகிய மண்டலங்களாக பிரித்து, அதில் சென்னையில் 72 வங்கி கிளைகளும், கோவையில் 60 வங்கி கிளைகளும் கொண்டு தமிழகத்தில் இயங்குவதாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, திருப்பூர் வங்கி கிளையின் முதுநிலை மேலாளர் சதீஸ்குமார், கரூர் வங்கி கிளையின் முதுநிலைமேலாளர் இருசப்பராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories