டயருக்கு அடியில் எலுமிச்சம் பழம், தேங்காய், சந்தனப் பொட்டு… ரஃபேலுக்கு ராஜ்நாத்தின் சஸ்த்ர பூஜை!

rajnathsingh1 - 2026

பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு, டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது. ரஃபேல் விமானத்தின் மீது தேங்காய் வைத்து, முன்பகுதியில் ஓம் என்று இந்தியில் எழுதினார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.

ரஃபேல் விமானத்தின் செயல்பாடுகளைக் காண ஆர்வமாக உள்ளேன். இந்தியா – பிரான்ஸ் உறவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம். இரு முக்கிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்… என்று அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.

rafale sastrapooja - 2026

பிரான்ஸ் நாட்டின் போர்டோவில் இந்திய விமானப் படைக்காக வாங்க உள்ள 36 விமானங்களில் முதல் ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங். டஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் ரூ.59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களில் வாங்க 2016இல் ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது.

rafale sastrapooja4 - 2026

ரபேல் விமானத்தை பிரான்சிடமிருந்து பெற்ற ராஜ்நாத் சிங், விமானத்திற்கு பொட்டு, பூ வைத்து ‘சஸ்த்ர பூஜை செய்தார். பின் ரபேலில் ஏறிப் பறந்தார்.
இந்திய விமானப்படைக்கு வாங்கப்பட உள்ள 36 ரபேல் போர் விமானங்களில், முதல் விமானத்தை, பிரான்ஸ் சென்றுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பெற்றுக் கொண்டார்.

rafale sastrapooja3 - 2026

ரபேல் விமானத்திற்கு சந்தன பொட்டு வைத்து, முன் பகுதியில் தேங்காய், பூக்கள் வைத்து, ஓம் என்று ஹிந்தியில் ராஜ்நாத் சிங் எழுதினார். ரபேல் விமானத்துக்கு கயிறு கட்டிய பின், டயருக்கு அடியில் எலுமிச்சம் பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது.

rafale sastrapooja2 - 2026

இதனைத் தொடர்ந்து உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து, இந்தியாவின் முதல் ரபேல் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பறந்தார்.

பின் செய்தியாளர்களிடம் ராஜ்நாத்சிங் கூறியபோது… நான் சூப்பர்சோனிக் விமானத்தில் பறப்பேன் என நினைத்ததில்லை. விமானத்தில் பயணிப்பது வசதியாகவும், மென்மையாகவும் இருந்தது. … என்றார்.

rafale sastrapooja1 - 2026

முன்னதாக, அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்த ராஜ்நாத் பின்னர், ரபேல் போர் விமானங்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைக்கு சென்றார். அவரை டசால்ட் நிறுவன சிஇஓ எரிக் டிராப்பியர் வரவேற்றார். தொடர்ந்து ராஜ்நாத் சிங் தொழிற்சாலையை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர், இந்திய விமானப்படை மூத்த அதிகாரிகள், பிரான்ஸ் உயர் அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.

இந்த விமானத்திற்கு ‘RB001 ‘ என விமானப்படை தளபதி பெயர் சூட்டியுள்ளார்.

rafale sastrapooja5 - 2026
பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் #ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

இந்த விழாவில் பேசிய ராஜ்நாத் சிங்… வரலாற்றில் முக்கியமான நாள் இது. இந்தியா – பிரான்ஸ் உறவு சிறப்பானது. இந்த உறவு இன்னும் வலுப்பெறும். குறிப்பிட்ட காலத்தில் ரபேல் விமானங்கள் தயாரிக்கப் பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ரபேலில் பறப்பது பெருமை அளிக்கிறது. இந்த விமானங்கள், இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்கும். வான்வெளியில் இந்தியாவின் ஆதிக்கத்தை வலுப்படுத்தும். பிரான்ஸ் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

rajnathsingh2 - 2026

இந்திய விமானப்படை வீரர்களுக்கு பிரான்சில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது… என்றார்.

முதல்கட்டமாக 4 போர் விமானங்கள் 2020ம் ஆண்டு மே மாதம் இறுதியில் இந்தியா வர உள்ளன. இந்த விமானங்கள், ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளதாம் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories