சென்னை: மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கி பரிவர்தனைகளை வரும் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் இரவு 8 மணி வரை பணி நேரத்தை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றிக்கையின் அடிப்படையில் இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்தி: நிகழ் நிதியாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலையடுத்து, மார்ச் 30,31-ஆம் தேதிகளில் இந்தியன் வங்கி மூலம் நடைபெறும் மத்திய, மாநில அரசுகளின் பணப் பரிவர்த்தனைகள் இரவு 8 மணி வரை நடைபெறும். மேலும், மின்னணு பணப் பரிவர்தனைகளும் மார்ச் 31-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடர்ந்து செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை நாள்கள் விடுமுறை தேசியமாக்கப்பட்ட வங்கிகள் மார்ச் 30-ஆம் தேதி (திங்கள்கிழமை), நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31-ஆம் தேதியும் (செவ்வாய்க்கிழமை) வழக்கம்போல் செயல்படும். மேலும், ஏப்ரல் 1- அடுத்த நிதியாண்டின் முதல் நாள், ஏப்ரல் 2- மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3- புனித வெள்ளி ஆகிய 3 நாள்கள் மட்டுமே தொடர் விடுமுறையாகும். அந்த மூன்று நாள்களும் வங்கிச் சேவை இருக்காது. ஏ.டி.எம். மூலம் வங்கிச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்பின்னர் ஏப்ரல் 4-ஆம் தேதி சனிக்கிழமையன்று வங்கிகள் வழக்கம்போல் மதியம் வரை செயல்படும். மாதத் தொடக்கத்தில் வங்கிகளுக்கு 3 நாள்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் மாதச் சம்பளம் பெறுபவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, ஏ.டி.எம். இயந்திரங்களில் அதிக பணத்தை நிரப்ப வங்கிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்காக மார்ச் 30, 31-இல் இரவு 8 மணி வரை வங்கி நேரம் நீட்டிப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

