சென்னை: மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கி பரிவர்தனைகளை வரும் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் இரவு 8 மணி வரை பணி நேரத்தை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றிக்கையின் அடிப்படையில் இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்தி: நிகழ் நிதியாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலையடுத்து, மார்ச் 30,31-ஆம் தேதிகளில் இந்தியன் வங்கி மூலம் நடைபெறும் மத்திய, மாநில அரசுகளின் பணப் பரிவர்த்தனைகள் இரவு 8 மணி வரை நடைபெறும். மேலும், மின்னணு பணப் பரிவர்தனைகளும் மார்ச் 31-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடர்ந்து செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை நாள்கள் விடுமுறை தேசியமாக்கப்பட்ட வங்கிகள் மார்ச் 30-ஆம் தேதி (திங்கள்கிழமை), நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31-ஆம் தேதியும் (செவ்வாய்க்கிழமை) வழக்கம்போல் செயல்படும். மேலும், ஏப்ரல் 1- அடுத்த நிதியாண்டின் முதல் நாள், ஏப்ரல் 2- மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3- புனித வெள்ளி ஆகிய 3 நாள்கள் மட்டுமே தொடர் விடுமுறையாகும். அந்த மூன்று நாள்களும் வங்கிச் சேவை இருக்காது. ஏ.டி.எம். மூலம் வங்கிச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்பின்னர் ஏப்ரல் 4-ஆம் தேதி சனிக்கிழமையன்று வங்கிகள் வழக்கம்போல் மதியம் வரை செயல்படும். மாதத் தொடக்கத்தில் வங்கிகளுக்கு 3 நாள்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் மாதச் சம்பளம் பெறுபவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, ஏ.டி.எம். இயந்திரங்களில் அதிக பணத்தை நிரப்ப வங்கிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்காக மார்ச் 30, 31-இல் இரவு 8 மணி வரை வங்கி நேரம் நீட்டிப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari