January 25, 2025, 9:44 PM
25.3 C
Chennai

அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்காக மார்ச் 30, 31-இல் இரவு 8 மணி வரை வங்கி நேரம் நீட்டிப்பு

சென்னை: மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கி பரிவர்தனைகளை வரும் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் இரவு 8 மணி வரை பணி நேரத்தை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றிக்கையின் அடிப்படையில் இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்தி: நிகழ் நிதியாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலையடுத்து, மார்ச் 30,31-ஆம் தேதிகளில் இந்தியன் வங்கி மூலம் நடைபெறும் மத்திய, மாநில அரசுகளின் பணப் பரிவர்த்தனைகள் இரவு 8 மணி வரை நடைபெறும். மேலும், மின்னணு பணப் பரிவர்தனைகளும் மார்ச் 31-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடர்ந்து செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை நாள்கள் விடுமுறை தேசியமாக்கப்பட்ட வங்கிகள் மார்ச் 30-ஆம் தேதி (திங்கள்கிழமை), நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31-ஆம் தேதியும் (செவ்வாய்க்கிழமை) வழக்கம்போல் செயல்படும். மேலும், ஏப்ரல் 1- அடுத்த நிதியாண்டின் முதல் நாள், ஏப்ரல் 2- மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3- புனித வெள்ளி ஆகிய 3 நாள்கள் மட்டுமே தொடர் விடுமுறையாகும். அந்த மூன்று நாள்களும் வங்கிச் சேவை இருக்காது. ஏ.டி.எம். மூலம் வங்கிச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்பின்னர் ஏப்ரல் 4-ஆம் தேதி சனிக்கிழமையன்று வங்கிகள் வழக்கம்போல் மதியம் வரை செயல்படும். மாதத் தொடக்கத்தில் வங்கிகளுக்கு 3 நாள்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் மாதச் சம்பளம் பெறுபவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, ஏ.டி.எம். இயந்திரங்களில் அதிக பணத்தை நிரப்ப வங்கிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ALSO READ:  கும்பமேளா செல்ஃபி, அரசியலமைப்பு 75ம் ஆண்டு... மனதின் குரலில் பிரதமர் மோடி!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.